Dec 1, 2010

காஞ்சி சங்கரமடம், சிறீரங்கம் கோவில்: ஒரு வரலாற்று பார்வை.

காஞ்சிபுரம் ஒரு காலத்தில் பவுத்தர்களின் கோட்டமாக விளங்கியது. கி.பி. 640 இல் காஞ்சிபுரத்திற்கு வந்த யுவான்சுவாங் என்ற சீன யாத்திரீகர் காஞ்சிபுரத்தில் நூறு பவுத்தப் பள்ளி களும், ஆயிரம் பிட்சுகளும் இருந்ததாகக் குறிப்பிட் டுள்ளார். காஞ்சிபுரத்தில் கச்சீஸ்வரர் எனும் பெயரில் உள்ள சிவன் கோயில் தொடக்கத்தில் புத்தர் கோயிலாக இருந்தது. இக்கோயிலின் முன் கோபுரத்து அஸ்திவாரக் கல் கட்டடத்தில் சில புத்த விக்கிரகங்கள் இருப்பதை இன்றும் காணலாம். காஞ்சி காமாட்சியம்மன் கோயில் ஒரு காலத்தில் பவுத்தரின் தாராதேவி ஆலயமாகும்.

பிற்காலத்தில் இவை எல்லாம் அடிச்சுவடு தெரியாமல் ஆரிய சதிகாரர்களால் அழிக்கப்பட்டு விட்டன என்பது தான் வரலாறு. மேலும் தகவல் அறிய விரும்புவோர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூலான பவுத்தமும் தமிழும் என்ற நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.பவுத்தத்தை அழித்து ஆரியம் குடி கொண்ட ஆரிய பிராமணர்களின் வெறிச்சின்னம் தான் காஞ்சி சங்கரமடமாகும்.

அதுமட்டும் அல்ல சிறீரங்கம் கோயிலும் ஒரு காலத்தில் பவுத்தக் கோயிலாகவே இருந்திருக்கின்றது என்று ஆதாரங்கள் பேசுகின்றன. நாகைப்பட்டினத்தில் இருந்த அய்ம் பொன்னாலான பவுத்த சிலையைத் திருடிக் கொண்டு வந்து சிறீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு மதில்சுவர் எழுப்பினான் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார்.(ஆதாரம் : தஞ்சைவாணன் கோவை).

சிந்திக்க; இப்படி பவுத்த கோவில்களை இடித்து இந்த வந்தேறி பிராமணர்கள் ஹிந்து கோவில்களை கட்டி இருகிறார்கள். ஹிந்து மதம் என்பது இந்த ஆரிய வந்தேறி கூட்டத்தால் உருவாக்கப்பட்டது. இவர்கள் மக்களை மதத்தை சொல்லி மூடநம்பிக்கைகளை சொல்லி, சில மேஜிக் வித்தைகளை காட்டி ஏமாற்றி, மத மாட்ச்சாரியங்கள் பேசி வர்ணாசிரம கொள்கைகள் மூலம் மக்களை பிளந்து, சிறு கூட்டமான இவர்கள் இந்தியாவின் எல்லா உயர் பீடங்களிலும் வீற்றிருகிரார்கள். என்று இவர்கள் சூழ்ச்சி முரியடிக்கபடுமோ அன்றுதான் இந்தியா ஒளிரமுடியும்.

No comments: