
கலைஞர் இதுவரை மக்களுக்கு செய்த திட்டங்களுக்கும், செய்யபோகும் திட்டங்களுக்கும் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளிக்கிறார்கள்.
இதனால் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். எதிர் அணியினர் தாமரை இலை தண்ணீரும் போல உள்ளனர். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.
கோவையில் நடந்த தேர்தல் பிரசாரத்துக்கு விஜயகாந்த் செல்லவில்லை. இதுவே அவர்கள் கூட்டணி எவ்வாறு இருக்கிறது என்று தெரிகிறது. தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது என்றார்.
சிந்திக்கவும்: அட போங்க திருமா சார்!! உங்கள் தமிழ் உணர்வும்!! உங்கள் தலித் உணர்வும் மெய்சிலிர்க்க வைக்கிறது!! என்னமோ கருணாநிதி அவர் பாக்கெட்டில் இருந்து செலவழித்த மாதிரி எல்லாம் மக்கள் பணம்.
போங்க திருமா சார் காமடி பண்ணாதீங்கள் உங்களுக்கு ரொம்ப மறதி ஜாஸ்தி!! ஒரு ஏழை கருணாநிதி எப்படி இத்துணை பெரிய பணக்காரனாய்!! குடும்பமே பணக்காரர்களாக!! ஒரு மாறுதல் தேவை அம்புட்டுதேன். ஒரே ஆளே கொள்ளை அடித்தால் எப்படி?
1 comment:
Correct
Post a Comment