Nov 24, 2012

உலகத்தையே வியக்க வைக்கும் சீனா!


Nov 25: உலகின் மிக பெரிய கட்டிடத்தை சைனா கட்ட உள்ளது. அந்த கட்டிடதிற்கு ஸ்கை சிட்டி (SKY CITY ) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டிடம் தற்போதைய உலகின் பெரிய கட்டிடமான பர்ஜ் துபாய்யை விட 10 மீட்டர் அதிகமாக இருக்கும். இந்த கட்டிடம் சைனாவின் ஹுனான் பிரதேசத்தின் கட்டப்பட இருக்கிறது.

இதில் உலக அதிசயம் ஒன்று நடக்க இருக்கிறது, இந்த கட்டிடம் வெறும் 90 நாட்களில் கட்டி முடிக்கப்பட உள்ளது. ஜனவரி 2013 இல் தொடங்கி மார்ச் 2013 இந்த கட்டிடம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் மொத்த உயரம் 838 மீட்டர் ஆகும்.

பர்ஜ் துபாய் கட்டடிடம் 2719 அடி உயரம் கொண்டது அதை கட்டி முடிக்க 5 வருடகாலம் ஆனது. ஆனால் சைனா கட்ட போகும் கட்டடம் 2749 அடி உயரம் கொண்டது வெறும் 90 நாட்களில் கட்டி முடிக்கப்பட இருக்கிறது.

சிந்திக்கவும்: சைனாவால் அது முடியும் அவர்கள் ஒலிம்பிக் போட்டியை நடத்திய விதத்தை வைத்தே அதை கணிக்க முடிகிறது. நாம நடத்திய காமன்வெல்த் போட்டியின் இலட்சணம் உலகமே சிரித்தது. உலகில் சீனாவுக்கு அதிக்கப்படியாக மக்கள் தொகையை கொண்ட ஒருநாடாக இருந்து கொண்டு ஒலிம்பிக்கில் ஒருதங்கம் வெல்ல தவம் கிடக்க வேண்டியது இருக்கிறது.

உகலம் முழுக்க சைனாவின் பொருட்கள் ஆக்கிரமித்துள்ளது. ஆனால் நம்ம பொருளாதார புலி மண்ணு மோகன் உள்நாட்டு உற்பத்தியை பெருக்கி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை கொடுத்து நாட்டை வளப்படுத்துவதை விட்டு பெப்சி, கொக்க கோலா, வால்மார்ட், இப்படி கார்பரேட் கொள்ளைகாரர்கள் இங்கே வந்து வியாபாரம் செய்து வேலையில்லாத மக்களுக்கு வேலை கொடுப்பான், இந்தியாவை வளப்படுத்துவான் என்று சாத்தான் போல் வேதம் ஓதுகிறார்.

SELF EMPLOY என்கிற சுய தொழில் செய்யும் நமது சிறுவணிகர்களின் வயிற்றில் அடித்து வேலையில்லா திண்டாட்டத்தை உண்டாக்க சதி செய்கின்றனர். மக்கள் விழிப்படைவார்களா?

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வேண்டிய விசயம்...
தகவலுக்கு நன்றி....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தகவலுக்கு நன்றி.

சேக்கனா M. நிஜாம் said...

வியக்கவைக்கும் தகவலுக்கு நன்றி !

தினபதிவு said...

மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
தினபதிவு திரட்டியில் இன்று அட்ராசக்க -சி.பி. செந்தில்குமார் சிறப்பு பேட்டி
http://www.dinapathivu.com/
தினபதிவு திரட்டி

Venkatesan said...

தகவலுக்கு நன்றி..!!