Dec 29, 2010

திருவண்ணாமலையில் நித்தியானந்தா பரபரப்பு செய்தி.

டிசம்பர் 30:நான் நிரபராதி, எந்தத் தவறும் செய்யாதவன் என்பதை கோர்ட்டில் நிரூபிப்பேன் என்று திருவண்ணாமலையில் முகாமிட்டுள்ள குஜால் சாமியார் நித்தியானந்தா கூறியுள்ளார். திருவண்ணாமலைக்கு தனது 34வது பிறந்த நாளையொட்டி வந்துள்ளார் ரஞ்சிதாவுடன் அந்தரங்க கோலத்தில் இருந்து சிக்கி, தலைமறைவாகி, கைதாகி, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள நித்தியானந்தா. நேற்று காலை அண்ணாமலையார் கோவிலுக்கு அவர் போன போது பெரும் திரளான மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டதால் தப்பித்தோம், பிழைத்தோம் என்று பின்வாசல் வழியாக ஓடிப் போனார் நித்தியானந்தா. இந்த நிலையில் நேற்று கிரிவலப்பாதையில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் ஜீவன் முக்த சமுதாயம் செய்வோம் என்ற பெயரில் ஒரு உரை நிகழ்த்தினார் நித்தியானந்தா.

2 comments:

Anonymous said...

nithyaananthaa thollai thaangala paa

Anonymous said...

yeppadi evan yellaam thirumba vanthu pessa arampiththu vittaan. yellam in tha kaiyaalaagatha arasugal pannum velai