Jul 21, 2011

மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகள் குறித்து முக்கிய தகவல்!

மும்பை ஜூலை-22: மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் குண்டு வைத்ததாக கருதப்படும் நபரைக் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த விபரம் கிடைத்துள்ளதாக மஹாராஷ்ட்ரா மாநில தீவிரவாத தடுப்பு படை அறிவித்துள்ளது.

போலீஸ் தயார் செய்த வரைபடத்திலிருந்து முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் நாட்டின் மத்திய பகுதியையோ அல்லது வடக்கு பகுதியையோ சார்ந்தவராவார். இவரை பிடிக்க மத்தியபிரதேஷ், டெல்லி, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் போலீஸ் குழுக்களை அனுப்பியுள்ளதாக மூத்த ஏ.டி.எஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபரின் வரைபடத்தை குண்டுவெடிப்பு வழக்கை புலனாய்வு செய்துவரும் 12 குழுக்களில் தேர்வுச்செய்யப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கப்பட்டிருந்தது. விசாரணையின் ஒரு பகுதியாக ஒருலட்சத்திற்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் பரிசோதிக்கப் பட்டுள்ளன. இதில் சில எண்கள் கண்காணிப்பில் உள்ளன. மத்திய பிரதேசம், கொல்கத்தா ஆகிய இடங்களுக்கோ, குஜராத்திற்கோ சந்தேகத்திற் கிடமான தொலைபேசி அழைப்புகள் சென்றுள்ளன. மலோகேன் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியவர்கள் மும்பை குண்டு வெடிப்புகளையும் நடத்தி இருப்பார்கள் என்றே புலனாய்வுதுறை நம்புகிறது.

No comments: