Apr 28, 2012

ரஞ்சிதாவின் அருளால் மடாதிபதியான நித்யானந்தா!

1) ரஞ்சிதாவுடன் ஆபாச லீலைகளை அரங்கேற்றிய நித்தியானந்தா மாடாதிபதி ஆனார்.

தமிழகத்தின் மிகப்பெரிய ஆதீனமாக கருதப்படும் மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீன பதவி வழங்கப்பட்டுள்ளது. அடுத்து காஞ்சி சங்கராச் சாரியாரின் இடத்தை பிடிப்பார் என்று நம்புவோம்.

2) குஜராத் முதல்வர் இனகலவர வெறியர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவது தொடர்பான கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
3) போலி ஆயுத இடைத்தரகரிடமிருந்து லஞ்சம் பெற்ற வழக்கில் நேற்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பா.ஜ.கவின் முன்னாள் தேசிய தலைவர் பங்காரு லட்சுமணனுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை.

4) அரசியல் கோமாளி சுப்ரமணியம் சுவாமி மீது அவமதிப்பு வழக்கைத் தொடரப் சென்னையை தலைமையிடமாக் கொண்டுள்ள  அட்வான்ஸ் ஸ்டாடஜிக் கன்சல்டிங் ப்ரைவட் லிமிடட். நிறுவனம் முடிவுச் செய்துள்ளது.

5) இலங்கையில் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை ஏப்ரல் 30-ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


6) ஏழை மீனவர் ஒருவர் ஒரே நாளில் கோடிஸ்வரர் ஆனார். கடலில் மீன் பிடிக்க சென்ற இவருக்கு உலகிலேயே விலை உயர்ந்த 380 கோல் ரக மீன்கள் சிக்கின. மீன்களிலேயே மிக உயர்ந்த ரக மீனாக இந்த மீன்கள்தான் கருதப்படுகின்றன.  இந்த மீனின் இதயப் பகுதி, "கடல் தங்கம்' என, அழைக்கப்படுகிறது. இந்த மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. பல வகையான மருந்துக்கள் தயாரிக்க இது பயன்படுகிறது.

4 comments:

Seeni said...

nalla seythi thokuppu!

Anonymous said...

ஆமாம் ஆமாம் , தன் பொண்டாடியோட அருளால் அறிஞ்ரான PJ போல

PUTHIYATHENRAL said...

வணக்கம் அனானி கருத்து சொல்லியதற்கு நன்றி. முஸ்லிம் அடிப்படை வாதிகளை சாடுவதற்கு தினமலர், தினமணி, முதல் ஆயிரக்கணக்கில் இணையதளங்கள் உள்ளன. அதனால் அரைத்த மாவை திரும்ப அரைக்க வேண்டாமே என்று பார்க்கிறோம். வேறு ஒன்றும் இல்லை நானானி நண்பரே.

உலகமே மோடியை பயங்கரவாதி என்று சொல்லும் போது நீங்களும் ஆம் என்று சொல்வதில் உங்களுக்கு என்ன வருத்தம். சங்கராச்சாரியையும், பிரேமானந்தா, நித்யானந்தா போன்றவர்கள் மதத்தை சொல்லி மக்களை ஏமாற்றுவதை குறிப்பிடுவதே இதன் நோக்கம். இவர்களை எல்லாம் பெரிய மகான் போல் நீங்கள் தூக்கி பிடிக்கலாம் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

நேதாஜியை பற்றி பேசினால் தவறு, வேலுநாச்சியாரை பற்றி பேசினால் தவறு, மருது சகோதரர்களை பற்றி பேசினால் தவறு, பகத்சிங்கை பற்றி பேசினால் தவறுதான். இவர்கள் எல்லாம் மண்ணின் மானம் காக்க தங்களை தந்தவர்கள். இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதற்காக தங்கள் இன்ன்யிர்களை கொடுத்த ஆயிரக்கணக்கான மாவிரர்களை கரும்புலிகளை பற்றி பேசினால் தவறுதான்.

யார் இந்த கயவர்கள் நிதியானந்தாவும், பிரேமானந்தாவும், மோடியும், சங்கராச்சாரியும், இவர்களை பற்றி எழுதினால் உங்களை வருத்தம் அடைய செய்வது எது? இதுவே எங்களது கேள்வி. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

PUTHIYATHENRAL said...

வணக்கம் தோழரே பொண்டாட்டியின் வழி காட்டுதலில் ஒரு பதவி கிடைத்தால், அல்லது அறிஜர் ஆனால் நல்லது தானே. அதை தானே நாம் வீடுகளில் சொல்வோம் இவர் வீட்டில் மதுரை ஆட்சி செய்கிறது அதன் அர்த்தம் மீனாட்சி ஆட்சி செய்கிறாள் என்று. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்றும் சொல்வோம். அது தவறல்லவே. ஆனால் ரஞ்சிதாவை நித்யானந்தா மனைவியாக்கட்டும் அதுவே எங்களது கோரிக்கையும். சும்மா துறவறம் வேஷம் போட்டு கொண்டு இதுபோல் பெண்மையை இழிவுபடுத்த வேண்டாம் என்பதே கருத்து.