Nov 12, 2010

மக்கா மஸ்ஜித்:குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது : சி.பி.ஐ..


ஹைதராபாத்,நவ.12:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா ஆகியோர்களை ஜாமீனில் விடுதலைச் செய்யக் கோரும் மனுவிற்கு சி.பி.ஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கூடுதல் சீஃப் மெட்ரோ பாலிட்டன் நீதிபதி வழக்கை இன்று பரிசீலிப்பதாக கூறி ஒத்திவைத்தார். மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றஞ்சாட்டி ராஜஸ்தான் ஏ.டி.எஸ் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குப்தா, சர்மா உள்ளிட்ட ஐந்து பேர் அடங்குவர்.

No comments: