Feb 11, 2012

ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்!

FEB 12: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடந்தோரும் "ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்" என்ற தலைப்பில் தேசிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்நிகழ்ச்சியில் ஆரோக்கியமான வாழ்விற்கு உடல்பயிற்சி இன்றியமையாதது  என்பதை  மக்களிடம் எடுத்து சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி இலவசமாக யோகா, உடல்பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

இதன் தமிழகத்தின்  துவக்க நிகழ்ச்சி கோவையில் நடை பெற்றது. இதில் கோவை மாநகர மேயர் செ. மா. வேலுச்சாமி அவர்களும், கோவை அரசு மருத்துவமனை சிவப்பிரகாசம் அவர்களும் பங்கு பெற்றனர்.


இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் ராஜா உசேன் வரவேற்புரை வழகினார் சிறப்பு விருதினரக மாநில தலைவர் இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டார். பெரும் திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.  இதில் யோகா வகுப்புகள் மற்றும் உடல்பயிற்சிகள் ஆகியவை பொதுமக்களுக்கு இலவசமாக கற்று கொடுக்கப்பட்டது.

சிந்திக்கவும்: யோகாசனம் என்கிற மக்கள் சொத்தை வைத்து ஒரு கூட்டம் காசு பார்க்கும் இந்த தருணத்தில் இதுபோல் இதை மக்களுக்கு இலவசமாக சொல்லிக்கொடுப்பது ஒரு சிறப்பான விடயம்தான். கார்பரேட் சாமியார்கள் யோகாசனத்தை வைத்து பலகோடிகள் சம்பாதித்து வெளிநாடுகளில் சொந்தமாக தீவும், ஹெலிஹாப்ட்டரும் வாங்கி இருக்கும் போது இந்த கலையை மக்களுக்கு இலவசமாக கற்று கொடுக்கும் இவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
*அபூசுமையா*

7 comments:

Seeni said...

nalla visayam thaan!

Seeni said...

nalla visayam thaan!

Anonymous said...

நல்ல விடயம்தான் ஆதரிப்போம்.

Anonymous said...

ஏன் டா அம்பி... பாபா ராம் தேவ் பற்றி போட்ட நீங்கள். ஸ்ரீ.... ஸ்ரீ... ரவிசங்கர ஐயரை மறந்திட்டேளே!! அவா ஒன்னும் இவாளுக்கு குறைசவ இல்ல.

Anonymous said...

நிச்சயமாக ஆரோக்கியமாக இருக்க உடல்பயிற்ச்சி ரொம்பவும் தேவை. மேலை நாடுகளில் உள்ளவர்கள் உடல்பயிற்ச்சின் அவசியத்தை உணர்ந்ததால்தான் ஒவ்வொரு ஊர்களிலும் 24 HOURS FITNESS என்று உடல்பயிற்ச்சி நிலையங்களை வைத்துள்ளனர். BY: Raja

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

Mohamed Salih said...

vaalthukkal! Nalla visayam