Oct 18, 2013

பண மெத்தையில் படுப்பது என்பது எனது நீண்ட நாள் கனவு!.

Oct 19/2013: திரிபுரா மாநிலத்தில், சமர் ஆச்சார்ஜி என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்பண மெத்தையில் படுத்திருப்பது போன்று வெளியான டி.வி. காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அகர்தலா மாநகராட்சியின் 3 வார்டுகளில் மலிவு விலை கழிவறை அமைக்கும் பணி ஒப்பந்தம் எடுத்திருந்த அவர் அதன் மூலம் ரூ.2 கோடிக்கு மேல் லாபம் அடைந்தார். இந்த தகவலை அந்த டி.வி. நிகழ்ச்சியில் அவரே தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘பண மெத்தையில் படுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதை நிறைவேற்றுவதற்காக வங்கியில் இருந்து ரூ.20 லட்சத்தை எடுத்து மெத்தையாக மாற்றியதாக’’ தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ‘‘சில கம்யூனிஸ்டு தோழர்கள் நிறைய சொத்து இருந்தாலும் இல்லாதவர்கள் போல் பாசாங்கு செய்வார்கள். நான் அப்படி அல்ல’’ என்றும் குற்றம் சாட்டினார். இது. அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments: