Jun 7, 2010

எங்கள் இனம் இந்தியமோ,திராவிடமோ அல்ல தமிழினமே! தமிழர்களுக்கு “நாம் தமிழர்” இயக்கத் தலைவர் சீமான் கோரிக்கை – சிறப்பு பேட்டி!

“இந்தியன் என்று ஒரு இனம் இல்லை. நாம் அனைவரும் இந்தியாவின் நிலப்பரப்பில் வாழும் குடிகள் மட்டுமே.அதைப்போல நாம் திராவிடரும் இல்லை. ஆரியம் என்ற சொல்லுக்கு எதிரான சொல்லாடலாக திராவிடம் என்ற சொல்லை வரலாற்றாசிரியன் கால்டுவெல் பயன்படுத்தினார் அவ்வளவே. திராவிடர் என்றால் யார்? அப்படி ஒரு இனம் இருக்கின்றதா? அதற்கு மொழி இருக்கின்றதா? மலையாளியும் தெலுங்கனும் கன்னடனும் தங்களை திராவிடர் என சொல்லிக்கொள்வதில்லை. ஆனால், தமிழன் மட்டும்தான் திராவிடர் என்று சொல்லிக்கொள்கிறான்.

இந்தியன்,திராவிடன் என்று ஒரு இனமும் இல்லை. தமிழன் என்ற இனம் மட்டுமே உண்டு. நாம் அனைவரும் தமிழர்கள். உலகின் தொன்மையான குடி. ஆகவே நாம் நமது உரிமைகளைக் கோரிப்பெறுவதற்கும் நாம் இனத்தால் ஒன்றுபடுவதற்கும் நம்மை தமிழர்கள் என்று உணார்தல் அவசியம். ஆகவே மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொழுது தமிழர்கள் தம்மைத் தமிழர்கள் என்று உறுதியாகப்பதிவு செய்ய வெண்டும்” என்றார்.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்னும் சாகவில்லை,உயிருடன்தான் உள்ளார்- பழ.நெடுமாறன்.

"விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்னும் சாகவில்லை,உயிருடன்தான் உள்ளார்.இதனை நான் உறுதியாக கூறமுடியும். அவர் தலைமையில் 5 ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கும் போது அவர் வருவார், அப்போது அவர்களுக்கு தமிழர்கள் துணையிருக்க வேண்டும். ஈழப் போர் ஓய்ந்து விடவில்லை.இலங்கையில் நிச்சயம் தமிழீழம் மலரும்” என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

உலகத்தமிழர் பேரமைப்பு சார்பில் தஞ்சையில் நடைபெற்ற ஈகத்தூண்கள் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு தலைமைவகித்து பேசிய போது இவ்வாறு கூறினார். மேலும் அவர் பேசியதாவது,”தமிழீழத்திற்காக தமிழத்தில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு இது போன்ற நினைவுத்தூண்கள் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்படும்.

தமிழகத்தில் மட்டும் அல்ல.வேறு எங்கும் இந்த மாதிரி நினைவுத்தூண் அமைக்கப்பட்டது இல்லை என்ற வகையில் நினைவுத்தூண்கள் அமைக்கப்படவுள்ளது. நினைவுத்தூணுடன் நினைவு மண்டபமும் அமைக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு மே-17ஆம் தேதி இந்த மண்டமும், நினைவுத்தூண் திறந்து வைக்கப்படும். இதில் தீக்குளித்த தமிழ் தியாகிகளின் 18 பேரின் பெயர் மற்றும் உருவ ஓவியங்கள் இடம் பெறும். இவ்வாறு பழ.நெடுமாறன் பேசினார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ :தமிழ் ஈழம் அழியாது. அழிய விடமாட்டோம். மீண்டும் எழும். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர். மரண ஓலம், வீரம் கலந்தது முள்ளி வாய்க்கால். இது இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கப்பட வேண்டும்.

ஈழ விடுதலை வரலாறு, இந்தியா மற்றும் உலக நாடுகளின் மவுனம் இவை அனைத்தும் எடுத்துச்சொல்லப்பட வேண்டும். முள்ளி வாய்க்கால் முடிவல்ல. தொடக்கம் தான். முள்ளி வாய்க்கால் படுகொலையின் ஆதாரங்கள் நினைவு மண்டபமான அருங்காட்சியகத்தில் இடம்பெற வேண்டும். இந்த நினைவுத்தூண்கள் மலரஞ்சலி, புகழஞ்சலி செலுத்த மட்டும் அல்ல. அவர்கள் எதற்காக மடிந்தார்கள் என்ற உணர்வை ஏற்படுத்ததான். வரலாற்றில் தமிழ் ஈழ வரலாறு இடம் பெற வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் தமிழ் ஈழவரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்களை காக்க நாம் 9 கோடி தமிழர்கள் உள்ளோம். அங்கு தமிழ் ஈழம் மலரும்” என்றார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசியக்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக்கொண்டு பேசினர்.

மெக்சிகோவில் இதயங்களை அகற்றி மர்மக்கொலை : ஆறுபேரின் சடலங்கள் மீட்பு.

மெக்சிகோவின் கென்குன் நகரத்துக்கு அருகாமையில் ஆறு சடலங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளதுடன் அவற்றில் மூன்று சடலங்களிலிருந்து இதயங்கள் அகற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள சுற்றுலா விடுதியொன்றுக்கு அருகிலேயே இச்சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சடலங்களில் நான்கு ஆண்களுடையது என்றும் இரண்டு பெண்களுடையது என்றும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இவர்களைக் கொலை செய்தவர்கள் கடுமையான சித்திரவதை செய்துள்ளதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் பொலிஸார் ஊடகங்களுக்குக் கூறியுள்ளனர்.

கொலைசெய்யப்பட்டவர்களின் முதுகுப்பகுதியில் ‘Z’ அடையாளம் கீறப்பட்டுள்ளது. இது சீட்டா எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் அடையாளம் எனவும் சொல்லப்படுகிறது. மெக்சிகோவில் கடந்த 2006ஆம் ஆண்டுமுதல் 22ஆயிரத்து 700 பேர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதுதொடர்பான வன்முறைகளால் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டைட்டானிக் பயணத்தை முழுமையாக்கும் 'டைட்டானிக் 2'

இங்கிலாந்திலிருந்து, 1912ம் ஆண்டு, ஏப்ரல் 8ம் தேதி, பயணத்தை துவங்கிய, டைட்டானிக் சுற்றுலா கப்பல், ஏப்ரல் 15ம் தேதி, அட்லாண்டிக் சமுத்திரத்தில், பயணித்தபோது, பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இந்த பயங்கர விபத்தில் சுற்றுலா பயணிகள், ஊழியர்கள் என, மொத்தம் 2,223 பேரில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,578 பேர், கடலில் மூழ்கி பலியாகினர். நடுக்கடலில் தத்தளித்த மீதமிருந்தோர், கடும் முயற்சிக்கு பின் மீட்கப்பட்டனர்.

டைட்டானிக் சுற்றுலா கப்பல் கடலில் மூழ்கிய சம்பவம், உலக வரலாற்றில், கருப்பு தினமாக கருதப்படுகிறது. டைட்டானிக் கப்பல் மூழ்கி, 2012ம் ஆண்டுடன், நூறு ஆண்டுகள் ஆகின்றன. இந்நினைவு தினத்தையொட்டி டைட்டானிக் பயணம் செய்த, அதே பாதையில், டைட்டானிக் நினைவு சுற்றுலா கப்பலை, (டைட்டானிக் 2) இயக்க, பிரிட்டனை சேர்ந்த, பிரபல மைல்மார்கன் சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இக்கப்பல், 2012ம் ஆண்டு, ஏப்ரல் 8ம் தேதி, சவுத்ஆம்டன் நகரில், தனது பயணத்தை துவக்கவுள்ளது.

டைட்டானிக் கப்பல் மூழ்கிய தினமான, ஏப்ரல் 15ம் தேதி அன்று, அதே இடத்தில், நினைவு சுற்றுலா கப்பல் நிலை நிறுத்தப் படுகிறது. இரவு 2.20 மணிக்கு, நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின், பயணத்தை தொடரும் கப்பல், ஏப்ரல் 20ம் தேதி, நியூயார்க் நகரை சென்றடையும். டைட்டானிக் கப்பலில், பயணம் செய்த போது, உயிரிழந்தவர்களின, குடும்ப உறுப்பினர்கள் பலர்,விபத்து குறித்தும், இறந்தவர்களின் அனுபவங்கள் குறித்தும், விளக்குவர். கப்பலில் பயணம் செய்வதற்கான, முன்பதிவு துவங்கியுள்ளது.

போபால் விஷவாயு வழக்குத் தீர்ப்பு: இந்தியாவில் நீதித்துறையும் காவல் துறையும் செத்துவிட்டது மக்கள் ஆயூதம் ஏந்தி போராடுவதே இதற்க்கு தீர்வு.

போபால்:26 வருடமாக நடந்து கொண்டிருந்த போபால் விஷ வாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் கேசப் மகிந்திரா உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகள் என போபால் முதன்மை நீதித்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் மோகன் திவாரி தீர்ப்பு கூறினார்.ஆனால் நிறுவனத் தலைவர் ஆண்டர்சன் குறித்து ஒரு வார்த்தையும் இல்லை!

இன்றைய தீர்ப்பை கேட்க பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் கோர்‌ட் முன்பாக கூடினர். கடும் தீர்ப்பு வழங்கிட வேண்டும், என்று கோஷங்கள் எழுப்பினர்.
1984ம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய மீத்தைல் ஐசோசயனேட் விஷ வாயுத் தாக்கி 15,000 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். (2 ஆயிரத்து 259 பேர் மட்டும் இறந்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது).

இதுதொடர்பான வழக்கு போபால் கோர்ட்டில் கடந்த 26 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்தது. பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமும் கிடைக்காமல் பெரும் அவலமாக இருந்துவந்தது.இந்த நிலையில் இந்தவழக்கில் இன்று நீதிபதி மோகன் திவாரி தீர்ப்பளித்தார்.
எட்டு பேர் குற்றவாளிகள் என நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் யூனியன்கார்பைடு நிறுவன முன்னாள் தலைவரான அமெரிக்கரான வாரன் ஆண்டர்சன் குறித்து ஒரு வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை.

போபால் விஷ வாயு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டார் ஆண்டர்சன். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் தப்பி தலைமறைவாகி விட்டார். தலைமறைவுக் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார்.23 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வழக்கில் இதுவரை ஒருமுறை கூட அவர் விசாரணைக்கு வரவில்லை.
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள 8 பேருக்கும் தண்டனை பின்னர் மற்றொரு நாளில் அறிவிக்கப்படும்.அதிகம் பட்சம் 2ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்ற பேச்சினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடும் எரிச்சல் அடைந்துள்ளனர்.போபால் விஷவாயு வழக்குத் தீர்ப்பு: இந்தியாவில் நீதித்துறையும் காவல் துறையும் செத்துவிட்டது மக்கள் ஆயூத போராட்டத்தை துவங்கும் காலம் வந்துவிட்டது.மக்கள் ஆயூதம் ஏந்தி போராடினால் தான் இதற்க்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.

இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி ஒருதலை பட்சமானது: பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் அனீஸ் அஹ்மத்.

துபாய்:'இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி ஒருதலை பட்சமானது' என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகக் கமிட்டி தலைவருமான அனீஸ் அஹ்மத் கூறினார். எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் சார்பாக துபாயில் வைத்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ’வளர்ந்துவரும் இந்தியா மாயையும் எதார்த்தமும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தும் பொழுது அவர் இதனை தெரிவித்தார்.

"ஒரு புறம் இந்தியாவின் வளர்ச்சியின் இனிப்பை மேல்தட்டு வர்க்கம் சுவைக்கும் பொழுது மறுபுறத்தில் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் தள்ளப்படுகிறார்கள். எதிர்காலத்தில் சூப்பர் பவராக மாறும் என கருதப்படும் இந்தியாவின் மறைத்துவைக்க முடியாத உண்மைதான் உலகிலேயே அதிகம் பேர் பட்டினியால் வாடும் தேசம் என்ற சிறப்பு.
இந்தியாவில் மிகவும் பிற்பட்ட நிலையிலிலுள்ள முஸ்லிம்கள் அரசின் இரட்டை நிலைக்கும், பாரபட்சத்திற்கும் இரையாகின்றனர். மதசார்பற்ற கட்சிகளாக வேடமிடுவோரின் வஞ்சனைக்கும் பாத்திரமாகின்றார்கள்.

இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு முஸ்லிம் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சக்திப்படுத்துவதன் மூலமே சாத்தியமாகும்". இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார். எமிரேட்ஸ் ஃபெடர்னிடி ஃபாரம் துணைத்தலைவர் முஹம்மது தல்ஹா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தலைவர் அப்துல் ரஸ்ஸாக் தலைமை வகித்தார். செய்யத் அஃப்ஸர் நன்றி தெரிவித்தார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

Jun 6, 2010

2030 க்குள் தூத்துக்குடி, சென்னை அழியும் அபாயம் - நெல்லை பேராசிரியர்.

நெல்லை: உலக வெப்பமயமாதலால் 2030க்குள் தூத்துக்குடி மற்றும் சென்னையின் ஒரு பகுதி கடலில் முழ்கும் அபாயம் இருப்பதாக நெல்லை பேராசிரியர் தெரிவித்தார்.நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் சுற்று சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு விழா நேற்று நடந்தது. அறிவியல் மைய அலுவலர் சீதாராமன் தலைமை வகித்தார். பாளை ஜான்ஸ் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ஆல்பர்ட் ராஜேந்திரன் சுற்று சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து பேசுகையில்,

இந்த உலகம் தோன்றி 5 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதில் மனித இனம் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. அப்போது இயற்கையோடு ஓன்றி மனிதர்கள் வாழ்ந்ததால் சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது மக்கள் தொகை பெருக்கத்தாலும், தேவை அதிகரிப்பதாலும் சுற்று சுழலை மாசுபடுத்தி வருகின்றன.உலகில் மனித இனத்தோடு சேர்ந்து 10 மில்லியன் உயிரினங்கள் உள்ளன. இதில் பல உயிரினங்கள் அழிந்து வருகின்றன. டைனோசர் உள்பட பல்வேறு உயிரினங்கள் இந்த பூமியில் இல்லாமல் அழிந்து விட்டன.

தற்போது உலக வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றங்கள் போன்ற பிரச்சனைகள் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. பனி பிரதேசங்களில் பனி மலைகள் உருகுவதால் கடல்நீர் மட்டம் படி படியாக உயர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் மிகப்பெரும் ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 2030க்குள் தூத்துக்குடியே இருக்காது எனவும், சென்னையின் ஒரு பகுதி கடலில் மூழ்கி விடும் எனவும் அதிர்ச்சி தகவல்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். எனவே சுற்று சூழலை பாதுகாக்கவும்,உலக வெப்பமயமாதலை தடுக்கவும் அனைவரும் பாடுபட வேண்டும். அதிகளவில் மரங்களை நட்டு பாதுகாக்க வேண்டும். மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விண்ணில் சீறிப்பாய்ந்த தனியார் ராக்கெட்.

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள விண்வெளி ஆய்வுத்துறை விண்வெளிக்கு ராக்கெட்களையும் செயற்கைக் கோள்களையும் அனுப்பி வரும் நிலையில் முதன் முறையாக தனியாருக்கு சொந்தமான ஒரு ராக்கெட் அமெரிக்காவிலிருந்து நேற்று விண்ணில் சீறிப் பாய்ந்தது. நாசாவுக்காக விண்ணிற்கு சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக இந்த ராக்கெட் பரிசோதனை முறையில் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது.

பேபால் நிறுவனத்தின் உரிமையாளர் இலான் மஸ்க்-ற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் என்ற நிறுவனம் முதன்முறையாக ராக்கெட் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் ஏற்கெனவே இரண்டு முறை விண்ணில் செலுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் சில பிரச்சனைகள் காரணமாக அது கைவிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த ராக்கெட் அமெரிக்காவில் உள்ள கேப் கனவரெல் விண்வெளி தளத்திலிருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது. சர்வதேச விண்வெளி மையத்திற்கு நபர்களையும் சரக்குகளையும் அனுப்புவதற்கு தனியாரை ஈடுபடுத்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திட்டமிட்டுள்ளார். அவரது இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக இந்த தனியார் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

Jun 5, 2010

இஸ்ரேல் தூதரகத்திற்கு முன்பு முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டம்.

புதுடெல்லி:காஸ்ஸாவிற்கு சென்ற நிவாரண உதவிக் கப்பல்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய அராஜக தாக்குதலைக் கண்டித்து இந்திய முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து இஸ்ரேல் தூதரகத்திற்கு முன்பு கண்டனப் பேரணியை நடத்தின. இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளை இந்திய முறித்துக்கொள்ள வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த், மர்கஸ் ஜம்மியத்து அஹ்லே ஹதீஸ், ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸே முஸாவரா, ஆல் இந்தியா மில்லி கவுன்சில், முஸ்லிம் பொலிட்டிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா, இந்தியன் இஸ்லாஹி மூவ்மெண்ட், மஜ்லிஸே ஃபிக்ரே அமல்,ஸ்டண்ட்ஸ் இஸ்லாமிக் ஆர்கனைசேசன் உள்ளிட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கானோர் கண்டனப் பேரணியில் கலந்துக் கொண்டனர்.

மாலை 3.30 மணியளவில் இந்தியா கேட்டிலிருந்து துவங்கிய பேரணியை ஷாஜஹான் ரோட்டில் போலீஸ் தடுத்து நிறுத்தியது. கோரிக்கைகள் அடங்கிய மனுவை பின்னர் பிரதமருக்கு அளித்தனர் போராட்டம் நடத்திய அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவினர்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

Jun 4, 2010

எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை.

தென் கொரியாவுடன் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்று வட கொரியா எச்சரித்துள்ளது. அண்மையில் வட கொரிய போர் கப்பல் ஒன்று, தென் கொரிய கடல் எல்லைப் பகுதியில் மர்மமான முறையில் மூழ்கடிக்கப்பட்டது. இந்நிலையில் தென் கொரியாதான் தங்கள் நாட்டு கப்பலை மூழ்கடித்ததாக வட கொரியா குற்றம் சாற்றியது. அத்துடன் தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவதாகவும் அது கூறியிருந்தது.

ஆனால் கப்பலை தாங்கள் மூழ்கடிக்கவில்லை என்று தென் கொரியா அதனை மறுத்தது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வந்தது.
இந்நிலையில் ஜெனீவாவில் ஆயுத ஒழிப்பு தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய வட கொரிய தூதரக அதிகாரி ரி ஜாங் கான், கொரிய தீபகற்பத்தில் தற்போது நிலவும் சூழல் மிகவும் அபாயகரமாக உள்ளது என்றும், எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்றும் கூறினார்.

வட கொரியாவின் போர் கப்பலை மூழ்கடித்து நிலைமையை மோசமாக்கியது தென் கொரியாவும், அமெரிக்காவும்தான் என்றும் குற்றம் சாற்றிய அவர், ஆனால் இந்த இருநாடுகளும் வட கொரியவுக்கு எதிராக மேலும் பொருளாதார தடைகளை விதிக்க கோருவதோடு,வட கொரியாவை தனிமைப்படுத்த முயற்சிப்பதாகவும் கூறினார்.

இந்தியா ஒரு பொறுப்புமிக்க சர்வதேச சக்தியாக உருவெடுத்து வருகிறது : ஒபாமா.

இந்தியா ஒரு பொறுப்புமிக்க சர்வதேச சக்தியாக உருவெடுத்து வருகிறது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்கா வந்துள்ள இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு நேற்று அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளின்டன் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு கூறிய ஒபாமா, 21 ஆம் நூற்றாண்டில் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்றார்.

இந்தியா வரைபடத்தில் எங்கு உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா தனது தோழமை நாட்டை மதிப்பீடு செய்வதில்லை என்றும், நாங்கள் என்ன பகிர்ந்து கொண்டோம் மற்றும் எங்கே நாங்கள் ஒன்றாக செல்ல முடிகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டே அதனை தீர்மானிக்கிறோம் என்றும் ஒபாமா கூறினார். அனைத்து நாடுகளின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா ஒரு முக்கியமான நாடாக திகழ்கிறது. அதனால்தான் எனது அமைச்சரவையில் மூன்றாம் இடத்தில் உள்ளவர் ஏற்கனவே இந்தியாவுக்கு சென்றுள்ளார். அதே காரணத்தால்ன் எனது நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளும் தற்போது நடைபெற உள்ள முக்கியமான பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ளனர் என்று ஒபாமா மேலும் கூறினார்.

'என்னை கைது செய்து சிறையில் அடைத்தாலும் நக்ஸல்களை தொடர்ந்து ஆதரிப்பேன்': அருந்ததி ராய்.

மும்பை:'என்னை கைது செய்து சிறையில் அடைத்தாலும், ஆயுதமேந்தி போராட்டம் நடத்திவரும் நக்ஸல்களை தொடர்ந்து ஆதரிப்பேன்' என்று புகழ்பெற்ற எழுத்தாளரும் சமூக நீதி ஆதரவாளருமான அருந்ததி ராய் தெரிவித்தார். மும்பையில் புதன்கிழமை இரவு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மக்களுக்கு எதிரான போர் என்ற தலைப்பில் அருந்ததி ராய் சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

வன்முறையை எப்போதும் ஆதரிக்க மாட்டேன். ஆனால் அரசியல் ரீதியாக நடத்தப்படும் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன். நக்ஸல் இயக்கம் என்பது போராளி இயக்கம் அல்ல. பொதுமக்களுக்காக ஆயுதமேந்தி செயல்படும் இயக்கம். ஆயுதப் போராட்டம் என்பது காந்திய வழியில் நடத்தப்படும் ஒருவகை அறப்போராட்டம்தான். ஆனால் தற்போதைய நிலையில் இந்தப் போராட்டம் வெற்றிபெற வாய்ப்பில்லை.

நீர்,வனம்,கனிமங்கள் ஆகியவற்றை சுரண்டும் வியாபார, பணக்கார கும்பலை எதிர்த்து போராடும் பழங்குடி மலைவாழ் மக்களுக்கு ஆதரவாக நக்ஸல்கள் செயல்படுகின்றனர். இதை அரசுக்கு எதிரான போராட்டமாகக் கருதக்கூடாது. நக்ஸல்களில் 99 சதவீதம் பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் பழங்குடியினரில் 99 சதவீதம் பேர் நக்ஸல்கள் அல்ல.இதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு:மேலும் ஒரு ஹிந்துவ பயங்கரவாதி கைது.

ஜெய்பூர்:கடந்த 2007ல் நடைபெற்ற அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில், ராஜஸ்தான் ஏ.டி.எஸ் மேலும் ஒரு ஹிந்துத்வ பயங்கரவாதியை கைது செய்துள்ளது.சந்திரசேகர் பரோட் என்ற அந்த பயங்கரவாதியை மத்தியபிரதேச மாநிலத்தில் ஷாஜாபூர் என்ற இடத்தில் ஏ.டி.எஸ் கைது செய்தது. இவனுக்கும் அபினவ்பாரத் எனப்படும் ஹிந்துத்துவ தீவிரவாத கும்பலுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளதாகவும், சந்திரசேகர் தற்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முக்கிய பதவியில் இருப்பதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும்,மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள பல்வேறு சம்பவங்களுடன் சந்திரசேகருக்கு தொடர்பு இருப்பதாக ஏ.டி.எஸ்யை மேற்கோள் காட்டிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரவீன் குமார் மாத்தூர் என்ற போலீஸ் அதிகாரியால் கைது செயப்பட்ட இவன், நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் 12 நாள் காவலில் ஜெய்பூர் கொண்டுவரப்பட்டுள்ளான்.

இது குறித்து கூடுதல் டைரக்டர் கபில் கார்க் கூறுகையில், சந்தரசேகர் மிகவும் பனக்கார குடும்பத்தை சேர்ந்தவரென்றும், பலசாயி கிராமத்தில் தன் மகளை பள்ளியிலிருந்து அழைத்து வரும்போது, ஏ.டி.எஸ்ஸால் கைது செயப்பட்டார் என்றும் தெரிவித்தார். இவ்வழக்கில் முன்பு கைது செய்யப்பட்ட தேவேந்திர குப்தாவின் மைத்துனர் அமனை ஏ.டி.எஸ் கைத செய்து பின்னர் ஆதாரமில்லாமல் விடுவித்தது.

இந்தியாவில் எங்கு குண்டுவெடித்தாலும், புதிய புதிய இயக்கத்தின் பெயர்களில் முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டு வந்த நிலையில்,உண்மையின் இவ்வெளிப்பாடு – முஸ்லீம் சமுதாயம் பட்ட அவமானத்தைப் போக்கிவிடுமா? இல்லை முஸ்லீம்கள் மேல் பதிக்கப்பட்ட தீவிரவாதக் கரைத்தான் நீக்கப்படுமா? பல ஆண்டு சிறையில் வாடியதற்கு பிறகு, நீதிமன்றங்களினால் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டும், சமுதாயத்தில் அவர்கள் படும் பாடு, அதுதான் அமைதிக்கு ஜனநாயகத்தின் பரிசு என்றால் அது மிகையாகாது.

Jun 3, 2010

முட்டாள் இந்தியாவை உதாரணம் காட்டும் தீவிரவாத இஸ்ரேல்.

இஸ்ரேல் இந்தியாவையும் பாகிஸ்தானையும் இக்கப்பல் தாக்குதல் விவகாரத்தில் இழுதுள்ளது.
இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த வாரம் மட்டும் இந்தியா, பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தான், ஏமன் என எல்லா நாடுகளிலும் சுமார் 50௦க்கும் மேற்பட்டோர் குண்டுவெடிப்பு, தாக்குதலால் இறந்துள்ளதாகவும், இவ்விகாரத்தில் தன் கண்ணைக் கட்டிக் கொண்டு குருடாக நடிக்கும் ஐ.நா செயலகம் இஸ்ரேலின் விவகாரத்தில் மட்டும் ஏன் மூக்கை நுழைத்து கண்டன அறிக்கைகளும், தீர்மானங்களும் வெளியிடுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நிவாரணக் கப்பல் தாக்குதல் விவகாரத்தில்,இஸ்ரேலின் அட்டூழியத்தை இந்தியாவும் சத்தமில்லாமல் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.இஸ்ரேலுடன் நட்பு பாராட்டி பல திசைகளில் இந்தியா உறவுகளை மேற்கொண்டுள்ள நிலையிலும்,புனே குண்டுவெடிப்பிற்கு பிறகு எந்த அசம்பாவிதமும் இந்தியாவில் நடக்காமல் இருந்த நிலையில் இஸ்ரேலின் இந்த அறிக்கை நம் முட்டாள் தலைவர்களின் மூளைக்கு வேலை கொடுத்துதுள்ளது என்றால் அது மிகையாகாது. இந்தியா இதிலிருந்தாவது பாடம் பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்

Jun 2, 2010

மேற்குவங்காளம்:கலைகிறது கம்யூனிச மாயை.

கொல்கத்தா:அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மேற்குவங்காள சட்டசபைத் தேர்தலின் அரையிறுதியாக சித்தரிக்கப்பட்ட கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திர்ணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரும் பெரும்பான்மையை பெற்று கம்யூனிசத்தின் கோட்டையை தகர்த்துள்ளது.

மொத்தம் 141 இடங்களில் 98 இடங்களையும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. சி.பி.எம்மிற்கு 31 இடங்கள்தான் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சி வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது.கொல்கத்தா நகரசபையையும்,பெரும் போராட்டத்திற்குப் பிறகு விதான் நகர் நகர சபையையும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

70 சதவீதம் பேர் வாக்களித்த கொல்கத்த மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியன தனித்தே போட்டியிட்டன. தோல்வியை ஒப்புக்கொண்ட காங்கிரஸ் மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.58 நகர சபைகளில் திரிணாமுல் காங்கிரஸ் 30 நகரசபைகளிலும், இடதுசாரிகள் 17 நகரசபைகளிலும் வெற்றிப் பெற்றுள்ளனர்.

ஆர்,எஸ்.எஸ். தீவிரவாத சாத்தான் வேதம் ஓதுகிறது’

சாத்தான் வேதம் ஓதுகிறது’ அதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கும் பொருந்தும். இந்தியாவில் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணே ஆர்.எஸ்.எஸ்தான் என்பது இந்திய தேசத்தின் மீது பற்றுக் கொண்ட அனைவரும் அறிந்த விஷயம்.தேசத்தந்தை மகாத்மா காந்தியின் உயிரைப் பறித்தக் கும்பல்தான் இந்த பண்டார பரதேசிகள்.

கல்விக்கு கண் தந்தவர் என தமிழக மக்களால் போற்றப்படும் கர்ம வீரர் காமராஜரை டெல்லி தமிழ்நாடு ஹவுசில் வைத்து தீவைத்துக் கொழுத்த முயன்றவர்கள். இந்தியாவில் நடந்த 13ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மை முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களின் சூத்திரதாரிகள்.பல்வேறு கமிஷன்களால் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்.

வரலாற்றுச் சின்னமான பாப்ரி மஸ்ஜிதை இடித்ததில் முக்கிய பங்காற்றியவர்கள். சுதந்திர இந்தியாவில் 3 முறை தடைச் செய்யப்பட்ட ஒரு இயக்கம். வெறுப்பை உமிழும் முசோலினியின் பாசிசத்தை நெஞ்சாற ஏற்றும் செயலூக்கம் அளிக்கும் வல்லூறுகள். பெயர்கள் பல இருந்தாலும் அது ஸ்ரீராம சேனாவாகயிருந்தாலும்,அனுமான் சேனையாகயிருந்தாலும் எல்லா கபோதிகளும் ஆர்.எஸ்.எஸின் கருப்பையிலிருந்து கிளம்பிய விஷ விருட்சங்களே!

நிலைமை இவ்வாறிருக்க திடீரென கவலை வந்துவிட்டதாம் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு ஹிந்துக்களை தீவிரவாதத்தில் தொடர்பு படுத்துவதுக் குறித்து. "எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை” என்பது போலிருக்கிறது இவர்களது வாதம். கலவரங்கள் போதாது என்று குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி அப்பாவிகளின் அழிவுக்கு காரணாமாகியதுடன் அந்த பழியை முஸ்லிம்கள் மீதே போட்டுவிட்டு ஒரே கல்லில் இரட்டை மாங்காய் அடித்த சந்தோஷத்தில் இருந்தவர்களுக்கு கர்காரே வடிவில் வந்தது கேடு.

அபினவ் பாரத்,சனாதன் சன்ஸ்தான் என வெளிப்பட்ட இவர்களது முகம் ஒட்டுமொத்த வண்டவாளங்களும் வெளிவரக்கூடிய சூழலில்தான் கர்காரே மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.அதில் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டவர்களுக்கு ராஜஸ்தான் ஏ.டி.எஸ் வடிவத்தில் மீண்டும் வந்தது வினை. 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட சிம் கார்டின் மூலம் தேவேந்திர குப்தா என்ற ஹிந்த்துவ பயங்கரவாதி கைது செய்யப்பட்டான்.

இம்முறை நேரடியாகவே ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பு அம்பலமானது. குப்தா ஆர்.எஸ்.எஸ் தலைமையால் ஜார்கண்டிற்கு பிரச்சாரக்காக நியமிக்கப்பட்டு நம்பிக்கையுடன் பல ஆண்டுகள் செயல்பட்டவன்.அத்தோடு இந்த பயங்கரவாதக் கும்பலின் தொடர்பு மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் எனத் தொடர்கிறது. இதற்கிடையில் கோவாவில் சனாதன் சன்ஸ்தான் அமைப்பைச் சார்ந்தவர்கள் தீபாவளிக்கு முந்தைய தினத்தில் ஹிந்துக்களையே கொன்று அதன் பழியை முஸ்லிம்கள் மீது போட நினைத்து நடத்திய திட்டம் பாழாய்போய் கைது செய்யப்பட்டனர்.

மலேகான் குண்டுவெடிப்பில் பிரக்யா சிங் என்ற தீவிரவாத நங்கை கைதுச் செய்யப்பட்ட பொழுது அத்வானியும்,ராஜ்தாக்கரேயும் ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர்.கிழட்டு அசிங்கம் பால்தாக்கரேயும் உறுமினார்.இப்பொழுது எல்லோரும் வாய்மூடியுள்ளனர். இதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் தந்திரம். இப்பொழுது இதுத்தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்ஸின் மேல்மட்டத்தில் தீவிர ஆலோசனை நடந்ததாம்.அதாவது அதன் உறுப்பினர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு இயக்கம் பாதுகாப்பு வழங்காதாம்.
எய்தவனிருக்க அம்பை வைத்து என்ன பலன்?