Nov 5, 2010

மன நோயின் அறிகுறிகள்.

மனச் சோர்வு நோயின் மிகத்தீவிரமான வகையைச் சேர்ந்தது.ஒரு நிமிடம் உலகத்தின் உச்சியில் நிற்பது போல் உற்சாகமாக இருக்கும் இந்த நோயாளிகள், அடுத்த நிமிடமே அதல பாதாளத்தில் விழுந்துவிட்டது போன்று நடந்து கொள்வார்கள். அதீத சந்தோஷமும் அளவுக்கு மீறிய சோகமும் இவர்கள் நடத்தையில் வந்துபோகும். மிகவும் சிக்கலான நோய்.

சந்தேக மன நிலையிலேயே இவர்கள் எதையுமே செய்வார்கள். இவர்கள் சிந்தனைகள் கூட வித்தியாசமானவையாக இருக்கும். ஆனால், நடைமுறைக்கு சாத்தியப்படாத்தாக இருக்காது. தம்மை முன்னிலைப்படுத்த விரும்புவார்கள். சில நேரம் சந்தோஷமாக நடந்துகொள்பவர்... அடுத்த நாள், சோர்ந்து தளர்ந்து மனமுடைந்து காணப்படுவார்கள்.

நேற்று நான் ஏன் அப்படி செய்தேன்,ஏன் அப்படி சொன்னேன்,ஏன் அப்படி நடந்துகொண்டேன் என்று துக்கப்படுவார்கள். அந்த சிந்தனையின் பிரதிபலிப்பாக மிக மனம் சோர்வடைந் திருப்பார்கள். இந்த நிலையில் இவர்களால் அடிப்படை வேலைகளைக்கூட செய்ய முடியாது இருக்கும்.அன்றாட உடல் பராமரிப்பை செய்ய மாட்டார்கள். வாழ்க்கை துளைந்துவிட்டதுபோன்று நடந்துகொள்வார்கள்.

பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக முரண்பாடான முடிவுகளை எடுத்துவிட்டு அடுத்தவர் மீது குற்றம் சாட்டுவது இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும். மற்றவர்கள் மீது கண்டிப்பு காட்டுவதும், மற்றவர்கள் மீது பிழை பிடிப்பதும், பாய்ந்து விழுவதும் இவர்களை மற்றவர்களின் தயவிலிருந்து தள்ளிவைக்கும்.

1 comment:

Nilarasigai said...

how to recover from it?