Apr 21, 2011

ஓட்டு எண்ணிக்கைக்கு தடைகோரினார்!! டிராபிக் ராமசாமி!!

APRIL 21, ஓட்டு எண்ணிக்கைக்கு தடைகோரி டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தேர்தலில் பணப்புழக்கம் இருந்ததால் மே 13ம் தேதி நடைபெறும் ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் பணம் அளித்த கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுதாரரின் புகாரில் எந்த ஒரு நபரின் பெயரையும் குறிப்பிடாததால் மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி மனுவை தள்ளுபடி செய்ததாக தெரிவித்தார்.

No comments: