Mar 15, 2012

இந்தியாவை புறக்கணிப்போம்! BOYCOTT INDIA!

March 16: தண்டிக்கப்படாத குற்றங்கள் என்ற பெயரில் சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கானொளியில் இடம்பெற்றுள்ள தமிழர் படுகொலை காட்சிகள் உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.  

அதில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் திட்டமிட்ட அடிப்படையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதும் காட்டப்படுகிறது.

இப்படியாக உலகமும் தமிழகமும் கொந்தளித்து கிடக்கும்போது தீரமானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று உண்மையிலேயே குரல் எழுப்புவது யார்? போலியாக நடிப்பவர்கள் யார் என்பதையும், தமிழ் நாட்டில் இருந்து கொண்டே தமிழ் மொழி பேசிக்கொண்டு சிங்களவனாக வாழும்  சுப்பிரமனிய சுவாமி குறித்தும் பார்ப்போம்.

உண்மையான உண்ணாவிரதம்: இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரி கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் 48 மணி நேர உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர். இன்று (15.03.2012) இரவு இந்த உண்ணாவிரதம் தொடங்குகிறது. கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் இதனைத் தெரிவித்தார்.

ஆர்பரிக்கும் மாணவர்கள் சக்தி: இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று சென்னை விவேகானந்தா கல்லூரி மாணவர்கள், அதுபோல் புதுவை சட்டக்கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
 
இந்தியாவை கிழித்து எறிந்த திருமாவளவன்:
பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை முற்றிலும் தமிழினத்திற்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேரவை தலைவரின் இருக்கைக்கு எதிரே சென்று அறிக்கையை கிழித்தெறிந்தார்.

தொடரும் இலங்கையின் ஆராஜகம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டு இருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீன்வலைகளை கடலில் அறுத்து வீசி  எறிந்தனர்.   உயிர் தப்பி வந்த 4 மீனவர்கள் படகுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.  இப்படியாக மானம் கேட்ட இந்தியாவிற்கு எதிராக இலங்கை தொடர்ந்து அராஜகம் புரிந்து வருகிறது.

நீலிகண்ணீர் வடித்த கனிமொழி: இலங்கையில் 40 ஆயிரம் அப்பாவி மக்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளதை அறிந்த பிறகும், நாம் எப்படி வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியும்?'' என, பார்லிமென்டில் தி.மு.க., எம்.பி., கனிமொழி, ஆவேசமாக கேள்வி எழுப்பியதன் மூலம், "மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியேறப் போகிறதா?' என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேவலமான கருணாநிதி: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடிக்க முற்பட்டால் நான் தீக்குளிப்பேன்,'' என பொதுக்கூட்டத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். ஈழத்தமிழர் படுகொலைக்கு, தமிழக மீனவர்கள் படுகொலைக்கு தீக்குளிப்பேன் என்று மனித உயிர்கள் சாகும் போது சொல்லாத கருணாநிதி ஒரு கல்கட்டிடத்துக்காக தீக்குளிப்பேன் என்று சொல்லி தன்னைவிட ஒரு கேவலமான பிறவி இருக்க முடியாது என்று நிருபித்துள்ளார்.

ஹிந்துத்துவா பயங்கரவாதி சூ சாமி: தமிழ் நாட்டிலே வசித்து கொண்டு, தமிழ் மொழி பேசிக்கொண்டு சிங்களவனுக்கு ஆதரவாக பேசுகிறார் சுப்பிரமனிய சுவாமி. ஈழத்திலே நடந்தது இன படுகொலை என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை.  ஒரு தொலைகாட்சி பேட்டியில்  உண்மைகளை மறைத்து ராஜீவ் படுகொலையை பேசி ஈழத்து இனப்படுகொலையை ஆதரிக்கும் திருபுவாதம் செய்கிறார் திருவாளர் சூ சாமி.

இந்தியா தனது நிலையை மாற்றி கொள்ள தயாராக இல்லை. எனவே ஒவ்வொரு தமிழனும் நம்மை தமிழன் என்றே அழைப்போம். இந்தியன் என்கிற அந்த வார்த்தையை சொல்ல, கேட்க நாராசமாய் இருக்கு. இந்தியாவை புறக்கணிப்போம். திருமாவளவன் பாராளுமன்றத்திலே ஈழமக்களுக்கு ஆதரவாக பேசும்போது 90 சதவீதம் பேர் அவையை விட்டு வெளியே சென்று விட்டார்கள். ஹிந்திகாரனுக்கு தமிழனை பற்றி கவலையில்லை.  தமிழர் விரோத இந்தியாவை புறக்கணிப்போம்!

49 comments:

Anonymous said...

யாழினி அக்கா அக்குவேறா ஆணி வேறா பிரிச்சி எடுத்து விட்டீங்க கயவர்கள் முகத்தை அடையாலப்படுத்தியமைக்கு நன்றி அக்கா. அன்பு தங்கை: விஜயா.

Anonymous said...

ini naanum indhiyan illai thamizhan
nandri
surendran

சதீஷ் செல்லதுரை said...

THANI TAMIL NADU VENDUM ENA THONDRUHIRATHU.

Anonymous said...

சரியா சொன்னீங்கள்.... தனி தமிழ் நாடு வேண்டும் என்றே உண்மையான தமிழர்களுக்கு தோன்றும்.

Anonymous said...

சிந்திக்க வைக்கிற பதிவு

சார் சேனல்-4 வீடியோ பார்க்கவே கொடூரமாக உள்ளது ...

த.ம 3

indianmuslim said...

சுப்பிரமணியன் சாமியின் சுப்ரபாதம்!

இந்நாட்டில் வாழும் இசுலாமியர்கள் தங்கள் மூதாதையர்கள் இந்துப் பாரம்பரியத்துக்குரியவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இசுலாமியர்கள் இவ்வுண்மையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்துச் சமூகத்தின் உறுப்பினராக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத இசுலாமியர்க்கு வாக்களிக்கும் உரிமை வழங்கக் கூடாது.

இந்தியாவில் எழும் தீவிரவாதத்திற்கு ஒரே மருந்து, ஒரு இந்து வீரதீர இந்துவாக மாறுவதே, இந்த மன நிலையை ஒவ்வொரு இந்துவிடமும் உருவாக்க வேண்டும்.

அ. காசிவிசுவநாதர் கோவிலில் இருக்கும் மசூதியை அப்புறப்படுத்து; இந்து நகரங்களில் இப்படியாக உள்ள 300 மசூதிகளை அகற்று.

ஆ. அரசியல் சாசனத்தின் பிரிவு 370அய் அகற்றுக. காஷ்மீரில் இந்து பண்டிட்டுகளுக்கு பனுன் காஷ்மீரை உருவாக்கு.

இ. சிவில் பொதுச் சட்டத்தை நடை முறைப்படுத்துக; சமஸ்கிருத மொழியை அனைவரும் கற்க வகை செய்க;

வந்தேமாதரம் பாடலைக் கட்டாயமாக்குக.

இந்தியாவை இந்து ராஜ்ஜியம் என அறிவிக்க, இந்த ராஜ்ஜியத்தில் இந்துக்கள் பெருமைமிக்க முன்னோடிகள் என அறிவித்துக் கொள்வர்.

ஈ. இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுதலை தடை செய்க:

இந்து மதத்திற்கு மீண்டும் மதம் மாறுதலைத் தடுக்கக் கூடாது.

உ. இந்து மனோபாவத்தை வளர்க்க முயலல்.


சனதாக் கட்சியின் தலைவர் சுப்ரமணியன் சுவாமி அவர்கள் தன் தேவ வாக்காகக் கொட்டியுள்ள இக்கருத்துகளை யாரோ ஒரு தனி மனிதனின் உளறல் என்று ஏற்றுக் கொள்ளலாமா?

விஷம் கக்கும் இப்பாசிச சொற்கள் வெறும் உளறலா? இதன் பின்னிருக்கும் அரசியல் என்ன?

சுப்பிரமணியன் சுவாமியின் இக்கருத்துகளுக்கு நம்மூர் கட்சிகள் எதுவும் வெளிப்படையாக எதிர்ப்பெதுவும் தெரிவிக்கவில்லை.

நம் பத்திரிகைகள் நம் வர்ண தர்மத்தைக் காக்கும் வகையில் மவுனிக்கின்றன.

மிகப் பெரிய அளவில் விமர்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பொதுவுடைமைக் கட்சிகள் ஏன் வாயைத் திறக்கவில்லை எனத் தெரியவில்லை.

இந்தத் தேசிய மவுனம் விளைவிக்கும் ஆபத்தை ஏன் எவரும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை?

ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுப்பிரமணியம் சுவாமி உதிர்த்த எந்த விஷயமும் புதியனவல்ல; இந்துத்துவா என்ற கோட்பாட்டை உருவாக்கிய வீரச வார்க்கரின் அனைத்து வார்த்தைகளின் மறுமதிப்பே இவை.

தொடர்ந்து கோல்வாக்கரின் Bunch of Thought என்ற நூலின் சாரமே சுப்பிரமணியன் சுவாமியின் இந்த அலசல்கள். கோல்வாக்கரின் இந்து ராஷ்டிரம் என்றால் என்ன என்ற ஆவணமும் இங்கே சுப்ரமணியன் சுவாமிக்குப் பயன்பட்டிருக்கிறது.

இந்நாட்டில் வாழும் இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள் இந்துக் கலாச்சாரத்தைப் போற்ற வேண்டும். இந்துத் தலைவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்; இல்லையெனில், எப்படி இவர்கள் இந்தியாவில் வாழலாம்; ?

எந்தச் சலுகையும் பெறாமல், ஏன் குடியுரிமைகூட இல்லாமல் வாழலாம்.

கோல்வாக்கரின் இந்துராஷ்டிராவின் ஒரு பகுதி இது.

மக்கள் முன் கையேந்தி வாக்கு கேட்கும் ஒரு கட்சியின் தலைவர், இவ்வளவு தைரியமாகப் பேச முடிந்ததே எப்படி?

அத்வானிகளும், சுஷ்மாக்களும், இக்கருத்தை நம்புபவர்கள் எனினும், உளமார ஏற்றுக் கொண்டவர்களே எனினும் வெளிப்படையாக சுப்பிரமணியன்சுவாமி கூறுமளவிற்கு இவருக்கு தைரியம் அளித்தது யார்?

பல்சமய நாட்டின் பன்முகத்தன்மை மறுத்து மத அடிப்படையிலான பெரும்பான்மையை உருவாக்கி ஓராட்சி உருவாக வேண்டும் என்பதை எந்தவித தயக்கமுமின்றி சுப்ரமணியன் பேசுகிறார்.

மதவாத அடிப்படையில் உருவாகும் அரசு பன்மையை மறுப்பது; ஒரு சிலரை ஒதுக்குவது; சமயச் சார்பின்மையும் சன நாயகமும் கேலிப் பொருளாவது; இவ்வாறான பாரதூர விவாதங்களை உருவாக்கும் இக்கருத்தை சமூகத்துள் புகவிடலாமா?

சட்டத்தின் ஆட்சி இதனை ஏற்கலாமா? கருத்துச் சுதந்திரம் பொது ஒழுங்கிற்கும், மக்களின் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் இவ்வகையான விமர்சனங்களை அரசு தடுக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டாமா?

அய்தராபாத் மசூதி குண்டு வெடிப்பிலும், மராட்டியத்தின் மாலேகனிலும், நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவாதிகளால் நிகழ்த்தப்பட்டன என்பதும்,
காஷ்மீர் தீவிரவாதமும், இந்தியாவுக்கு ஆபத்தை விளைவிப்பதே என்று நாளும் இந்து மதத் தீவிரவாத அமைப்புகள் அம்பலப்பட்டு வருகையில்,
இந்துக்களை ஒருங்கிணைக்க ஏற்கெனவே இந்து தீவிரவாதிகள் சொன்ன கருத்துகளை தன் கருத்தாக பேசி வரும் சுப்ரமணியன் சாமிகளை என்ன செய்வது? - தேவா (ஆதாரம்: சுப்ரமணியன் சாமியின் கட்டுரை
How to Wipe out Islamic Terror: Daily News and Analysis, Mumbai Edition) நாள்: 16.7.2011)

நன்றி: செப்டம்பர் 2011 மனித உரிமைக் கங்காணி
Reply

PUTHIYATHENRAL said...

//சிந்திக்க வைக்கிற பதிவு//

வணக்கம் தோழரே.. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

PUTHIYATHENRAL said...

தோழரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சுப்பிரமணியன் சாமி ஆர்.எஸ்.எஸ். காரர் அவர் அப்படித்தான் சொல்வார். பாரதிய ஜனதா கட்சி நேரிடையாக பேச முடியாததை ( ஏன் என்றால் ஒட்டு பொறுக்க வேண்டுமே) இவர் பேசுவார். மொத்தத்தில் தினமணி, தினமலர், சோ, சுவாமி இவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தமிழக ஊது குழல்கள்.

PUTHIYATHENRAL said...

தோழரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சுப்பிரமணியன் சாமி ஆர்.எஸ்.எஸ். காரர் அவர் அப்படித்தான் சொல்வார். பாரதிய ஜனதா கட்சி நேரிடையாக பேச முடியாததை ( ஏன் என்றால் ஒட்டு பொறுக்க வேண்டுமே) இவர் பேசுவார். மொத்தத்தில் தினமணி, தினமலர், சோ, சுவாமி இவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தமிழக ஊது குழல்கள்.

மர்மயோகி said...

இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் கண்டனத்திற்குரியவையே..
குஜராத்தில் நடந்த படுகொலைகளுக்காக மோடியை தண்டிக்க போவது எப்போது..உங்களுக்கெல்லாம் தமிழன் மட்டும்தான் மனிதனா?

Anonymous said...

அன்று ஆங்கிலேயனிடமிருந்து விடுதலை பெற்றோம். இனி "இந்தி நாட்டிலிருந்து" விடுதலை பெற போராட வேண்டும்

'பசி'பரமசிவம் said...

நான் இப்போது இந்தியன் இல்லை.
இனி எப்போதும் இல்லை.
நான் தமிழன் [என்றென்றும்].
தமிழன் வாழ்க! தனித்தமிழ்நாடு உருவாகட்டும்!
-தமிழன் பரமசிவம்.

Anonymous said...

உங்களது ஆற்றாமை புரிகிறது. அதற்காக இந்தியா மேல் ஏன் பாய்கிறீர்கள்? நீங்கள் புறக்கணிக்க வேண்டியது புலிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் தான். இந்தியாவை அல்ல. ராஜீவ் காந்தி ஒப்பந்தப்படி பிரபாகரன் நடந்திருந்தால் இந்நேரம் இலங்கையில் உள்ள அனைத்து தமிழர்களும் அமோகமாக இருந்திருப்பார்கள். இன படுகொலைக்கு ராஜபக்ஷ எந்த அளவுக்கு பொறுப்பு ஏற்க வேண்டுமோ அதே அளவு பொறுப்பு புலிகளும் அவர்கள் செய்த கொடூரமான செயல்களுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். இதை நீங்கள் பிரசுரிக்கிறீர்களோ இல்லையோ தெரியாது, ஆனால் உண்மை அது தான்.

Unknown said...

சிந்திக் துாண்டுகிறது ஆனால் எல்லாருக்கும் இப்பதிவு கிடைத்தால் சந்தோஷம்.

kamalakkannan said...

நீங்கள் இந்த பதிவில் பயன்படுத்தி இருக்கும் படத்தில் "toilet" நாடு என குறிப்பிட்டு இருப்பதை மிக வன்மையாக கண்டிக்கிறேன் , பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் எங்களை அவமனபடுத்துவதாக உணர்கிறேன் .தாய் தமிழ் உறவுகளை கொச்சை படுத்தும் தாய் தமிழ் நாட்டை "toilet" நாடு என விழிப்பதும் ,தரம் கெட்ட செயல் .

kamalakkannan said...

நீங்கள் இந்த பதிவில் பயன்படுத்தி இருக்கும் படத்தில் "toilet" நாடு என குறிப்பிட்டு இருப்பதை மிக வன்மையாக கண்டிக்கிறேன் , பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் எங்களை அவமனபடுத்துவதாக உணர்கிறேன் .தாய் தமிழ் உறவுகளை கொச்சை படுத்தும் தாய் தமிழ் நாட்டை "toilet" நாடு என விழிப்பதும் ,தரம் கெட்ட செயல் .

Anonymous said...

தமிழா உன் நிழல் ௬ட இனி இந்த பூமியில் பட அனுமதிக்கமாட்டார்கள் உனது கோழைத்தனத்தை மாற்று தீ குளித்து சாவதை விட[ மரணம் வரும் ஒருமுறை இதில் வாழ்த்தட்டும் உன் தமிழனின் தலைமுறை ] என்று நினைத்து தமிழகத்திலிருக்கும் தமிழ் விரோதி சுப்பிரமணியன் சாமி க்கு முதலில் மரணதண்டனை வழங்கி தொடங்கிவைத்துவிடு நாடாளுமன்றத்தில் தமிழன் பேசும் போது கவனமாக கேட்பார்கள் பரிசிலனை பண்ணுவார்கள்

Anonymous said...

தமிழா உன் நிழல் ௬ட இனி இந்த பூமியில் பட அனுமதிக்கமாட்டார்கள் உனது கோழைத்தனத்தை மாற்று தீ குளித்து சாவதை விட[ மரணம் வரும் ஒருமுறை இதில் வாழ்த்தட்டும் உன் தமிழனின் தலைமுறை ] என்று நினைத்து தமிழகத்திலிருக்கும் தமிழ் விரோதி சுப்பிரமணியன் சாமி க்கு முதலில் மரணதண்டனை வழங்கி தொடங்கிவைத்துவிடு நாடாளுமன்றத்தில் தமிழன் பேசும் போது கவனமாக கேட்பார்கள் பரிசிலனை பண்ணுவார்கள்

Anonymous said...

சேனல்-4 வீடியோ பார்க்கும் தமிழா உன்ரத்தம் கொதிக்கவில்லையா உனது சகோதரி நிர்வாணமாக கிடப்பதைக்கண்டு ரசித்து பார்க்கின்றாயா இல்லை தமிழ் விரோதிகளை கருவறுக்க நினைக்கின்றாயா ஒன்றுபடு ஒன்றுபடு ஒன்றுபடு முதலில் சுப்பிரமணிசாமியை தூக்கிலிடு

Anonymous said...

பாய்ஸ்,
உங்களுக்கு இந்தியாவைப் பிடிக்காது என்றால் பாகிஸ்தானுக்குப் போகலாமே.

Anonymous said...

இனியும் இந்தியன் என்ற எண்ணம் தமிழருக்கு வேண்டுமா? இனியாவது தனது தனித்துவத்தை உணர்ந்து தமிழன் என்று சொல்லப் பழகுவானா?

PUTHIYATHENRAL said...

//நான் இப்போது இந்தியன் இல்லை. இனி எப்போதும் இல்லை.//

வணக்கம் பரமசிவம் அண்ணா இதுதான் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய உணர்வு. எவ்வளவு கேவலமானவர்கள் ஹிந்திகாரர்கள்.. ஒரு இனத்துக்கு நடந்த இன அழிப்பை பற்றி பேசும் போது அவையை விட்டு எழுந்து போகும் அளவுக்கு அவர்களின் மனிதாபிமானம் இருக்கிறது. கொல்லப்பட்டது தமிழர்கள் இல்லையா அதனால்தான் இந்த மவுனம். இதே ஒரு மராட்டியன் செத்திருந்தால் மொத்த மும்பையும் இன்று தீபிடித்து எறியும், இதே ஒரு கன்னடன் செத்திருந்தால் இன்று இந்தியாவோடு கர்நாடகா இல்லை என்று சொல்லி இருப்பார்கள் கர்நாடகத்துகாரர்கள்...

தமிழனோ அவன் அக்கா தங்கையை பிடித்து இழுத்தாலும் மானம் கெட்டு தன் உயிர்காக்க போராடுவான் என்பதை நிருபித்து கொண்டு இருக்கிறான்.

PUTHIYATHENRAL said...

வாருங்கள் தோழர் மர்மயோகி உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

தமிழில் கிராமபுரங்களில் ஒரு பழமொழி உண்டு பூடம் தெரியாமல் சாமி ஆடுகிறான் என்று அது போல்தான் இருக்கிறது தோழர் மர்மயோகியின் கருத்து. குஜராத்தில் நடத்த இனபடுகொலை குறித்து சிந்திக்கவும் நிறைய பதிவுகளை வெளியிட்டுள்ளது. மோடி ஹிட்லர் ராஜபக்சே மூன்று பேரும் ஒரு இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை குறித்தும் பதிவு இட்டிருக்கிறோம்.

தமிழர்களுக்கு மட்டும்தான் அவர்கள் பிரச்சனைகளை மட்டும் பற்றியே நாம் பேசவில்லை. இந்தியா உடையும் ஆனால் உடையாது என்கிற பதிவை படியுங்கள். அதில் ஏன் உடைய வேண்டும் என்கிற காரணங்களில் மோடியும், காஷ்மீரும், ஹிந்துதுவாவும் ஒரு அங்கம். அதனால் உங்கள் சிந்தனையும் கருத்து ஓட்டங்களும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருக்கிறது. நீங்கள் தவறுதலாக புரிந்துணர்வு கொண்டிருக்கிறீர்கள். தமிழன் தமிழனுக்காக குரல் கொடுப்பது தவறா? உங்கள் கருத்துக்களை, சிந்தனைகளை மறுபரிசீலனை செய்யுங்கள். நன்றி.

PUTHIYATHENRAL said...

சிந்திக் துாண்டுகிறது ஆனால் எல்லாருக்கும் இப்பதிவு கிடைத்தால் சந்தோஷம்.

வாருங்கள் தோழர் எஸ்தர் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. சிந்திக்கவும் இணையம் எல்லோருக்கும் அனுமதி அளித்துள்ளது இதில் வரும் பதிவுகளை நீங்களும் வெளியிடலாம். இதற்க்கு எங்களிடம் அனுமதி பெறத்தேவையில்லை. இந்த செய்தியை யார்வேண்டுமானாலும் பதிவாக போடலாம். எழுத்து ஆக்கம் என்பது மக்கள் சொத்து. அது மக்களுக்காக என்றிக்கும்போது. நன்றி.

PUTHIYATHENRAL said...

//பாய்ஸ், உங்களுக்கு இந்தியாவைப் பிடிக்காது என்றால் பாகிஸ்தானுக்குப் போகலாமே..//

அனானிகளுக்கு பதில் சொல்வதில் இருந்தாலும்.... ரொம்ப கேவலமான சிந்தனை படைத்தவர்களுக்கு சொல்லியே ஆகவேண்டும்.. ஏன் இந்தியாவை விட்டு தமிழர்கள் பாகிஸ்தான் போக வேண்டும்.... இங்கே என்ன பதிவு எழுதப்பட்டுள்ளது அதற்க்கு என்ன கருத்து சொல்கிறோம் என்கிற ஒரு விபரம் கூட அனானிக்கு இல்லை. அனானி உங்களுக்கு தமிழ் நாடு பிடிக்கவில்லை என்றால் ஹிந்தி நாட்டுக்கு ஓடிருங்களேன். நாங்கள் ஏன் எங்கள் சொந்த நாட்டை விட்டு விட்டு பாகிஸ்தானுக்கு ஓடவேண்டும். அவன் யார்? அவனிடம் நாங்கள் ஏன் போகவேண்டும். எங்கள் நாடு தமிழ் நாடு எங்கள் மொழி தமிழ் மொழி. நாங்கள் பாகிஸ்தான் போயி வேறு மொழி கற்று வாழ எங்களுக்கு தேவையில்லை. வந்தேறிகள் எல்லாம் தமிழ் நாட்டை விட்டு ஓடுங்கள்.

nstamizhan said...

நாம் தமிழர்கள் ஊர்க்க சொல்வோம் இந்த மண்ணுக்கு . தனி தமிழ்நாடு வேண்டும் .
ப்ரமாதம் யாழினி சகோதிரி .....

Anonymous said...

//இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் கண்டனத்திற்குரியவையே.. குஜராத்தில் நடந்த படுகொலைகளுக்காக மோடியை தண்டிக்க போவது எப்போது..உங்களுக்கெல்லாம் தமிழன் மட்டும்தான் மனிதனா?//

இது தமிழர்களுக்குள் வேறுபாட்டை பிளவுகளை உண்டாக்க துடிக்கும்.. ஹிந்துத்துவா பார்பனர்களின் கருத்தே... எப்போது எல்லாம் தமிழர்கள் குறித்து பேசப்படுகிறதோ அப்போது குஜராத்தை அதோடு முடிச்சி போடுவது. குஜராத் இனப்படுகொலையை எந்த தமிழனும் ஆதரிக்கவில்லை. அதை எதிர்த்தே உள்ளனர். தமிழர்களிடம் அப்படி பட்ட ஒரு மத வெறி இல்லாததால்தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்கள் தமிழகத்திலே கால்பதிக்க முடியவில்லை. இதை மர்மயோகி புரிந்து கொண்டால் சரி.

தேவையில்லாமல் முஸ்லிம்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதுபோல் வந்து இங்கே சிண்டு முடிந்து விடவேண்டாம். உங்களை போன்றோர் நிச்சயம் மர்மமான யோகிகலான ஆர்.எஸ்.எஸ். கூட்டமே. ஆசாத் - நெல்லை.

Anonymous said...

வணக்கம் மர்மயோகி... நீங்கள் மர்ம யோகியோ அல்லது கர்ம யோகியோ என்ன கருமாந்திரமோ...... தேவையில்லாத ஒருகருத்தை பதிந்து குழப்பத்தை ஏற்படுத்துகிறீர் என்பது மட்டும் விளங்குது. ஆமா நீங்கள் யாரு... ஏன் அந்நியன் ரெமோ மாதிரி.. ஹா... ஹா.... ஹா....

Anonymous said...

//வந்தேறிகள் எல்லாம் தமிழ் நாட்டை விட்டு ஓடுங்கள்.//

அரபியாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு பஞ்சம் பொழைக்க வந்த லெப்பைகளையும் மரைககாயர்களையும் ராவுத்தர்களையும் இந்தி பேசும் வடக்கத்தி முஸ்லீம்களையும் தமிழ்நாட்டை விட்டு துரத்த சொல்கிறீர்களா?

Anonymous said...

//அரபியாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு பஞ்சம் பொழைக்க வந்த லெப்பைகளையும் மரைககாயர்களையும் ராவுத்தர்களையும் இந்தி பேசும் வடக்கத்தி முஸ்லீம்களையும் தமிழ்நாட்டை விட்டு துரத்த சொல்கிறீர்களா?//

அனானி கைபர் போலன் கணவாய் வழியா இந்தியாவுக்குள் நுழைந்து அதை நாசம் செய்த பார்பன வந்தேறி கூட்டங்களைதான் இந்தியாவை விட்டே துரத்த வேண்டும். அந்த பண்டாரங்கள் வந்துதான் இந்தியாவை நாசம் செய்தது.

Anonymous said...

அனானி உனக்கு வரலாறும் தெரியல ஒரு மண்ணும் புரியல சவுதிகாரன் இந்தியாவுக்கு வந்தான சரியான லூசுயா நீ. இங்கே உள்ள முஸ்லிம்கள் எல்லாம் பார்பன ஹிந்துத்துவா ஜாதிகொடுமை தாளாமல் மதம் மாறியவர்கள். ஒரு அரேபியனும் இந்தியாவில் குடியேறியது இல்லை. எல்லாம் இந்த மண்ணின் மைந்தர்கள்.

இப்னு அப்துல் ரஜாக் said...

சில அரசியல் காரணங்களுக்காக சித்து விளையாட்டில் ஈடுபட்டுள்ள அரசை குறை சொல்லும் போக்கை ஆதரிக்கும் அதே வேலை ஒட்டு மொத்த இந்தியாவை குறை சொல்வதை ஏற்கமுடியாது.

Anonymous said...

அப்புறம் ஏன் தமிழனை எல்லாம் லெப்பைகளும் மரைக்காயர்களும் தம்பலவன் தம்பலச்சி என்று பிரித்து பேசுகிறார்கள்?

eelatamilan said...

.
.


click the link and read படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்...

எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

ஏன் எத்தனை பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது

பிஞ்சுகள் பலி எடுக்கப்பட்டார்கள். இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள். .

இதில் மிக வேதனைக்குறிய விடையம்

இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் என்பதுதான்

click the link and read சிசுக்களின் கோரப் படுகொலை

.

மர்மயோகி said...

இலங்கையில் நடந்த போர் குற்றங்களுக்காக இந்தியாவைப் புறக்கணிப்போம் என்று சொல்லக்கூடிய தைரியம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது..வைகோ சீமான் நெடுமாறன் போன்றோரை கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் ஓடுங்கள்..
சொந்த நாட்டிலேயே அநியாயமாக கொன்று குவிக்கப்பட்ட குஜராத் முஸ்லிம்களுக்காக எவனும் குரல் கொடுக்கவில்லை எனும்போது, இலங்கையில் முஸ்லிம்களை கொன்ற விடுதலைப்புலிகளை நாங்கள் ஏன் ஆதரிக்கவேண்டும்? இடம் கொடுத்த தமிழ் நாட்டிலேயே பல்வேறு வன்முறைகள், கொள்ளைகள், கொலைகள் (ராஜீவ்காந்தி படுகொலை உட்பட) செய்த விடுதலைப்புலிகளுக்காக நாங்கள் ஏன் குரல் கொடுக்கவேண்டும்..

'பசி'பரமசிவம் said...

தமிழனைத் தமிழ்நாட்டை விட்டு ஓடச் சொல்லுகிறார் ஒரு மர்மயோகி!!!

இனியாவது தமிழன் விழித்தெழுவானா?

இந்தியன் said...

மர்மயோகி அரஅல சொன்னது மிகசரி.
இலங்கையில் இந்து, முஸ்லீம் மக்கள் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளாக்கிய புலிகளின் செயல்களை இந்தியாவில் அனுமதிக்க முடியாது.

மர்மயோகி said...

உங்களுக்கெல்லாம் வெள்ளைக்காரன் அவனது சேனல் 4 இல் ஒளிபரப்பினால்தான் தெரியும்...இன்னும் உங்களுக்கு அடிமை புத்தி போகவில்லை..தெகல்காவில் ஒளிபரப்பிய உண்மைகளுக்காக என்றாவது மோடி என்ற பயங்கரவாதியை தூக்கில் போடா சொல்லிய தைரியசாலி - அல்லது உண்மையான மனிதாபிமானி எவனாவது உண்டா?

Anonymous said...

/இலங்கையில் நடந்த போர் குற்றங்களுக்காக இந்தியாவைப் புறக்கணிப்போம் என்று சொல்லக்கூடிய தைரியம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது..வைகோ சீமான் நெடுமாறன் போன்றோரை கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் ஓடுங்கள்..//

இப்போது நடந்து கொண்டிருப்பது புலிகள் குறித்த விடயம் அல்ல. அங்கு பொது மக்கள் கொல்லப்பட்ட விடயம் குறித்தது.

வைகோவும், சீமானும், நெடுமாறனும் உங்களுக்கு என்ன செய்தார்கள்.

உங்களுக்கு இஸ்லாமும் தெரியல உங்கள் பிளாக்கை பார்த்தால் அது புரியுது சினமா செய்திகளை அள்ளி தொளித்திருப்பதில் இருந்து.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், sdpi போன்ற அமைப்புகள் ஈழத்து மக்களின் படுகொலை குறித்து எதிர்ப்பும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளன. அது மட்டுமல்ல ராஜீவ் படுகொலையில் சிறையில் இருக்கும் நளினி போன்றோர்களை விடுதலை செய்ய தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.

இலங்கையில் இருந்து வரும் இஸ்லாமிய இணையதளங்கள் என்று சொல்லிக்கொண்டு சில இஸ்லாமிய செய்திகளை காப்பி செய்து பேஸ்ட் செய்து போடும் இணையங்கள் எல்லாம் ஹிந்துதுவாவினுடையதே என்று எண்ண தோன்றுகிறது. அவர்களது எழுத்துக்களும் சிந்தனைகளும் முழுக்க முழுக்க பிரமான மேட்டுகுடி ஹிந்துதுவாவின் சிந்தனனையை ஒத்திருக்கிறது.

கிழக்கு முஸ்லிம்களை இனசுத்திகரிப்பு செய்த புலிகளின் வீர..??? வரலாறு
2006
ஆகஸ்ட் -01-மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம்
1990
ஆகஸ்ட்- 01 அக்கரைபற்று 8 முஸ்லிம்கள் படுகொலை
ஆகஸ்ட்- 03 காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை
ஆகஸ்ட்- 05 அம்பாறை முல்லியன்காடு, 17 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட்- 06 அம்பாற 33முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட் -12 சமாந்துரை 4 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட்- 12 ஏறாவூர் 116 பேர் முஸ்லிம் கிராம படுகொலை
ஆகஸ்ட்- 13 வவுனியா 9 முஸ்லிம்கள் படுகொலை

உங்கள் கணக்கு படி புலிகள் 290 கொன்றிருக்கிறார்கள்.. இது நிச்சயம் வருத்தன்கூடிய ஒன்றே. இதை மனிதாபிமானம் உள்ள ஒவ்வொருவரும் எதிர்த்துள்ளனர். இப்போது இறுதி உத்தத்தில் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டது.

அந்த யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை பற்றி உங்களுக்கு பேச மனமில்லாமல் இருக்கலாம் ஆனால் அதை மற்றவர்கள் பேசக்கூடாது என்று சொல்வது உங்களை பற்றி மிகவும் கேவலமாக எண்ண தோன்றுகிறது.

சீமானும், நெடுமாறனும், வைகோவும் அவர்களை கொல்ல சொன்னதுபோல் அவர்களை தமிழ் நாட்டை விட்டு ஓடச்சொல்வது உங்களின் அறிவீனத்தையே காட்டுகிறது.

அப்பாவிமக்கள் பல்லாயிரக்கணக்கில் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டார்கள் என்பதை பற்றி பேசினால் ... மோடி செய்தானே அதைப்பற்றி ஏன் பேசவில்லை என்று திரிபுவாதம் செய்வது. அதை பேசவில்லை என்பதால் இதை பேசகூடாது என்று ஒரு முஸ்லிமும் எண்ணமாட்டான்.

உங்களுக்கு அவர்கள் மேல் உள்ள வெறுப்பு நீதி செலுத்துவதற்கு தடையாக இருக்க வேண்டாம் என்கிற அடிப்படை திருக்குர்ஆன் வசனம் கூட புரியா சினிமா செய்திகளை போட்டுவரும் திருவாளர் மர்ம யோகி முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல் வந்து செய்தி இட்டு தமிழ்நாட்டு மக்களிடம் குழப்பத்தை உண்டாக்க திட்டமிட்டு இருக்கிறார்.

இது போன்று இப்னு தாகிர் என்கிற பெயரில் ஒருவர் இணையங்களில் குழப்பம் செய்து வருகிறார்.

மேலும் மர்ம யோகி கூடங்குளம் அணு மின் எதிர்ப்பாளர்களை தீவிரவாதி என்றும் சொல்கிறார். இது நிச்சயம் இந்து முன்னனணி ராமகோபாலனின் வார்த்தை என்று புரிகிறது.

நட்புடன்: ஆசாத்: நெல்லை.

Anonymous said...

//படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்...
எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின//.

இப்போது நடந்து கொண்டிருப்பது புலிகள் குறித்த விடயம் அல்ல. அங்கு பொது மக்கள் கொல்லப்பட்டது குறித்தது. வைகோவும், சீமானும், நெடுமாறனும் உங்களுக்கு என்ன செய்தார்கள். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், sdpi போன்ற அமைப்புகள் ஈழத்து மக்களின் படுகொலை குறித்து எதிர்ப்பும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளன. அது மட்டுமல்ல ராஜீவ் படுகொலையில் சிறையில் இருக்கும் நளினி போன்றோர்களை விடுதலை செய்ய தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.

இலங்கையில் இருந்து வரும் இஸ்லாமிய இணையதளங்கள் என்று சொல்லிக்கொண்டு சில இஸ்லாமிய செய்திகளை காப்பி செய்து, பேஸ்ட் செய்து போடும் இணையங்கள் எல்லாம் ஹிந்துதுவாவினுடைய செயல் திட்டத்தின் அடிப்படையில் அல்லது இஸ்லாமிய செய்திகளை காப்பி செய்து போட்டு கொண்டு முஸ்லிம்கள் போல் தங்களை காட்டி கொண்டு முஸ்லிம்களுக்கு ஹிந்துக்களுக்கும் சண்டை முடித்து விடும் வேலையை பார்க்கும் சில விசம இணையதளங்கள் வருசையில் வருபவை என்றே எண்ண முடிகிறது.

ஈழத்திலே ஒரு பாரிய இன அழிப்பு நடந்திருக்கிறது என்பதை பற்றி உலகமே பேசும் போது இந்த சூழலில் புலிகள் செய்த கொடுமைகள் பற்றி பேசி அந்த மக்களுக்கு நீதி கிடைக்க கூடாது என்று ஒரு முஸ்லிமும் எண்ண மாட்டான். அப்படி எண்ணுபவன் முஸ்லிமாகவும் இருக்க மாட்டான். எப்போதும் நியாய தர்மங்களை பேசுபவனே உண்மையான முஸ்லிமாக, மூமினாக இருக்க முடியும். நமக்கு உலகம் முழுவதும் பாதிப்பு நிகழ்ந்தது அதை யாரும் பேசவில்லை அதனால் அவர்களுக்கு பதிப்பு நடக்கும்போது நாம் வேடிக்கைபார்போம் என்று சொல்வதை இஸ்லாம் அங்கீகரிக்க வில்லை.

உங்களுக்கு ஒருவர்மேல் கொண்ட வெறுப்பு அவர்கள் மீது நீதி செலுத்த தடையாக இருக்க வேண்டாம் என்று இஸ்லாம் படித்து தருகிறது. எங்கே அப்பாவி மக்கள் கொல்லப்பட்டாலும் அவர்கள் நமக்கு எந்த உதவியும் செய்யாவிட்டாலும் குரல்கொடுக்க வேண்டும் இது ஈமானின் ஒரு அங்கம். பதிக்காப்பட்ட மக்களை பற்றி பேசுவதை, எழுதுவதைகூட தடுக்க முன்னர் நடந்த கோரசம்பவங்களை நினைவுபடுத்தி தடுப்பது மனிதாபிமானம் அற்ற செயல்.
ஒரு முஸ்லிம் நீதி செலுத்துபவனாக இருப்பான்.

இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாத்திற்கும் வரலாறு முழுவதும் இடையூறுகளை கொடுத்துவந்த யூதர்கள் இஸ்லாம் கொன்று ஒழித்து விடவில்லை. யூதர்கள் இஸ்லாத்தின் ஆட்சியின் கீழ்தான் உலகில் நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதை வரலாறு பதிந்துள்ளது. மக்கா வெற்றிதான் உலகில் ரெத்தம் இன்றி பெறப்பற்ற ஒரு வெற்றியாகும். நபி அவர்கள் ( இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் அவர்கள் மீது) மக்காவில் இஸ்லாமிய படைகள் நுழையும் முன்னரே அறிவித்தார்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம், ஒரு குறிப்பிட்ட பிரதேசங்களில் இருப்பவர்கள் மீதும் உத்தம் இல்லை என்று. உலகிலேயே கத்தி இன்றி ரெத்தம் இன்றி ஒரு உத்தம் வெல்ல பட்ட ஒரு வரலாறுகளுக்கு சொந்தக்காரர்கள் முஸ்லிம்கள்.

அவர்களையும், இஸ்லாத்தையும் இழிவுபடுத்த வேண்டாம். உங்களது அபத்தமான எழுத்துக்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களில் ஈட்டியை பாய்ச்ச வேண்டாம். குழந்தைகளையும், முதியவர்களையும், நேயாளிகளையும், பெண்களையும், போரில் ஈடுபாடாத மக்களையும், சரணடைந்த மக்களையும் இஸ்லாம் கொல்லச்சொல்ல வில்லை. அப்படி இலங்கை அரசு கொன்றது அநீதி, அதை நீங்கள் மறுக்கும் விதமாக இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஒரு பதிவை இட்டு அதில் சீமானை, நெடுமாறனை, வைகோவை தீவிரவாதி என்று சொல்லி இருக்கிறீர்கள். அவர்கள் இலங்கையில் நடக்கும் விடுதலை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள். மற்றபடி புலிகள் செய்த அத்து மீறல்களை கொடூரங்களை நிகழ்த்த சொல்லி இவர்கள் ஒன்றும் அவர்களுக்கு ஆணை பிறப்பிக்க வில்லை.

உங்களது எழுத்துக்களும் சிந்தனையும் மனிதாபிமானம் அற்றது. இதை முஸ்லிம்களுக்காக சொல்வது போல் சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் கருத்துக்களை நியாய உணர்வுள்ள ஒரு முஸ்லிமுக்கும் உடன்பாடு கிடையாது.

அன்புடன்: ஆசாத்: நெல்லை.

தமிழ் மாறன் said...

//உங்களுக்கெல்லாம் வெள்ளைக்காரன் அவனது சேனல் 4 இல் ஒளிபரப்பினால்தான் தெரியும்...இன்னும் உங்களுக்கு அடிமை புத்தி போகவில்லை..தெகல்காவில் ஒளிபரப்பிய உண்மைகளுக்காக என்றாவது மோடி என்ற பயங்கரவாதியை தூக்கில் போடா சொல்லிய தைரியசாலி - அல்லது உண்மையான மனிதாபிமானி எவனாவது உண்டா?//

மர்மயோகி கருத்து வெறும் விதண்டாவாதம்... யார் சொன்னாலும் நல்ல விசயத்தை எடுத்து கொளுங்களேன் இதை போல்தான் இன்னொரு கூட்டம் சொல்லும் தெகல்காவை ஏற்று கொள்ல வேண்டாம் என்று.... மோடியை தூக்கில் போடாத நிகழ்ச்சிக்கு யார் காரணம் நீங்கள் அதை கேட்க்க வேண்டியது நீங்கள புகழும் இந்திய அரசிடமே... அவர்களுக்கு அதை செய்ய திராணி இருக்கிறதா இல்லையே.. அதை குறித்து பேச அங்குள்ள உளவு நிறுவனங்கள் தயாரா?

உங்கள் புத்திதான் ஒரு சிறு வட்டத்திற்குள் அடிமைப்பட்டு கிடைக்கிறது. நீங்கள் தலையை விட்டு விட்டு வாலை பிடிப்பவர் என்பது இதில் இருந்து தெளிவாகிறது.

தமிழ் மாறன் said...

//சில அரசியல் காரணங்களுக்காக சித்து விளையாட்டில் ஈடுபட்டுள்ள அரசை குறை சொல்லும் போக்கை ஆதரிக்கும் அதே வேலை ஒட்டு மொத்த இந்தியாவை குறை சொல்வதை ஏற்கமுடியாது.//'

இந்தியா என்று சொல்வது அதன் ஆட்சியாளர்களையே குறிக்கும்.... அந்த வல்லாதிக்க சிந்தனைபடைத்த ஆட்சியாளர்கள் ஹிந்தி ஆதரவு சிந்தனை படைத்தவர்களாகவும், அதே நேரம் தமிழர் விரோத சிந்தனை படைத்தவர்களாகவும் இருப்பதால் தமிழர்கள் இந்தியாவை புறக்கணிப்போம் என்பது சரியே.

தமிழ் மாறன் said...

//இலங்கையில் நடந்த போர் குற்றங்களுக்காக இந்தியாவைப் புறக்கணிப்போம் என்று சொல்லக்கூடிய தைரியம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது.//

நாங்கள் தமிழ்நாட்டு தமிழர்கள் எங்களை மதிக்காத, எங்களின் உணர்வுகளை மதிக்காத எங்களது மீனவர்கள் 500 கொல்லப்பட்டும் அதை வேடிக்கை பார்க்கும், முல்லை பெரியாறு முதல் காவேரிவரை அநீதம் இழைக்கும், கூடங்குளத்தில் மக்களை கொல்லத்துடிக்கும் ஒரு பயங்கரவாத மக்கள் விரோத அரசிற்கு நாங்கள் ஏன் பயப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தைரியம் தானால் வரும்.

//வைகோ சீமான் நெடுமாறன் போன்றோரை கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் ஓடுங்கள்..//
ஐயா வைகோ சீமானை எல்லாம் கூட்டிகிட்டு நாங்கள் ஏன் ஓடவேண்டும்.. நங்கள் தமிழர்கள் தமிழ் நாட்டில்தான் இருப்போம் ஹிந்து முன்னணி ராமகோபாலனின் குரலாக, பார்பன தினமலரின் குரலாக, சுப்பிரமனிய சாமியின் குரலாக ஒலிக்கும் நீங்கள் வேண்டுமானால் ஓடுங்கள் எங்களுக்கு அவசியம் இல்லை.

//சொந்த நாட்டிலேயே அநியாயமாக கொன்று குவிக்கப்பட்ட குஜராத் முஸ்லிம்களுக்காக எவனும் குரல் கொடுக்கவில்லை //

யாரும் குரல் கொடுக்க வில்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது..நீங்களே குரல் கொடுத்ததாக சொல்லும் தெகல்கா யாரு, குஜராத் மக்களுக்காக நீதி கேட்டு கடைசிவரையில் போராடிய மனித உரிமை போராளியார் அந்த பெண்ணின் பெயர் தெரியுமா உங்களுக்கு, தமிழ் நாட்டில் குஜராத் மக்களுக்கு குரல் கொடுத்த மனித உரிமை ஆர்வலர்கள் யார் என்றாவது தெரியுமா அவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் இல்லை. இப்படி மத வெடி பிடித்து மனித நேயம் மறக்காதீர்கள்.

//இலங்கையில் முஸ்லிம்களை கொன்ற விடுதலைப்புலிகளை நாங்கள் ஏன் ஆதரிக்கவேண்டும்?//

என்னையா மர்ம யோகி... உங்களை யாரு விடுதலை புலிகளை ஆதரிக்க சொன்னது... அங்கே இப்போது விடுதலை புலிகள் இருக்கிறார்களா? நடந்த இனப்படுகொலை குறித்து நீதிவிசாரணை தேவை என்று உலகம் முழுவதும் குரல் கொடுக்கும் போது அதைப்பற்றி உங்களால் பேசமுடியாத அளவுக்கு நீங்கள் கல் நெஞ்சகாரராக இருந்தால் அது உங்களோடு வைத்து கொள்ளுங்கள் அதை எல்லோரும் செய்யவேண்டும் என்று திணிக்காதீர்கள். மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் குரல் கொடுக்கத்தான் செய்வார்கள்.

//இடம் கொடுத்த தமிழ் நாட்டிலேயே பல்வேறு வன்முறைகள், கொள்ளைகள், கொலைகள் (ராஜீவ்காந்தி படுகொலை உட்பட//

ராஜீவ் காந்தியை பற்றி பேசாதீர்கள் அவர் ஈழத்திலே அமைதி படை என்கிற வன்முறை படை நடத்தி அதன் மூலம் கொல்லப்பட்ட, கற்பழிக்கப்பட்ட பெண்களை பெற்றியும் பேசவேண்டும். ராஜீவ் காந்தி என்கிற தனி மனிதனால் கொல்லப்பட்ட உயிர்கள் எத்தனை அதை பற்றி மட்டும் ஏன் பேச மறுக்கிறீர்கள். அவர் ஒரு நாட்டின் பிரதமர் என்றால் என்னவேண்டுமானாலும் செய்யலாமா?

Anonymous said...

//தமிழனைத் தமிழ்நாட்டை விட்டு ஓடச் சொல்லுகிறார் ஒரு மர்மயோகி!!!//

தோழரே இவர் மர்ம யோகி இல்லை அந்நியன் ரெமோ... புரியுதா... எப்படி வேடம் மாறி மாறி...

புனிதப்போராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நல்வுள்ளம் கொண்ட நன்மக்கள் அனைவர்களின் மீதும் உண்டாவட்டுமாக...அப்பாவிமக்கள் கொல்லப்படும் பொழுது தட்டிக்கேட்பவன் சிறந்த மாவீரன்..எதிப்புக்குரல் கொடுப்பவன் சிறந்த வீரன் .., இதை மறைக்க நினைப்பவன் ஒடுக்க நினைப்பவன் தமிழ் நாட்டில் பிறந்தவனாக இருந்தாலும் இவன் தமிழர்குல விரோதி இப்படிபட்டவர்களை களை பிடுங்க ஒவ்வொரு தமிழனும் முன்வரனும்..,,, சீமான் நெடுமாறன் வைகோ போன்றவர்கள் தமிழன் முஸ்லிமாக இருக்கக் ௬டாது என்ற மனநிலையில் இவர்கள் இருக்கின்றார்களா என்று வருத்தப்படுகின்றோம் இந்தியா இலங்கை மற்ற நாட்டில் வாழக்கூடிய முஸ்லிம் மக்கள் கொல்லப்படும் போது இவர்களின் வாய் திறப்பதில்லை இதை மறுக்க முடியாது சமுக சிந்தனை கொண்டவனுக்கு மதம் முக்கியமாக இருத்தல் ௬டாது குற்றம் சிங்களன் செய்தாலும் புலிகள் செய்தாலும் குற்றம் குற்றம்தான் தமிழ் தாய் வயிற்றில் பிறந்த முஸ்லிம்களை புலிகளினால் கொல்லப்படும்போது யாரும் கண்டிக்கவும் இல்லை தட்டிக்கேட்பதற்க்கும் நாதி இல்லை இன்று நம் இலங்கைத் தமிழ் சொந்தங்களை கொல்வதைக்கண்டு கண்ணீர் வடிக்காத முஸ்லிம்கள் இருக்கமாட்டார்கள்..,, சேனல் 4 வீடியோவை கண்டும் வாய் திறப்பதற்கு கூட மனமில்லாமல் இருப்பவர்கள் தமிழகத்திலும் கூட இருக்கத்தான் செய்கின்றனர் காலச்சக்கரம் சுழன்று கொண்டுதான் இருக்கின்றது ...தமிழனுக்கு விடிவு காலம் வரும் ஏக இறைவன் நம்மை ஒன்றுபடுத்துவான் தமிழ்தாய் மக்களாக வாழ்வோம் ஏக இறைவன் நல்லருள் புரியட்டுமாக...,,,,,.இவன்..புனிதப்போராளி

Anonymous said...

நியாயமான புனித போராளியின் கருத்தை நான் வரவேற்கிறேன்.

by....அப்பாஸ்

தமிழ் மாறன் said...

//சமுக சிந்தனை கொண்டவனுக்கு மதம் முக்கியமாக இருத்தல் ௬டாது//

புனித போராளியின் இந்த கருத்தை நானும் ஏற்று கொள்கிறேன்.

Anonymous said...

நல்ல சிந்தனையை தூண்டும் பதிவு. நன்றி யாழினி. செல்வி.

Anonymous said...

போபுலர் பிரான்ட் ஒப் இந்தியா நெல்லை!இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் ஆதரிக்கக் கூடாதாம்-ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது,ஆதரிக்க வேண்டும் - என்கிறது பி.ஜே.பி.a>please go to visit this link. thank you.