May 2, 2011

கட்டி இழுத்துச்செல்லப்பட்ட ராஜபக்சே!

May 3, நார்வே தலைநகர் ஓசிலோவில், நடந்த மே தின ஊர்வலத்தில் தமிழர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இவர்கள் ராஜபக்சேவின் உருவச்சிலையை கூண்டில் ஏற்றி அதனைக் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர்.

மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்ட பல நார்வே நாட்டவர்கள் இதனைக் கண்டு ஆச்சரியப்பட்டதோடு, இலங்கை நிலவரத்தைக் கேட்டும் அறிந்துள்ளனர்.

பலர் இதனைப் புகைப்படம் எடுத்துள்ளனர். பெருந்திரளாக நார்வே மக்கள் கலந்துகொண்டு மே தின ஊர்வலத்தில் ராஜபக்சேவின் இவ்வுருவ பொம்மை பலரது கவனத்தை ஈர்ந்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்ற ராஜபக்சேவை, கூண்டில் ஏற்றவேண்டும் என்பதில் நார்வேத் தமிழர்கள் உறுதியோடு இருக்கிறார்கள் என்பதை இந்த ஊர்வலம் காட்டுகிறது.

No comments: