Aug 6, 2012

தானும் குழம்பி மக்களையும் குழப்பிய அன்னா ஹசாரே!

அன்னா ஹசாரே: லோக்பால் மசோதா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அன்னா தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தார்.

இந்நிலையில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரே குழு  இன்று திடீரென கலைக்கப்பட்டது.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை தயாரித்த மத்திய அரசு, அதனை மக்களவையில் நிறைவேற்றியது. மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேறவில்லை.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவினால் ஊழலை முற்றிலும் ஒழிக்க முடியாது என்று மீண்டும் போராட்டக் களத்தில் குதித்த ஹசாரே, சமீபத்தில் டெல்லியில் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தின்போது, அரசியல் இயக்கத்தைத் தொடங்கப்போவதாக அறிவித்தார்.

அதேசமயம் தான் நேரடியாக தேர்தல் களத்தில் இறங்கப்போவதில்லை என்றும் கூறி வந்தார். இந்நிலையில், அன்னா ஹசாரே குழு இன்று திடீரென கலைக்கப்பட்டது. அரசியல் கட்சியாக மாற்றும் முயற்சி யையும் அவர் கைவிட்டார்.

1 comment:

Seeni said...

ivangalukku vera velai.....