Apr 18, 2011

காவிப்போர் – தேசத்திற்கு எதிரான போர்’!! குறும்படம்!!

ஏப்ரல் 19, லக்னோ:‘காவிப்போர் – தேசத்திற்கு எதிரான போர்’ எனும் தலைப்பில் குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது.

பிஜேபி-யின் லோக் சபா எம்.பி யோகி ஆதித்யனாத்தின் தீவிரவாத அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த குறும்படம் உத்திரபிரதேச பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திரையிடப்பட்டது.

இந்த குறும்படம் உத்திர பிரதேசத்தின் கிழக்கு பகுதியிலுள்ள ஹிந்துத்வா தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களது செயல்பாடுகளை வெளிக்கொணரும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.

படம் திரையிட்ட பின் நடந்த விவாதத்தில் சமூக சேவகர் டாக்டர். சந்தீப் பாண்டே கூறியதாவது; உத்திர பிரதேசத்தின் கிழக்குப் பகுதி முழுவதும் இது போன்று பல்வேறு சம்பவங்கள் நடைபெறுவதாகவும் இதை உத்திரபிரதேச அரசு கவனிக்க தவறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

யோகி ஆதித்யனாந்தும் அவரின் ஆதரவுடைய ஆர்.எஸ்.எஸ்-ன் பெண்கள் அமைப்பான ஹிந்து யுவா வாகினியும் தான் பல கலவரங்களுக்கும் படுகொலைகளுக்கும் காரணம் என தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் முஹம்மது சுஹைப் கூறுகையில்; “இந்த குறும்படம் ‘காவிப்போர்‘ ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினர் செய்யக் கூடிய தீவிரவாதத்தை மட்டும் காட்டாமல் எவ்வாறு தாழ்த்தப்பட்டவர்களும், ஹிந்து சமுதாயத்தின் பெண்களும், குழந்தைகளும் தீவிரவாதத்தின் பக்கம் இழுக்கப்படுகிறார்கள் என்பதை காட்டுகிறது” என தெரிவித்தார்.

லக்னோ பல்கழைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சாஜ்ஹியும், செயலாளரான பேராசிரியர் ரூப் ரேகாவர்மாவும் ஹிந்துத்வா தீவிரவாதம் உத்திர பிரதேசத்தின் கிழக்கு பகுதியை அச்சுறுத்துவதாக உள்ளது என தெரிவித்தனர்.

அயோத்யாவை சேர்ந்த கிஷோர் ஆதித்யநாத் இறையாண்மைக்கு எதிரான கலாச்சாரத்தை பரப்புவதாக தெரிவித்தார். மேலும் இந்த குறும்படம் உண்மை நிலையை விளக்குவதாக உள்ளது எனவும் கூறினார்.

சொராஹ்புதீன் என்னும் முஸ்லிம் இளைஞர் சிறிது நாட்களுக்கு முன்னர் காலிலாபாத் செல்லும் வழியில் ஆர்.எஸ்.எஸ்-ன் பெண்கள் அமைப்பான ஹிந்து யுவா வாகினியால் கொடூரமாக கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த காவிப்போர் குறும்படம் ஹிந்தியில் ராஜீவ் யாதவ், ஷாநவாஸ் மற்றும் லக்ஷ்மன் பிரசாத் ஆகியோரால் பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.

No comments: