Apr 30, 2011

புரூலியா ஆயுத மழையும்!! நரசிம்மராவும்!! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!!

புதுடெல்லி: 1995-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி நள்ளிரவில் புரூலியா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் மீது விமானத்திலிருந்து ஆயுதங்கள் கொட்டப்பட்டன.

நூற்றுக் கணக்கான ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும், பல லட்சம் தோட்டாக்களும் இதில் இருந்தன. லாத்வியா நாட்டைச் சேர்ந்த விமானத்திலிருந்து இந்த ஆயுதங்கள் கொட்டப்பட்டதாக தெரிய வந்தது.

இந்திய எல்லையை விட்டு வெளியேறிய இந்த விமானம் சில நாள்கள் கழித்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற போது, இந்திய விமானப்படையினர் அந்த விமானத்தை மடக்கி மும்பையில் தரையிறங்க வைத்தனர்.

அதிலிருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் பிளீச், டென்மார்க்கைச் சேர்ந்த கிம் டேவி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

“ஆனந்த மார்க்கம்’ என்கிற அமைப்பு இதன் பின்னணியில் இருந்து செயல்பட்டதாகக் கூறப்பட்டது. எனினும், இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக தெளிவான தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

குற்றம்சாட்டவர்களில் சிலர் சுதந்திரமாக இருக்கின்றனர். சிலர் தலைமறைவாகிவிட்டனர்.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட கிம் டேவி தொலைக்காட்சி ஒன்றுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில், “இந்தப் பணியைச் செய்ததில் எம்.பி.ஒருவரே தங்களுக்கு உதவியாக இருந்ததாகவும், வேலை முடிந்ததும், அவரே தங்களை நேபாள எல்லையில் கொண்டுபோய் விட்டதாகவும்” கூறினார்.

மத்திய அரசு, இந்தியாவின் ரா உளவு அமைப்பு, பிரிட்டனின் எம்ஐ-5 உளவு அமைப்பு ஆகியவற்றுக்குத் தெரிந்தே இது நடந்ததாகவும், மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையிலான இடதுசாரி அரசுக்கு எதிராகப் போராடுவதற்காக மக்களுக்கு ஆயுதம் வழங்கவே விமானத்தில் இருந்து ஆயுதங்கள் போடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சிந்திக்கவும்: நரசிம்மராவ் இந்தியாவின் பிரதமராக இருக்கும் போதுதான் இந்த கொடூரம் நிகழ்ந்தது. சொந்த நாட்டில் ஜனநாயக அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோதிபாசுவின் அரசுக்கு எதிராக செய்யப்பட்ட சதி இது.

ஹிந்துத்துவா அமைப்பான "ஆனந்த மார்க்கம்" என்ற அமைப்புக்கு ஆயுதங்களை வெளிநாட்டு ஆயுத வியாபாரிகள் மூலம் விமானம் வழியாக போட வைத்தார்கள். எவ்வளவு? கேடு கெட்டவர்கள் இவர்கள். நாட்டை பாதுகாக்க வேண்டிய "ரா" உளவு அமைப்பும் இதற்க்கு உடந்தை. இது ஒரு கேடு கெட்ட உளவு அமைப்பு என்பதை மீண்டும் நிருபித்துள்ளது.

உலகிலேயே இது மாதிரி ஒரு கேடு கேட்ட அரசியல் மற்றும் உளவுத்துறையை கேள்வி பட்டிருபீர்களா? இந்திய மக்களை, தமிழர்களை இவர்கள் பாதுகாப்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள். இந்தியாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை ஹிந்துத்துவா இயக்கங்கள் நடத்தி இந்தியாவின் ஆட்சி கட்டிலை பிடிக்கலாம் என்று பார்த்தார்கள்.

1992 பாபர் மசூதி இடிக்க மறைமுகமான ஆதரவு கொடுத்த நரசிம்மராவ் பிற்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மறைமுக உறுப்பினர் என்பதை ஹிந்த்துதுவா தலைவர்களே சொல்ல கேட்டோம். நரசிம்மராவ் பாபர் மசூதியை இடித்து விட்டு ராமர்கோவில் கட்ட வேண்டும் என்ற எங்கள் எண்ணத்திற்கு ஆதரவு அளித்தார் என்று ஹிந்துத்துவா இயக்கங்கள் அவரை புகழ்ந்தன.

இந்தியாவின் கேடு கெட்ட பிரதமர்களில் இந்த நரசிம்மராவும் ஒருவர். இவர் பாபர் மசூதி இடிக்கப்படும் 1992 டிசம்பர் 6ஆம் தேதி தன்னை யாரும் தொடர்பு கொள்ள முடியாதபடி ஒளிந்து கொண்டார். ஒரு நாட்டின் பிரதமர் ஒரு நாள் முழுவதும் ஒளிந்து கொண்டு கண்ணாமுச்சி காட்டிய விஷயம் உலக வரலாற்றில் கேள்விபடாத ஒன்று.

இதே ஹிந்துத்துவா நரசிம்மராவ், மேற்கு வங்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர் முதல்வராக ஜோதிபாசு இருப்பது பிடிக்காமல் வெளிநாட்டு ஆயுத வியாபாரிகள் மூலம் ஹிந்துத்துவா அமைப்பான ஆனந்த மார்க்கம் என்ற அமைப்புக்கு ஆயுதங்களை வழங்கினார்.

இதன் மூலம் ஜோதிபாசு அரசுக்கு எதிராக ஹிந்து அடிப்படைவாதிகளை போராட வைத்து ஒரு உள்நாட்டு யூத்தத்தை நடத்தி ஆட்சியை கவிழ்த்து தாங்கள் ஆட்சியை பிடிக்கலாம் என்று திட்டம் தீட்டி இருக்கும் கொடுமையை என்ன வென்று சொல்வது.

தங்கள் சித்தாந்தத்திற்கு எதிரானவர்களை கலவரங்கள் மூலம் முற்றிலும் அழிப்பதே ஹிந்துத்வாவின் நோக்கம். அதன் ஒரு பகுதிதான் இந்த புருலியா ஆயுதமழை.
இந்த ஹிந்துத்துவா இயக்கங்கள் இந்தியாவில் இன்னும் என்ன? என்ன? செய்யபோகிறதோ.

No comments: