Sep 4, 2012

வரலாறு எங்கும் வீரம்! வீரத்தின் விளைநிலம் ஈழம்!

Sep 05: மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி என்னும் ஊரில் புத்தர் விழா ஒன்று நடைபெற இருக்கிறது. புத்தர் 2060 என்று அழைக்கப்படும் இந்த விழாவுக்கு பயங்கரவாதி ராஜ பக்சேவை அழைத்துவர BJP கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் பெரிதும் முயற்சி செய்கிறார்.

தமிழர் விடுதலை போராளிகளுடன் நேருக்கு நேர் போர்செய்ய தைரியம் அற்ற பவுத்த இனவெறியன் கோழை ராஜபக்சே இந்தியா என்கிற வல்லரசு வெறியனிடமும், ஆசியகண்டத்தின் ரவுடிப்பயல் சீனாவிடமும், குள்ளநரி பாகிஸ்தானிடமும் படைகளை பெற்று தமிழர் சுதந்திர தாகத்தை அழித்தான்.

வரலாறு எங்கும் போராளிகளின் வீரம் வைரவரிகளால் வரையப்பட்ட அதேநேரம் எட்டப்பனாக இந்தியாவையும், கோழையாக சிங்கள இனவாதத்தையும் வரலாறு பதியத்தவரவில்லை. உலகிலேயே வான், கடல், தரை என்று முப்படைகளும் வைத்திருந்து இந்தியா வல்லரசின் ராணுவத்தை புறமுதுகு காட்ட செய்தவர்களும் நம் தமிழர்களே.


ஈழ இனப்படுகொலைக்கு காங்கிரஸ் காரணம் என்று ஓட்டுக்காக கோஷமிட்ட பாரதிய ஜனதா கட்சியினர் ஈழத்திலே இனப்படுகொலைகள் நடக்கும் போது மவுனம் சாதித்தே வந்தனர். ஒரு சாதாரண நிலக்கரி ஊழலுக்கு பாராளு மன்றத்தையே இஸ்தம்பிக்க செய்யும் இவர்கள் ஈழப்படுகொலைகள் நடக்கும் போது என்ன செய்தனர்?

ஊட்டியில் பயிற்சி பெறவந்த இலங்கை ராணுவவீரர்களுக்கு பயிற்சி கொடுக்க கூடாது என்று தமிழக பாரதிய ஜனதா கோஷம் போட்டது. நிலைமை இப்படி இருக்க சுஷ்மா சுவராஜ் ராஜபக்சேயை புத்தர் திருவிழாவுக்கு அழைத்தே தீருவது என்று இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நடைபோடுகிறார். இந்திரா காந்தி காலத்தில் காங்கிரஸ் கட்சி ஈழ விடுதலையை ஆதரித்தது.  ஆனால் கோமாளி ராஜீவ் காந்தியின் ஆட்சியில்தான் இந்த நிலையில் மாறுதல் உண்டாகியது.

ராஜீவை வைத்து சோனியாவின் விசயத்திலும் மாறுதல் உண்டாகியது. இது எல்லாம் ராஜீவ் கொலைக்கு பின்னால் நடந்த விடயங்கள்தான். ஆனால் ஆரம்பம் முதல் பார்பன ஊடகங்களும், பார்பன அரசியல் தலைவர்கள் மிகுந்த பாரதிய ஜனதா போன்ற கட்சிகளும் தமிழர்களுக்கும் தமிழர் போராட்டங்களுக்கும் எதிராகவே செயல்பட்டு வந்தன என்பதே இங்கே உண்மை. இதனால் இந்தியாவின் உதவியை ஈழமக்கள் நம்பி இருப்பது வீணளுக்கு இறைத்த நீர் போலத்தான்.

இலங்கைக்கு தலைவலியாக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்தியா ஈழப்போராட்டத்தை ஆதரித்தது. பின்னர் சீனா இலங்கைக்கு உதவ போகிறது நாங்களும் உதவுவதுதான் ராஜதந்திரம் என்று சொல்லி கொண்டது. உண்மையில் இந்தியாவுக்கு தமிழீழம் அமைவதில் உடன்பாடு கிடையாது. இலங்கையில் தமிழர்களுக்கு என்று தனி நாடு ஒன்று கிடைத்தால் இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் தனி நாடு கேட்க்கும் அபாயம் உண்டு என்று இந்தியாவுக்கு தெரியும். 

எனவே துரோகிகளான வடஇந்திய வடவர்களை நம்புவதை விட்டு விட்டு மேற்குலகம் சார்ந்த அரசியல் ராஜதந்திர நடவடிகைகளையும், மீண்டும் ஆயுத போராட்டத்தை கட்டி அமைப்பதின் வழிமுறைகளையும் பற்றியே தமிழர்கள் யோசிக்க வேண்டும். இந்திய தமிழர்களோடு ஒருங்கிணைந்து வீரியமான ஒரு கூட்டு போராட்ட களத்தை உருவாக்க வேண்டும். இந்திய தமிழர்கள் என்பது தமிழ் அரசியல்வாதிகளை அல்ல. இந்திய தமிழ் மக்களோடு சேர்ந்து ஒரு கூட்டு நடவடிக்கை அவசியப்படுகிறது.
தமிழ் ஈழப்போராட்டம் என்பது கானல் நீரல்ல. ஒற்றுமையோடு செயல்பட்டால் அது நடக்க கூடியதே.
ரௌத்திரம் பழகு
...ஈழப்பிரியா...

1 comment:

Anonymous said...

வடமாகாண முஸ்லிம் அகதி வாழ்வுக்கு வயது 19 முடிந்து 20 ஆரம்பம் !
ஒக்டோபர் 1990ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு நீண்ட அகதி வாழ்கை ஆரம்பித்த ஆண்டாகும். முஸ்லிம்களின் பாரம்பரிய தாயக பிரதேசங்களான வடகிழக்கிலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டு பல பயங்கர படுகொலைகளை முஸ்லீம்களுக்கு எதிராக புலிகளால் செய்யப்பட்ட ஆண்டாகும். இந்த ஆண்டோடு பத்தொன்பது ஆண்டுகள் பறந்தோடிவிட்டன. இந்த மாதத்துடன் இருவதாம் வருடம் ஆரம்பித்து விட்டது

வடமாகாணத்தின் யாழப்பாணம் முல்லைதீவு வவுனியா மன்னார் கிழிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சும்மார் ஒரு இலட்சதுக்கும் அதிகமான முஸ்லிம்கள் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்டார்கள். இந்த நடவடிக்கைக்கு முன்னர் வடக்கில் இஸ்லாமிய துடிப்புள்ள பல வாலிபர்கள் புலிகளால் கடத்தபட்டனர் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் பல முஸ்லிம் வாலிபர்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள் , கடத்தப்பட்டு கானாமல் போனார்கள் அக்டோபர் மாதம் 22ஆம்திகதி வட புல முஸ்லிம்கள் . உடமைகள் எல்லாம் அபகரிகப்பட்டு தமது தாய் மண்ணை விட்டு வெறும்கையோடு விரட்டப்பட்டனர். யாழ்பாண முஸ்லிம்களுக்கு வெறும் இரண்டு மணித்தியால அவகாசமே வழங்கப்படது. கோடிக்கணக்கான சொத்துகளின் சொந்தகாரர்கள் வெறும் இரண்டு மணித்தியால அவகாசத்தில் அனைதையும் இழந்த அகதிகளாக ஆக்கப்பட்டனர் ஏனைய மாவட்ட முஸ்லீம்களுக்கு 24 மணித்தியாலம் தொடக்கம் 48மணித்தியால அவகாசம் வழங்கப்பட்டு அகதிகளாக ஆக்கப்பட்டனர்.

யாழ்பாண முஸ்லிம்களை விரட்டி வெளியேற்றும் நோக்கோடு 35 முஸ்லிம் வர்தகர்களை புலிப்பயங்கரவாதிகள் கடத்திசென்றனர். இவர்களில் புலிகளுக்கு இலச்சக்கணக்கில் கப்பம் வழங்கிய 18 முஸ்லீம் வர்தகர்கள் சிலமாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனையோர் சித்திரவதை செய்து கொல்லபட்டனர் சித்திரவதை செய்து கொல்லபட்டவர்களில் பிரபல வர்தகர் மிக வயதானவர் இவர் தலை கீழாக கட்டப்பட்டு சித்திரவதை செய்து கொல்லபட்டார் ஏணையோர் பற்றிய தகவல்கள் கொல்லபட்டனர் என்பதை தவிர வேரு எதுவும் இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை. வடமாகாணத்தில் இருந்த முஸ்லிம்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டார்கள்

ஒருபாரிய கொடுரத்துக்கு வடக்கு முஸ்லிம் முகம்கொடுத்து பத்தொன்பது வருடங்கள் ஓடிவிட்டன. வடக்கை விட்டு விரட்டப்பட்ட முஸ்லிம்கள் இன்னமும் சிறிய பெறிய அகதி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மன்னாரிலிருந்து விரட்டப்பட்டு புத்தளம் அகதி முகாமில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் அகதிகளின் அவலங்கள் சொல்லமுடியாதவைகள். இவர்கள் பறிகொடுத்து விவசாயக்காணிகள் வாழ்நிலங்கள் தோட்டங்கள் பலவகை விவசாய காணிகள் என்ற பாரிய கிராமிய பொருளாதாரமாகும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் இழந்தது கோடிக்கணக்கான மிக பாரிய நகர பொருளாதாரம் என்றால் மன்னார் ,முல்லைதீவு கிழிநொச்சி முஸ்லிம்கள் இழந்தது கோடிக்கணக்கான கிராமிய , நகர பொருளாதாரமாகும் இழந்தவை இழந்தவைதானா இழந்தவை மீண்டும் கிடைக்குமா ? அதிகாரத்தை கையில் எடுத்து கொண்டவர்களின் கைகளை விட்டும் மீண்டும் அதிகாரம் பறிக்கபட்டுள்ளது இந்த பயங்கரவாதத்தின் சூத்திரதாரிகள் வேருடன் புடுங்கி எறியபட்டுள்ளனர் எனிலும் வடகிழக்கில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லீகளில் எண்பது சதவீதமானவர்கள் இன்னமும் தமது தாய் மண்ணுக்கு திரும்பவில்லை.