1) இலங்கையில் நடக்கும் காமன்வெல்த்
மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 15
நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார் தமிழ் தேசிய விடுதலை இயக்க
பொதுச்செயலாளர் தியாகு. அவர் செவ்வாய் கிழமை மாலை மருத்துவமனையில் உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டார்.
2). இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த்
மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்க கூடாது, தமிழக மீனவர்கள் இலங்கை
கடற்படையினரால் தாக்கப்படுவது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி, திராவிடர் கழகம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
அருகே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
3). திருவாரூர் மாவட்டம்,
முத்துப்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய நகரம் சார்பில்
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து
பட்டினி போராட்டம் பேரூராட்சி அலவலகம் அருகில் நடைபெற்றது. போராட்டத்தில் இலங்கை தமிழருக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவத்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன.
4). இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த்
மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என மத்திய அரசை
வலியுறுத்தி, செங்கல்பட்டு அம்பேத்கர் சட்டக் கல்லூரி
மாணவர்கள் 5 பேர், 5வது நாளாக திங்கள்கிழமை உண்ணாவிரதப்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
5). இலங்கையில் நடைபெறம் காமன்வெல்த் மாநாட்டில்
இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, சென்னையில் மத்திய அரசு
அலுவலகங்களுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர்
கழகத்தினர் ஈடுபட்டனர்.
6). இந்தியா இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி சட்டமன்ற தீர்மானம் இயற்ற வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்து தமிழக வாழ்வுரிமை கட்சி அக்கட்சியினர் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6). இந்தியா இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி சட்டமன்ற தீர்மானம் இயற்ற வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்து தமிழக வாழ்வுரிமை கட்சி அக்கட்சியினர் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சர்வதேச போர் குற்றவாளி ராஜபக்சே தலைமையில் இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது. செங்கல்பட்டு பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடவேண்டியும்,தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.
- இலங்கை ராணுவத்தால் தினமும் திட்டமிட்டு தமிழக மீனவர்களை கைது செய்வதை மத்திய அரசு தடுத்திட வேண்டும். இலங்கை சிறையில் வாடும் அப்பாவி தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
- இந்திய அரசு இலங்கைக்கு எந்தவிதமான ராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது எனவும், போர்க்கப்பல்கள் வழங்கக்கூடாது எனவும், இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்ககூடாது. இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும.
இதுவெல்லாம் நடக்குமா?
No comments:
Post a Comment