Aug 30, 2011

ஆர்ப்பரித்த தமிழகம்! அடங்கிப்போன இந்தியா!

Sep 01, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. தூக்குதண்டனை நிறுத்தி வைப்பு தமிழர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் தூக்கு பற்றிய செய்திகளும், அதற்க்கு எதிரான தமிழர்களின் ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டங்களும், சில ஆரிய வந்தேறிகளாகிய சோ, சுப்பிரமணிய சுவாமி, ராமகோபாலன், மற்றும் தமிழக காங்கிரஸ் குள்ளநரிகளின் ஓலங்களையும் மீறி தமிழர்கள் ஜெயித்திருக்கிறார்கள்.

இது வெறும் 8 வாரங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தற்காலிக தடைதான். இதை நிரந்தரமாக மாற்றி அந்த மூவரையும் வெளியே கொண்டுவருவது தமிழர்களின் கடமை. ஈழத்திலே தமிழர்கள் கொல்லப்படும் போது தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் ஒரு வீரிய போராட்டத்தை முன்னெடுத் திருந்தால் அந்த இன அழிப்பை தடுத்திருக்கலாம். அது மட்டுமல்லாது தமிழர்களால் உருவாக்கப்பட்ட தனிதமிழ் ஈழத்தையும் காத்திருக்கலாம்.

சிங்கள பெரியனவாத பேய்களால் நசுக்கப்பட்ட ஒரு சிறு இனம் தன்னை தற்காத்துக்கொள்ள, மானத்தோடு வாழ தொடங்கிய போராட்டத்தை அடியோடு அழிக்க இந்தியா கனரக ஆயுதங்களை கொடுத்து உதவி தமிழர்களின் முதுகில் குத்தியதை வரலாறு மன்னிக்காது. இப்படி ஒரு இழிவான காரியத்தை செய்ததன் மூலம் இந்தியா "தமிழ் நாடு என்று ஒரு மாநிலம்" தன்னோடு இல்லை என்பதை வெளிபடுத்திய நிகழ்வாகவே மானம் உள்ள தமிழர்கள் இதை கருதுகின்றனர்.

தமிழகத்திலே இருந்தான் அடுத்தகட்ட ஈழப்போர் கட்டி அமைக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின், இலஞசர்களின் கனவு. நாம் சரியான நேரத்தில் உதவி செய்யாததன் காரணமாக 35 , வருடகால ஒரு போராட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட தனிதமிழ் ஈழத்தை இழந்து தமிழர்கள் அகதிகள் முகாம்களில் அல்லல்படுகின்றனர். நாம் வீணாக தேசியம் பேசி, போலி தேசபக்தி பேசி நம் இனமக்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்தவர்களாக இருந்து விட்டோம் என்பதே மறக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை ஆகும்.

ஆனால் ஆர்.எஸ். எஸ். பாசிச ஹிந்துத்துவா இயக்கத்தை சார்ந்தவர்கள் தேசபக்தி அற்று தங்கள் இயக்கத்தை வளர்க்கவும், பொருளாதார மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகளை கட்டவிழ்த்து விடவும், தங்கள் இயக்கத்தினருக்கு தீவிரவாத பயிற்ச்சிகள் அளிக்கவும், பொய்யான தகவல்களை சொல்லி இஸ்ரையில் நாட்டுக்கு பயணம் மேற்கொண் டார்கள்.  இவை அனைத்தும் பாரதிய ஜனதா ஆட்சி காலத்தில் நடந்தேறியது.  இப்போதும் இஸ்ரையிலின் உளவு நிறுவனமான மொசாத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

இப்படி இருக்க ஒரு நாட்டின் பழமையான இனமும், ஆறரை கோடி மக்கள் தொகையை கொண்ட ஒரு இனமுமான தமிழினத்தின் சகோதரர்கள் இலங்கையில் கொல்லப்படும் போது அதை போலி தேசியம், தேசபக்தியை காரணம் காட்டி ஒழித்து விடநினைக்கும் கோடரி கொம்புகளும் தமிழகத்தில் இருகிறார்கள். இவர்கள் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும் கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் முன்தோன்றிய மூத்த குடி தமிழர்கள் என்பதை. எனவே தமிழ் மக்கள் மதமாச்சாரியங்களை மறந்து தமிழர்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபட்டு செயல்பட்டு சிங்கள கயவர்களிடம் இருந்து தமிழ்மக்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.
நட்புடன் - புதியதென்றல்.

17 comments:

Anonymous said...

இது தமிழர்களுக்கு கிடைத்த மிகபெரிய வெற்றியே! மென்மேலும் தமிழர்கள் வெற்றி பெறுவார்கள்! நன்றி! நன்றி!

Anonymous said...

முதுகில் குத்தியவர்களுக்கும் துரோகிகளுக்கும் காலம் சரியான பதில் கொடுக்கும்! தமிழினத்தை அழிக்க நினைத்தவர்கள் அழிக்கப்படுவார்கள். ஈழ மறவன்.

தமிழன் said...

ஒன்றிணைந்து போராடினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகின்றது. இதுபோல் வருங்காலத்தில் செயல்பட்டு வெற்றிவாகை சூடவும், தமிழர்கள் நலனுக்காக உயிர் தியாகம் செய்த தமிழ் சொந்தங்களின் கனவாகிய தனிதமிழ் ஈழம் அமையவும் தொடர்ந்து போராடுவோம்.

தமிழன் said...

நல்லபதிவு ரொம்பவும் உக்கிரமா சொல்லி இருக்கீங்கள். வாழ்த்துக்கள்!

மாசிலா said...

Thanx for this excellant post.Thanx for this excellant post.

Unknown said...

கட்சிகளுக்கும் அப்பாற்பட்டு இந்த கும்பல் எடுக்கும், சுயநல குள்ள நரி நடவடிக்கைகளை தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்து புரிய வைத்து இந்த வந்தேறி,கூட்டத்தை முடக்க வேண்டியதே நாம் செய்ய வேண்டியதாகும்.

Anonymous said...

It's very nice post. Thank u. Tamilan

Anonymous said...

India thamilargalin viroothi yenru solrreengalaa?????,,

Anonymous said...

சிங்கள கைகூலி சுப்ரமணிச்வாமி ,சாமியார்களின் கைக்கூலி ராமகோபலன், இஸ்ரையின் கைக்கூலி நரேந்திர மோடி இந்த மூன்று அயோகியபயல்களையும் தூக்கில் போட்டுவிட்டு மற்றவர்களை யோசிக்கலாம். நன்றி சிந்திக்கவும் இவன் செந்தாமாரை

Anonymous said...

பிஜே அவர்களது சிறப்பான கருத்துக்களையும் அவரது புலமையையும் பாராட்டி ஒரு பதிவு வரைந்துள்ளேன்.

பி ஜைனுலாபுதீன் என்ற அருட்கொடை

உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்

Anonymous said...

இப்னு ஷாகிர் என்ற பெயரில் வரும் ஒரு பார்பனனை கவனிக்கிறீர்களா? நெஞ்சு பதறி நாம் ஈழ மக்களின்
நிலை குறித்து விவாதித்து கொண்டிருக்கும்பொழுது இந்த ஈனப்பட்ட பிராமணன் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல். வேறு ஒரு டாப்பிக்கை கொண்டு வந்து சப்ஜெச்டையே கொச்சைப்படுத்துகிறது வீரியம் இழக்க வைக்கிறது.

- தலித் மைந்தன்

Anonymous said...

மிகச்சரியாக சொன்னீங்க தலித் மைந்தன். இந்த பிராமணர்களுக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு. எல்லா
விசயத்திலும் கலந்து கொள்வதுபோல் கலந்து கொள்வார்கள். ஈழப்பிரச்னை என்றாலோ, தனித்தமிழர்
பிரச்னை என்றாலோ, ஆர். எஸ். எஸ்., பிஜேபி, போன்ற வர்ணாசிரம வானரங்களால் ஆதி இந்தியர்களான
தலித்களுக்கோ, கிருத்துவர்களுக்கோ, இசுலாம் மக்களுக்கோ உயிருக்கு ஆபத்து என்றாலோ வாய் மூடி
நடக்கட்டும், நடக்கட்டும் என்று கொல்லைப்புறமாக ஒதுங்கி வேடிக்கை பார்ப்பது மட்டுமல்லாமல்,
அடையாளம் தெரியாமல் இருக்க தலைக்கு முக்காடு இட்டுக்கொண்டு அப்பாவிகளை அழிக்க ஆயுதமும்
கொடுப்பார்கள்.200 வருட திட்டத்தின்படி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அப்படித்தான்.

சின்ன ராசு

Anonymous said...

Why the ibmu thahir come to say like that. Really what he want. I think he is not tamilan may be he is family friend for the rajabakse.

Ravathi said...

Nalla pathivu vaalthukkal .

Ravathi said...

Who is pj why said that here the ibnu shakir. Why we go to see him website. He is the funny guy.

Anonymous said...

இந்த மூன்று ஈழத்தமிழர்களின் குற்றங்களும் எந்த அளவுக்கு சாட்சி, ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டிருக்கின்றன
என்று தெரியவில்லை. ஆனால் ஒரு தனி நபரின் முடிவின் காரணமாக ஒட்டு மொத்த சமுதாயமும் முற்றிலுமாக
அழிக்கப்பட்டிருக்கும்பொழுது, அந்த சமுதாயம் சார்ந்த கோபமும் அதன் பழி வாங்கும் உணர்ச்சியையும்
நாம் கொச்சைபடுத்தமுடியாது. ஏனெனில் தனி நபரின்(அவர் ஒரு நாட்டின் அதிபராக இருந்தாலும் சரியே) நலத்தை விட ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலன் முக்கியம். பிரியங்கா கதறியது, ராகுல் அழுதது, சோனியா விதவையானதை விட ஈழ பெண்கள் பலர் விதவையானது, குழந்தைகள் அநாதையானது, வாழ்வாதாரங்களை இழந்து முழு சமுதாயமும் நடுத்தெருவுக்கு வந்தது அசாதாரணமானது என்பதை விட இந்தியாவின்
அசுரத்தனத்தால் விளைந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

இந்திய அரசுக்கு எதிராக செயல்பட்டார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு குற்றவாளிக்கூண்டில்
நிறுத்தப்பட்ட பல சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த மக்களுக்கு தாங்கள் விரும்பிய வக்கீல்களை
தங்கள் சார்பாக வாதாடக்கூட நியமிக்கப்படவில்லை. விசாரனையிளும்கூட பலவகையான
குழறுபடிகள்.

இப்படியே வல்லான் வகுத்ததுதான் வாழ்கை என்று நடத்தப்படும் இந்திய அரசியலுக்கு ஏற்பட்ட
கசப்பான அனுபவம்தான் பிரதமர் ராஜீவின் கொலை அல்லது பழி தீர்ப்பு.

தலித் மைந்தன்

PUTHIYATHENRAL said...

அன்புள்ள வாசகர்களே கருத்து சொன்னதற்கு நன்றி. உங்கள் கருத்துக்களை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆகவேதான் உங்களை நம்பி உங்களுக்கு கருத்து சுதந்திரம் கொடுத்துள்ளோம் அதனாலேயே அந்த கருத்துக்கள் எங்கள் பார்வைக்கு வராமலேயே பிரசுரம் ஆகும் வண்ணம் தானியங்கி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து ஒருத்தரை ஒருத்தர் தரக்குறைவாக பேசிக்கொள்ள வேண்டாம். நல்ல கருத்துக்களை பதியுங்கள் ஆரோக்கியமாக கருத்து பரிமாறி கொள்ளுங்கள். தமிழர் பண்பாடு பேணுங்கள். மதமாச்சாரியங்கள் ஒழித்து மனித நேயம் காப்போம்.

எந்த ஒரு மதத்தினர் மீதும் நமக்கு காழ்புணர்ச்சி இல்லை. சிறுபான்மையினர் செய்யும் குற்றங்களை, தவறுகளை, தப்புகளை, வெளிக்கொண்டுவர ஆயிரம் ஊடகங்கள் இருக்கின்றன. அதே நேரம் அவர்கள் செய்யாதவற்றையும், பிறர் செய்தததை அவர்கள் தலையில் போட்டும், சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை வெளியிடாமல் மறைத்து பெரும்பான்மையினருக்கு ஆதரவாக செயல்படும் ஒரு நிலை பெரும்பான்மையான ஊடகங்கள் செய்து வருகின்றன என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மையே!

இந்நிலையில் எல்லா ஊடகங்களும் செய்யும் அதே வேலையை நாமும் செய்யவேண்டாம் என்று நினைத்தே வெளிவராத சர்ச்சை கூறிய விஷயங்கள் குறித்தும் நாம் நமது பொதுவான கண்ணோட்டங்களை எழுதி வருகிறோம். மற்றபடி நாம் நடுநிலையோடு செயல்படுவதாகவே நம்புகிறோம். ஏதும் குறைகள் இருப்பின் சுட்டி காட்டவும். ஆசிரியருக்கு எழுதுங்கள். நன்றி வணக்கம்! நட்புடன் ஆசிரியர் புதியதென்றல். வருகை தந்தமைக்கு நன்றி! வணக்கம்!