Nov 12, 2010

புலிகள் அமைப்புக்கு தடை நீட்டிப்பு: தீவிரவாதி ராஜபக்சே கைகூலிகள் முடிவு.

புது தில்லி, நவ.12: விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்திருந்த மத்திய அரசின் அறிவிக்கையை உறுதி செய்தது சிறப்புத் தீர்ப்பாயம்.மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மே 14-ம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கு தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையிலான சிறப்புத் தீர்ப்பாயத்தின் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடை நீட்டிப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.

No comments: