May 26, 2011

நிர்வாண பூஜை!! இந்திய சாமியார் கைது!!

தோஷம் கழித்தல் என்கிற போர்வையில் பெண்களை பாலியல் உறவுக்கு உட்படுத்தி வந்த இந்திய சாமியார் ஒருவர் இலங்கையில் கைது செயப்பட்டுள்ளார்.

இலங்கை இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை என்ற ஊரில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்த சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது வயது 32 , இவர் இறக்குவானையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.

அந்த வீட்டில் வைத்து மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மாந்திரிக வேலைகளுக்காக வருபவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் வரை கட்டணமாக வசூளிந்துள்ளார்.

இவரைச் சந்திக்க பல இடங்களில் இருந்தும் பெண்கள் வந்துள்ளனர். இவர் அந்த பெண்களிடம் தோஷம் இருக்கின்றது, அதை கழிக்க வேண்டும் என கூறுவார்.

இதற்காக தனியாக பூசை அறைக்குள் அழைத்துச் செல்வார். அங்கு அந்த பெண்களை நிர்வாண பூஜை செய்யவேண்டும் அப்போதுதான் உனக்கு பிடித்த தோஷம் போகும், உன்குடும்பம் வளம்பெறும் என்று பொய் வார்த்தைகளை சொல்லி ஏமாற்றுவார்.

பின்னர் பெண்களை நிர்வாணமாக்கி எழுமிச்சம் பழத்தை வெட்டி சில மந்திரங்களை சொல்லி பூஜைகள் செய்வார் . பின்னர் பெண்களை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வார்.

இவரால் பலபெண்கள் சீரழிக்கப் பட்டுள்ளனர். இவரால் பாதிக்கப்பட்ட பெண்களில் மூவர் போலீஸ் இல் புகார் கொடுத்ததை அடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 comment:

பாரதசாரி said...

மக்களுக்கு அறிவு ம*றே இல்லையா?