Aug 26, 2011

இனப்படுகொலை விவகாரம்: அமெரிக்கத்தூதர் இலங்கை பயணம்!

August 27, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் சம்பந்தமாக ஐ.நா.சபை நடத்தவிருக்கும் கூட்டத்தை முன்னிட்டு, அடுத்த வாரம் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்கத்தூதர் ராபர்ட் பிளேக் இலங்கைக்கு
வரவிருக்கிறார்.

அப்போது அவர் அரசு உயர் அதிகாரிகளிடம் பேசவிருப்பதாகவும் இலங்கையைச் சேர்ந்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.  மேலும், இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இலங்கைப் போரின் போது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படு கொலைகள் பற்றியும் பேச இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



போர் குற்றங்கள் குறித்து பேச அமெரிக்க தூதர் ராபர்ட் இலங்கை வருவது இது இரண்டாவது முறை என்றும் இலங்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.  இதற்கிடையே, வரும் செப்டம்பர் மாதம் நடககவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகவுன்சில் மாநாட்டில் பங்கேற்பதை இலங்கை தவிர்த்து வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

4 comments:

Anonymous said...

Sinkala payangaravaatha thalaivargalukku thandanai kidaiththaal sari

Anonymous said...

Veen velai. Oru payanum yerppada poorathillai

Ravathi said...

Poruththirunthu paarkkalaam

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர்களே! அமெரிக்கா ஒன்றினால் மட்டுமெ நீதியையும் சமாதானத்தையும் உலகுக்கு கொண்டுவர முடியும்.