Jul 21, 2011

இலங்கையை புறக்கணிப்போம் விழ்ப்புணர்வு போராட்டம்!

JULY 22, சிறிலங்காவை புறக்கணிப்போம் எனும் விழிப்புணர்வு போராட்டம், புலம்பெயர் தமிழர்களால் வெளிநாடுகளில் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழகத்திலும் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட இந்த விழிப்புணர்வு போராட்டம் பலரது கவனத்தை கவர்ந்தது. ஏற்கனவே, சென்னையில் உள்ள பெருவர்த்தக மையங்களுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட இப்போராட்டம் முன்னெடுப்பு, இந்தியாவின் பல முன்னணி ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருந்தது.

சென்னையைத் தொடர்ந்து டெல்லி, மும்பை என இந்தியாவின் முக்கிய நகரங்களில் இந்த விழிப்பூட்டல் பரப்புரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். பள்ளிமாணவர்கள,; பல்கலைக்கழக சமூகம் என இளைஞர்களை முன்னிறுத்திதான ஒரு மக்கள் இயக்கமாக, இப்பரப்புரையை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருதாகவும் தெரிவித்தார். பொருட்கள், ஆடைகள்,  விளையாட்டு, விமானசேவை, உல்லாச பயணம் உட்பட பலவகையிலும் சிறிலங்காவை புறக்கணிக்கும் விழிப்பூட்டல் பரப்புரைகள், இக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

1 comment:

Anonymous said...

கவால்துறை என்கிற பெயரில் ஒரு கயமை துறை!,ஈழத்திலே தன் உறவுகளை இழந்து, தன் சொத்துக்களை இழந்து, நாட்டை இழந்து தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகம் வந்தால் அவர்களை மீன்பிடிக்க கூடாது என்று க்யூபிராஞ்ச் போலீஸ்காரன் மிரட்டுகிறான்.கேடுகெட்ட காவல்துறை குற்றவாளியை பிடிக்க முடியாமல் ஜோதிடரை அணுகி உள்ளது,இது காவல் துறை இல்லை கயமை துறை! காவல்துறை என்கிற பெயரில் ஒரு பயங்கரவாத படை இயங்குகிறது. இந்த படைக்கு மனிதாபிமானம், மனித நேயம், ஒழுக்கம், நேர்மை, நீதி, நியாயம் என்று ஒன்றுமே தெரியாது. காவல்துறை என்கிற பெயரில் ஒரு ரவுடி கூட்டம் செயல்படுகிறது please go to visit this link. thank you.