May 29, 2014

மோடி அரசின் ரகசிய அஜண்டா!

மே 30/2014: தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினம் பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சார்ந்த 20 க்கும் மேற்பட்ட கும்பல் அங்கு கூடியிருந்த மக்களை சரமாரியாக தாக்கியுள்ளது.                                     
தாக்குதலில் அர்ஷாத் (21) கையிலும், அமீன் (25) கழுத்திலும், மைதீன் (28), நூருல் அமீன் (21) ஆகியோருக்கு கையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. உயிருக்கு போராடி வரும் இவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
சிந்திக்கவும்: மோடி பதவி ஏற்றதும் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா கும்பல் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கலவரங்களை தைரியமாக நடத்த தொடங்கி விட்டனர். அம்மா ஆளும் தமிழகத்திலேயே இப்படி என்றால்  இந்தியாவின் மற்ற பகுதிகளை கேட்கவா வேண்டும்? 
பெங்களூரில் ஒரு சாமியார் முஸ்லிம் பள்ளிகளில் கூறப்படும் பாங்கு சத்தத்தை நிறுத்த வேண்டும் என்று சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ். வர்ணாசிரம இயக்கங்கள் எல்லாம் ஓரணியில் திரண்டு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.
மேலும் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவது, கஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்வது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது, பசுவதை தடுப்பு சட்டத்தை அமல் படுத்துவது, சிறுபான்மை மக்களுக்கு எதிரான கலவரங்களை நடத்தி அவர்களின் பொருளாதரத்தை சூறையாடி அவர்களை மனதளவில் அடிமைகளாக்கி தங்களது தாய் மதமான ஹிந்து மதத்திற்கு திரும்ப கொண்டு வருவது  இதுதான் மோடி அரசின் ரகசிய அஜண்டா.
இதற்க்கு ஆதரவாக செயல்பட நீதி துறை, உளவுத்துறை மற்றும் அரசு அதிகார வட்டத்தில் உள்ள நடுநிலையாளர்களை மாற்றி ஹிந்துத்துவா சிந்தனை படைத்த தங்களது ஆதரவாளர்களை கொண்டு வருவது இதுதான் மோடியின் வரும் 5 ஆண்டுகால திட்டம். மோடியின் கனவு பலிக்குமா? அல்லது இந்தியா ஒரு உடைவை நோக்கி நகருமா பொறுத்திருந்து பார்ப்போம். 
*மலர் விழி*

No comments: