Jul 26, 2011

இந்தியாவை பாதுகாக்க முஸ்லிம்களின் ராணுவம்!

JULY 27, கோழிக்கோடு:  கேரளாவில் நான்கு இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்த வருடம் புனலூர், சாவக்காடு, மஞ்சேரி மற்றும் தமரச்செரி ஆகிய நான்கு நகரங்களில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான சுதந்திர தின அணிவகுப்பு நடக்கும் என தெரிவித்துள்ளது.

வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாக என்ற முழக்கத்துடன் 2004 முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த அணிவகுப்பு மக்களிடையே சுதந்திரத்தை பாதுகாப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவர்களிடையே நம்பிக்கையை விதைக்கும் தேசிய உணர்வை ஏற்படுத்தும் என பாப்புலர் ப்ரண்ட் தலைமை தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சி எங்கு நடை பெற்றாலும் அது மதம் மற்றும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்ககூடியது அனைவராலும் விரும்பக்கூடிய நிகழ்ச்சியாகும்.  சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு வெறும் சம்பிரதாயமாக பார்க்கப்பட்ட ஒரு சில அரசு அலுவலங்களில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த சுதந்திர கொண்டாட்டம் அடித்தட்டு மக்களால் தற்போது கொண்டாடப் படுவதால் மிகவும் பிரபலமடைந்துள்ளது.

எனவே சுதந்திர தின கொண்டாட்டத்தையும் அணிவகுப்பையும் மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டும் என பாப்புலர் பிரான்ட் தலைமை மக்களை கேட்டுக்கொள்கிறது கேரளாவில் மட்டுமின்றி கர்நாடகா தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் கடந்த முன்று வருடங்களாக சுதந்திர தின கொண்டாட்டம் அணிவவகுப்பு ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது

No comments: