Dec 1, 2010

தமிழ்நாட்டின் முன்னணி நாளிதழ்கள் பற்றிய ஒரு பார்வை.

தமிழக ஊடகங்கள் பெரிய அளவுக்கு விற்பனையாகி பரவலான வாசகர்களைக் கொண்டிருக்கக் கூடியவை தினத்தந்தி, தினமலர், தினகரன், தினமணி உள்ளிட்ட பத்திரிக்கைகள் உண்மையில் பத்திரிகை தருமத்தை கடைப்பிடித்து நடுநிலையுடன் எழுதுகின்றனவா? என்று பார்த்தால் வெறும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இவைகள் பத்திரிக்கை விபச்சாரம் நடத்தி பணம் சம்பாதிக்கின்றன. இந்த பத்திரிக்கைகளின் செயல்பாடுகள் குறித்து பாப்போம்.

1 ) தினமணி நாளேடு பார்ப்பனிய சிந்தனையை மையப்படுத்தி, ஹிந்துத்துவாவை மையபடுத்தி செயல்படும் நாளிதழ். ஆனால் இதை வெளியே காட்டிகொள்ளாமல் நடுநிலை நாளேடுபோல் வேஷம்போடும் பசும்தொல் போத்திய புலியை போல. இதன் போக்கால் இது இப்பொது வாசகர்களால் புறக்கணிக்கப்பட்டு விற்பனையில் சுருங்கி விட்டது,

2 ) தினமலர் நாளேடு இது தினமணி விட ஆபத்தான பத்திரிகை. மதவெறி, பார்பனியாம், ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களை வெளிப்படையாக ஆதரிப்பது, வர்ணாசிரம கொள்கை, ஹிந்துத்துவா கொள்கைகளை பரப்பும் ஒரு பிரச்சார ஏடாக வெளிப்படியாக செயல்பட்டு வருகிறது. ஆன்மிகம் என்ற பெயரில் மதப்பழமையைத் திணிப்பது என ஹிந்துத்துவா இயக்கங்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரு நாளேடு.

3 ) தினகரன் நாளேடு கலாநிதிமாறன் கைவண்ணத்தில் பிரம்மாண்ட தோற்றம் காட்டினாலும் அது பொதுவாக திமுக சார்புடையது என்பதை வாசகர்கள் தெளிவாக அறிவர். அதிலும் குறிப்பாக திமுகவிற்குள் நடக்கும் குடும்ப அரசியல் சதிராட்டத்தில், தங்களுக்குச் சார்பான பிரிவை தூக்கிப்பிடிக்கும் பணியை தினகரன் செய்து வருகிறது.

4 ) தினத்தந்தி நாளேடு தமிழ் நாட்டில் நாளிதழ் வாசிப்பைப் பரவலாக்கியதில் இந்த இதழின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. பொதுவாக தினத்தந்தியை ஆளும்கட்சி நாளிதழ் என்று சொல்வதுண்டு. ஆட்சியாளர்களை ஆதரித்தால் அரசு விளம்பரம் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தைப் பெறலாம் என்பது தான்.

2 comments:

PUTHIYATHENRAL said...
This comment has been removed by the author.
T Senthil Durai said...

அருமையான அலசல் !

எனக்கு விருப்பமான
சிறந்த தமிழ் நாளிதழ்கள் :

தினத்தந்தி ( தமிழ்நாடு - இந்தியா )
உதயன் ( யாழ்பாணம் )
மக்கள் ஓசை ( மலேசியா )
தமிழ்முரசு ( சிங்கப்பூர் )