Jan 18, 2012

தினமலர் நாளிதழை செருப்பால் அடித்த மக்கள் தலைவர்!

கூடங்குளம்  அணு மின்நிலைய எதிர்ப்பு மக்கள்  தலைவர் உதயகுமார், "தினமலர்' நாளிதழுக்கு, ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். 

இதை "தினமலம்' செய்தியை யாரும், "சீரியசாக' எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று தலைப்பிட்டு மானம் கெட்ட தினமலர் செய்தியாக  வெளியிட்டு இருந்தது.

அதில் அவர் கூறியிருப்பதாவது: அடிப்படையற்ற, ரசனையற்ற, யோக்கியமற்ற செய்திகளை வெளியிடும், "தினமலம்' கருத்துத்தாளை (வியூஸ்பேப்பர்), அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டிக்கிறது.


கொள்கையற்ற, ஒழுக்கமற்ற, பத்திரிகை தர்மம் அற்ற இந்த மஞ்சள் பத்திரிகை, தமிழ் மக்களின் உரிமைக்கும், மதிப்புக்கும் எதிராக செயல்படுகிறது. "அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாட்டுப் பணம் வந்தது எப்படி?' என்ற தலைப்பில், இந்த, உபயோகமற்ற, கருத்துத்தாள், செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், எங்களுடன் தொடர்பு வைத்துள்ள சில கிறிஸ்துவ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு, அமெரிக்காவிலிருந்து, 54 கோடி ரூபாய் நிதி உதவி வந்துள்ளதாகக் கூறியுள்ளது. இந்த, மூளையற்ற, முதுகெலும்பற்ற, தினமலம் நாளிதளின்' அசிங்கமான, அபத்தமான கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரம் எதுவும் தரவில்லை. அறிவுள்ள, பண்புள்ள எவரும், இந்த, நாற்றமெடுக்கும் பத்திரிகை செய்தியை, "சீரியசாக' எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

எங்கள் இயக்கத்தின், மூன்று முக்கிய இயக்கவாதிகளின் வீட்டு முகவரி, வீட்டு தொலைபேசி எண், மொபைல் எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றை, 2011, நவம்பர் 24ம் தேதி, இந்தப் பத்திரிகை, முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டது. இதன் மூலம், இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்கள் வீட்டு உறுப்பினர்களையும் தொந்தரவு செய்து, மிரட்டுவதற்காக தன் வாசகர்களைத் தூண்டிவிட்டுள்ளது.

இதை எதிர்த்து, பிரெஸ் கவுன்சில் ஆப் இந்தியா, தமிழ்நாடு மாநில மனித உரிமை கமிஷன் மற்றும் தேசிய மனித உரிமை கமிஷன் ஆகியவற்றிடம், இயக்கத்தின் சார்பில் புகார் கொடுத்து, இந்த நாளிதழ் செய்திகளை தினமும், "எடிட்' செய்து, அச்சிட்டு, வெளியிடுவோர் மீது, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இப்போது, இந்த நாளிதழ், புகழ் பெற்ற கிறிஸ்துவ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பெயரை வெளியிட்டு, மேலும் விஷத்தைக் கக்கி, வாந்தி எடுத்துள்ளது. இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரின் இ-மெயில் முகவரியையும் வெளியிட்டுள்ளது.

வெட்கமற்ற, சர்ச்சைக்குரிய, இந்த பத்திரிகை நிறுவனம், மனசாட்சி இன்றி, வேறு சிலரின் தூண்டுதல் பேரிலும், லாப நோக்கத்திலும் செயல்படுகிறது. தமிழ் மக்களின் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும், உரிமைகளையும் அவமதிக்கும் இந்த, "தினமலத்தை' நாங்கள் கண்டிக்கிறோம். கிறிஸ்துவர்கள், அவர்களின் இயக்கங்கள், மற்ற சிறுபான்மை மதத்தினரின் நலனுக்கு எதிராகச் செயல்படும், இந்த, "தினமலத்தின்' எதேச்சாதிகாரப் போக்கையும் நாங்கள் கண்டிக்கிறோம்.

அணுசக்தி போன்ற அபாயகரமான, ஆபத்து விளைவிக்கக் கூடிய இந்த பத்திரிகையின் வெளியீடுகளை, தமிழ் மக்கள் அனைவரும் புறக்கணிக்குமாறு கோருகிறோம். இந்த, "தினமலத்தை' போல அல்லாமல், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், ஒரு சில காந்தீயக் கொள்கைகளுடன் இயங்கி வருகிறது. எந்த இந்திய அல்லது சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து நாங்கள் எந்த நிதியும் வாங்கவில்லை.

நட்புடன்: உதயகுமார்.
போராட்டக் குழு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்.

36 comments:

Anonymous said...

தினமலத்தை ஒவ்வொரு தமிழனும் செருப்பால அடிக்க வேண்டும்

... ராஜா

கோவி.கண்ணன் said...

அந்த நாளிதழ் பிய்ந்த செருப்படிக்கும் தகுதியானதே

VANJOOR said...

சுட்டியை சொடுக்கி படியுங்கள்



காணத்தவறாதீர்கள். உலகிலேயே மிக பெரிய, மிக சிறிய திருகுரான் பிரதிகளின் அரிய சிறுகண்காட்சி விடியோக்கள் .
மழலைகள், சிறார்கள் குரான் ஓதும் விடியோக்கள்.


.

Anonymous said...

very very worst blog

கபிலன் said...

"தினமலர் நாளிதழை செருப்பால் அடித்த மக்கள் தலைவர்!"

கடைசி வரைக்கும் அந்த மக்கள் தலைவர் யாருன்னே சொல்லலியே!

உதயகுமார்னு நீங்க சொன்னா சிரிக்குறத தவிர வேறு வழியில்லை !

Anonymous said...

Mr. Kabilan avarkale, inge makkalthaan thalaivarum

கபிலன் said...

" Anonymous said...
Mr. Kabilan avarkale, inge makkalthaan thalaivarum"

ஓஹோ..அப்படீங்களா....

அப்போ "மக்கள் தலைவர்" என்பது ஒருமையில் இருக்கு...அதனால, அதற்குப் பதிலாக "மக்கள் தலைவர்கள்" என்றோ "மக்களாகிய தலைவர்கள்" என்றோ மாற்றிக்கொள்ளுங்கள்.

இலக்கணம் இடிக்குது பாருங்க...

Anonymous said...

தென் தமிழ்நாட்ல தினமலர்தான் நம்பர் ஒன் அதிகம் விற்பனையாகிறது. தெரியுமா!

Anonymous said...

Only stray pigs are found more on streets,than cows...

சோழன் கொடி said...

செருப்படி வாங்கினாலும் அந்த நாய்க்கு புத்திவரும்னு நினைக்கிறிங்க்?

Anonymous said...

தினமலர் தனது புலனாய்வு நிருபர்களை அனுப்பி ...தகவல் திரட்டி ...செய்தி போடலாமே....உண்மையின் உரைகள் ..இப்படி எழுதுவதை என்று நிறுத்துமோ.இந்த லட்சணத்துல ந ம்பர் 1 , நாளிதல் ....எந்த ஊருல?

நற்குணத்தான் said...

intha dinamalam dr ramadoss pathi thappa seithu potta athukku pala peru cooment ezuthui hit kidiakmnu poduvan appa yaarum intha dinamlathin unmai mukathai pathi pesamal irunthathu varuthathukku uruiyathu

PUTHIYATHENRAL said...

வணக்கம் கபிலன் நலமா, கூடங்குளம் அணு எதிர்ப்பு போராட்டம் என்பது மக்கள் போராட்டம் அதனாலேயே அப்படி இடுகைக்கு தலைப்பிடப்பட்டது. அந்த மின் அஞ்சலை உதயகுமார் அவர்கள் எழுதினாலும் அது அந்த மக்களின் கருத்தாகவே பார்க்கப்படுகிறது. நன்றி.

PUTHIYATHENRAL said...

வணக்கம் சோழன்குடி சரியா சொன்னீங்கள். தினமலருக்கு திரு. உதயகுமார் எழுதி இருந்த மின்னஞ்சலில் அவர் குறிப்பிட்டிருக்கும் செய்திகள் அனைத்தும் அப்பட்டமான உண்மை என்பதை தினமலரை வைத்து பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழனும், தமிழர் இயக்கங்களும் அறியும்.

PUTHIYATHENRAL said...

வணக்கம் கோவி.கண்ணன் அவர்களே சரியா சொன்னீங்கள் அதற்கும் கூட அவர்களுக்கு தகுதி உண்டா என்றே தோன்றுகிறது. ஈழத்தமிலருக்காக தீக்குளித்து இறந்த செங்கொடியை பற்றி காதல் தோல்வி என்று அவதூறு பரப்பிய கேவலாமான பிறவிகள்தானே இவர்கள்.

rajesh said...

உதய குமார் மக்கள் தலைவர எப்போ???????
அப்போ உதிமுக.
அப்புறம் இப்போ டிடனியும் என்ன விலை போகுது

rajesh said...

கோயம்புத்தூர் , மதுரை , PONDY ,
இந்த 3 ஊருல தினமலர் தான் no:1 பேப்பர் தெரியுமா ??

Siraju said...

தினமலரை அடித்து காலுக்கு பயன்படும் செருப்பை அசிங்கப்படுத்த வேண்டாம்

Siraju said...

சுப. உதயகுமார் மக்கள் தலைவர் இல்லை. தினமலர் முதலாளி கோபால்ஜி எனும் தமிழக விஷ்வ இந்து பரிஷத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்தான் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்கள் வாழும் இந்த நாட்டிற்க்கு தலைவர்......????????

ஆனந்த் said...

//தென் தமிழ்நாட்ல தினமலர்தான் நம்பர் ஒன் அதிகம் விற்பனையாகிறது. தெரியுமா!

இப்போது பெரும்பாலோனோர் குடிக்கின்றார்கள், குடிப்பது சரி என்று வாதிட முடியுமா?

Anand said...

பெயர் தெரியாதவர்கள் கருத்துகளை தயவு செய்து வெளியிடாதீர்கள்.

PUTHIYATHENRAL said...

வணக்கம் ஆனந்தன் நலமா, கருத்து சுதந்திரம் என்பதால் கருத்துக்கள் எங்கள் கவனத்துக்கு வராமலேயே தானியங்கி முறையில் பிரசுரம் ஆகும்படி செய்துள்ளோம். பெரும்பான்மையானவர்கள் நல்ல முறையிலேயே கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். கருத்துக்களே இல்லதாத சிலர் இதுபோல் மோசமாக கருத்துக்களை பகிர்ந்து விடுகிறார்கள். அனானியோட கருத்து நீக்கப்பட்டு விட்டது. வருகைக்கு நன்றி. மீண்டும் வாருங்கள்.

PUTHIYATHENRAL said...

//கோயம்புத்தூர் , மதுரை , PONDY , இந்த 3 ஊருல தினமலர் தான் no:1 பேப்பர் தெரியுமா?//

வணக்கம் ராஜேஷ் நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்கள் விழிப்புணர்வு கொள்கிறார்கள். சீக்கிரம் தினமலர் ஒரு வீழ்ச்சியை நோக்கி போகும். .....எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....

PUTHIYATHENRAL said...

சரியா சொன்னீங்க சிராஜ் சார்.... செருப்பாவது மனிதனுக்கு பிரோஜனப்படுகிறது ஆனால் நாம் காசு கொடுத்து வாங்கும் தினமலரால் என்ன பயன். அதில் எழுதப்படும் கேவலமான செய்திகளை பற்றி அறியும் அறிவு கழுதைக்கு இருந்தால் அது கூட இந்த நாளிதழை தின்னாது. சொந்த கையில் சூனியம் வைக்கணும் என்றால் தமிழர்கள் தினமலரை வாங்கி படிக்கட்டும் வேறு சொல்ல வார்த்தைகள் இல்லை.

PUTHIYATHENRAL said...

வணக்கம் ரமணின் மாணிக்கம் உங்கள் வருத்தம் நியாயமானதே. வருகைக்கு நன்றி மீண்டும் வாருங்கள்.

PUTHIYATHENRAL said...

ஒருவருக்கொருவர் நளினமாக கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். தமிழர்கள் என்பவர்கள் நீண்ட வரலாறும், பண்பாடும், நாணயமும், அறிவும், மனிதாபிமானமும் உள்ளவர்கள். மற்ற மாநிலத்தவர்களோடு ஒப்பிடும் போது இன வெறியோ, மொழி வெறியோ, மதவெறியோ இல்லாத ஒரு மேன் மக்களாகவே நாம் திகழ்கிறோம். அதை என்றும் பாது காப்போம்.

தமிழ் மாறன் said...

செருப்பால் அடித்தாலும் இந்த தினமலம் திருந்தாது. இதை செருப்பால் அடித்தால் அது செருப்புக்குத்தான் கேவலம். அந்த அளவுக்கு கீழ்த்தரமான ஒரு பத்திரிக்கைதான் இந்த தினமலர். இப்படி ஒரு கீழ்த்தரமான ஒரு பத்திரிக்கையை மஞ்சள் பத்திரிகை என்று திரு.உதயகுமார் சொன்ன வாசகம் சரிதான்.

மலர்விழி said...

உதயகுமார் அவர்கள் தினமலரை பற்றியும் அதன் தரக்குறைவான பத்திரிகை தர்மத்தை பற்றியும், இதுவரை அது நிகழ்த்தி வந்த கேவலமான அனுகுமுறைகள் பற்றியும் தெளிவா சொல்லி இருக்கிறார். அவருக்கு எனது மனமாந்த நன்றிகள்.

Anonymous said...

IF YOU ARE HAVING RIGHT TO CALL DINAMALAR AS DINAMALAM, THAT NEWSPAPER IS HAVING THE RIGHT TO PUBLISH THE NEWS AGAINST UDAYAKUMAR'S MOVEMENT.
SO MANY PEOPLE BELIEVE, IT IS A PAID MOVEMENT.
WHY THEY DID NOT DO ANYTHING IN KALPAKKAM?
YOU CAN NOT ACT AS A DICTATOR.
YOU CAN SEE THE LETTERS TO DINAMALAR NEWS ALSO.
SOMEBODY CAN SAY THE SAME WORD TO PUDIYA THENDRAL ALSO.

GOPALASAMY

Anonymous said...

We don't want dinamani and dinamar.../

Anonymous said...

Down ...... Down.../ dinamani and dinamalar ........../down ///////// down

Anonymous said...

அந்நிய நாட்டு எடுபிடி மற்றும் பயங்கரவாத நாய்களா தினமலர் பற்றி பேச, எழுத் உங்களுக்கு என்னங்கடா தகுதி இருக்கு..நக்குற நாய்க்கு தெரியுமா செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் உள்ள வித்தியாசம்..வெளிநாட்டு கிறிஸ்தவ் நாய்ங்க இந்த நாட்ட மதம் மாற்ற இங்க உள்ள சர்ச்சுக்கு, உதயகுமார் மாதிரி அமெரிக்க எடுபிடிகளுக்கு அனுப்புற பணம்தான் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புக்கு செலவாகுதுன்னு எல்லாருக்கும் தெரியும்.

Anonymous said...

உதயகுமார் யாரு? அந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்கள் யாரு எல்லோரும் கிருஸ்தவர்களா? ஆர்.எஸ்.எஸ். மற்றும் வர்ணாசிரம ஹிந்து பார்பன வெறியர்களின் அட்டூழியம் தாங்காமல்தானே கிறஸ்தவர்கள் மதம் மாறினார்கள். என்ன நியாம் பேசுகிறாய் நீ... நாய் நன்றி உள்ள பிராணி நாங்களும் எல்லோருக்கும் நன்றியுடன் நடந்து கொள்பவர்கள் உங்களை மாதிரி நாட்டை வெள்ளைகாரனுக்கு காட்டி கொடுக்கவில்லை... இங்கே படித்து விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி அமெரிக்க ஆத்து அம்பி ஆகவில்லை. நாசாவில் வேலை செய்யவில்லை புரிந்ததா..... உனக்கு எங்கே புரிய போவுது. நாங்கள் இங்கேயே மீன் பிடித்து கடலை நம்பி வாழ்பவர்கள்.... ஏன் இவ்வளவு பேசுறியே இந்த அனுவுலையை காஞ்சி சங்கர மடத்துக்கு பக்கத்திலோ அல்லது ஸ்ரீ ரங்கத்திலோ கட்ட வேண்டியதுதானே ஏன் கடலை நம்பி பிழைப்பு நடத்தும் எங்கள் வயிற்றில் அடிக்கிறீர்கள்.

அன்புடன் - அந்தோணி ராஜ்.... கூடங்குளம்.

Anonymous said...

இங்கே படித்து பட்டம் வாங்கி விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி அமெரிக்க ஆத்து அம்பி ஆகி நாசாவில் வேலை வேலைபார்த்து நாட்டுக்கு பெருமைதேடித்தரும் பார்பன அம்பிகளும் அவர்களது வர்ணாசிரம கூட்டங்களும் ஆகிய தினமலர், தினமணி இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை கட்ட ஆவேசமாக குரல் கொடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கூடங்குளம் பகுதிகளில் கடல் தொழிலை நம்பி இருக்கும் இலட்ச்சக்கனக்கான மீனவர்களின் பிரச்சனை இது. கூடங்குளம் அணு மின்நிலையம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்று தீர்மானிக்கும் உரிமை அந்த பகுதிகளில் தினம் தினம் கடலை நம்பி வாழும் எங்களுக்கே உள்ளது. சென்னையில் வாழும் தினமலர் ஐயர் வகைறாக்கள் இதை தீர்மானிக்க கூடாது.

சூசை பர்னாந்து - உவரி.

இருதயம் said...

எனது புதிய கட்டுரையை கொஞ்சம் வாசியுங்கள்

"கடல் சார் வாழ்வும் - கூடன்குளமும் - ஒரு ஆய்வு"

http://naanoruindian.blogspot.com/2012/01/blog-post_28.html

Anonymous said...

gud.....talk to ur friends who are buying that newspaper to stop.....talk to ur relatives as well....to stop buying it...u may hav diff opinion abt any politician in this country....but never allow that newspaper take advantage frm that....wat else?