எப்ரல் 19, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில், ஓட்டு எண்ணிக்கை தொடங்கி முடிவை தேர்தல் அதிகாரிகள் அறிவிக்கும் வரை துணை ராணுவ பாதுகாப்பு இருக்க வேண்டும்.
இதன் மூலம் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப் படவேண்டும். உரிய அடையாள அட்டை இல்லாமல் யார் ஓட்டு எண்ணும் இடத்துக்குள் நுழைந்தாலும் அவர்களை துணை ராணுவம் மூலம் தடுக்க வேண்டும்.
தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட தேர்தல் மேற்பார்வையாளர் முன்னிலையில்தான் ஓட்டு எண்ணிக்கை நடக்க வேண்டும்.
ஓட்டு எந்திரங்களில் சீல்களை அகற்றுவதில் இருந்து ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை அனைத்தையும் வீடியோ மூலம் படம் பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment