May 26, 2011

குஜராத்தில் லஞ்சம், மது, ஊழல்!! அன்னா ஹசாரே அதிரடி!!

தனது கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்ட அன்னா ஹசாரே, குஜராத்தின் உண்மை நிலையை நேரில் கண்டு மனம்வெதும்பி அறிக்கை சமர்பித்தார்.

சிறிது நாட்களுக்கு முன் தன்னால் புகழப்பட்ட மனித மிருகம் நரேந்திர மோடியை குறித்து அன்ன ஹசாரே இப்பொழுது அதிர்ச்சி தகவல்களை அளித்துள்ளார்.

இந்தியாவிலேயே குஜராத்தில் 'தான்" அதிகமாக லஞ்ச ஊழல் உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் காந்தி பிறந்த இம்மண்ணில் காந்தி எதை ஒழிக்க பாடுபட்டாரோ அந்த மது விற்பனை காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றார்.

இந்த மாநிலத்தில், பால் விற்பனையை விட மது விற்பனைதான் அதிகமாக உள்ளது என கோபம் பொங்க தெரிவித்தார்.

லோக்பால் பில் தயாராக்குவதர்க்காக குஜராத்திற்கு வந்தார் அண்ணா ஹசாரே. அப்போது அவர் பொதுமக்களிடம் கையெழுத்துகள் சேகரித்தார்.

அச்சமயம் இவர் நரேந்திர மோடியை குறித்தும் குஜராத் மாநிலத்தை குறித்தும் அறிய முடிந்தது என்றும், "இவரை பற்றியா நான் பாராட்டினேன்?" என்றும் கவலை தெரிவித்தார்.

"என்னுடைய இந்த போராட்டம் வெற்றி கண்டவுடன், எனது அடுத்த போராட்டம் குஜராத்தை நோக்கியே அமைந்திருக்கும். காந்தியை கொன்ற இவர்களிடம் இருந்து குஜராத்தை கைப்பற்றுவதுதான் என்னுடைய அடுத்த லட்சியம்" என்றார்.

அன்னா ஹசறேயின் அடுத்த போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இனியாவது ஹிந்துத்துவா பிடியில் உள்ள பத்திரிக்கைகளின் பொய் செய்திகளை நம்பி "குஜராத்தில் முனேற்றம்" என்ற பிரச்சாரத்தை நல்லவர்கள் நிறுத்தி கொள்ளவேண்டும். இல்லையேல் நீங்களும் அவரைப்போல் வருத்தப்படுவீர்கள்.

அன்னா ஹசாரேயோடு இணைவோம் ஹிந்துதுவா பாசித்தையும், ஊழலையும் ஒழித்து நம் நாட்டை முனேற்ற பாதையில், அச்சமற்று மக்கள் வாழவழி செய்வோம்.

3 comments:

Anonymous said...

அருமையான பதிவு, வாழ்த்துக்கள்.

Anonymous said...

திருந்திய அண்ணா ஹசாறேக்கு வாத்துக்கள். ராஜபக்சே, மோடி இருவரும் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள். ராஜபக்சே ஸ்ரீலங்கா பயங்கரவாதி, மோடி இந்திய பயங்கரவாதி.

Anonymous said...

மோடியை பார்த்து பயங்கரவாதி என்று சொல்லாதீர்கள் அவர் முஸ்லிம்களை மட்டும் தானே கொல்கிறார், அதனால்தான் இந்த பார்ப்பன் பயங்கரவாத பத்திர்க்கைகள் அவரை துதி பாடுகின்றன.