May 2, 2011

சீமான் உண்ணாவிரதம்!! புதுக்கோட்டையில் பதட்டம்!!

May 3, நாம் தமிழர் கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரனான சுபா. முத்துக்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

கொலையாளிகளை இதுவரை காவல்துறை பிடிக்கவில்லை. கொலையாளிகளை பிடிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி பல்வேறு போராட்டங்களை இதுவரை நடத்தியுள்ளது.

இந்த நிலையில் முத்துக்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட அதே இடத்தில் இன்று உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை பழைய பேருந்து நிலையம் அருகே இடம் ஒதுக்கி கொடுத்துள்ளனர்.

ஆனால் நாம் தமிழர் கட்சியினர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்ட இடத்தில்தான் உண்ணாவிரதம் இருப்போம் என்று தடையை மீற தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

கட்சியின் தலைவர் சீமான் வந்ததும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கவிருக்கின்றனர்.
இதனால் புதுக்கோட்டையில் பதட்டம் நிலவுகிறது. போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments: