May 19, 2011

இந்திய அரசியலில் இருந்து பாரதிய ஜனதாவுக்கு குட்பை!!

May 20, தமிழ் நாட்டில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளில் தமிழக மக்கள் குறிப்பாக இந்து இனவாதத்தை அடியோடு நிராகரிக்கும் மனப்பாங்கை துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்வி இதற்கு சிறந்த சான்று. அதன் முன்னிலை தலைவர்கள் டிபோசிட்டை இழந்தது தமிழ் நாட்டில் ஹிந்துத்துவா அரசியல் என்பது வெறும் கனவே என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.

தமிழகம், மற்றும் கேரளாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு சீட்டுகூட எடுக்க முடியவில்லை.
அதுபோல் மேற்குவங்கமும் இவர்களது மதவாத அரசியல் எடுபடவில்லை. இந்தியாவில் மக்களால் புறம்தள்ளபட்ட ஒரு கட்சியாக பாரதிய ஜனதா மாறியுள்ளது. இந்தியாவின் மதசார்பின்மை மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது.

மீண்டும் ஹிந்துத்துவா பாரதிய ஜனதா 5 வருடங்களிற்கு மாநில அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். பெரியாரும், அண்ணாவும், காமராஜரும் செய்த உழைப்புகள் வீண்போகவில்லை என்பதையே இது காட்டுகிறது.

இதில் முதல்வர் ஜெயலிதாவின் நடவடிக்கைகள் மீண்டும் சிறுபான்மை மக்களின் கோபங்களை கிளருவதாகவே உள்ளது. முஸ்லீம் சிறுபான்மை மக்களை ஒரு இனபடுகொலைக்கு உட்படுத்திய நரேந்திர மோடியை பதவி ஏற்ப்பு விழாவுக்கு அழைத்தது ஜெயலலிதாவின் மீது ஒரு நம்பிக்கை இன்மையை ஏற்படுத்துகிறது.

5 comments:

Anonymous said...

HOW DARE YOU CAN EXPECT JEYALALITHA TO STAND FAIR AND IMPARTIAL. SHE IS FROM BRAHMINICAL
(DIS)ORDER. SHE WILL CALL MODI FOR ANY PURPOSE?! WHY YOU GUYS JUMPING FOR NOTHING? NO USE.

YOU HAVE TO SWOLLOW THESE THINGS FOR MORE 4 YEARS. OR YOU HAVE TO ASK ALLAH FOR HER EARLY DEPARTURE FROM THIS WORLD WITH HER WHOLE PARIVAAR.

Anonymous said...

Narendra Modi invited Jayalalitha for his function..
Now, Jayalalitha invited Modi.
(this is for formal)

செய்தீ said...

இந்த வார ப்ளாக்கராக எங்கள் செய்தீ வலை செய்தித்தாளில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் !

PUTHIYATHENRAL said...

இந்த வார ப்ளாக்கராக உங்கள் செய்தீ வலை செய்தித்தாளில் சிந்திக்கவும்.காமை தேர்வு செய்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன். அன்புடன் ஆசிரியர் புதியதென்றல் ( சிந்திக்கவும்.காம்)

Anonymous said...

இந்திய அரசியலிலிருந்து BJP க்கு குட் பை யா ? அல்லது குப்பையா ? இரண்டுக்குமே தகுதியான வானரங்கள்தான். MOHAMED THAMEEM