Dec 29, 2010

ஆசிட் வீசினால் ஆயுள்தண்டனை: இந்தியாவில் புதிய சட்டம்.

புதுடெல்லி,டிச.29:பெண்களின் உடலில் ஆசிட்டை வீசி(திராவகம்) காயத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் ஆவனச்செய்யும் சட்டம் இயற்றப்படவிருக்கிறது. மத்திய செயலாளர்கள் கமிட்டி இதுத்தொடர்பாக சிபாரிசுகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. அமைச்சரவை அனுமதியளித்தால் சட்டம் அமுலுக்கு வரும். ஆசிட் வீச்சை இந்திய தண்டனைச் சட்டத்தின் சிறப்பு குற்றச்செயலாக மாற்றி தற்போதைய சட்டத்தை திருத்தம் செய்வதற்கு மத்திய உள்துறை செயலாளர் ஜி.கெ.பிள்ளையின் தலைமையிலான ஆறு உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டி சிபாரிசுச் செய்துள்ளது.

No comments: