Nov 5, 2010

சுவிற்சலாந்தில் குர்ஆன், பைபிள் ஆகியவற்றை எரிக்க சதி: ஹிந்து தீவிரவாதிகள் கைது.


சுவிற்சலாந்தில் வாழும் இந்தியர்களான பாசிச இந்து தீவிரவாதிகள் மூவர் தீபாவளி தினமான இன்று வெள்ளிக்கிழமை இரவு புனித நூல்களான குர்ஆன், பைபிள் ஆகியவற்றை பகிரங்கமாக எரித்து சாம்பலாக்குகின்றமைக்கு திட்டமிட்டு இருந்தனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பொலிஸார் இம்மூவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜராக்கினர்.இவர்கள் ஹிந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இன் உறுபினர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பல்வேறு பெயர்களில் வெளிநாடுகளில் செயல்பட்டு வருவது குறிப்பிட தக்கது.

இவர் கடந்த எட்டு வருடங்களாக சுவிற்சலாந்தில் வசித்து வருகின்றார். இவர் நீதிமன்றில் சாட்சியம் வழங்குகையில் குர் ஆன், பைபிள் இரண்டும் தீய சக்திகளின் இரு கண்கள் மாதிரி, இந்நூல்களை குழந்தைகள் படிக்கின்றமையைகூட அவர்கள் விரும்பவில்லை என்று கூறி இருக்கின்றார். இவர்கள் குற்றவாளியாக கருதப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments: