Apr 19, 2011

பழங்குடி மக்களுக்கு துரோகம் இழைக்கும் மோடி அரசு!!

போபால்: குஜராத் முஸ்லிம் இனப் படுகொலை புகழ் பயங்கரவாதி நரேந்திரமோடி பழங்குடியின மக்கள் மீது தாக்குதலை கட்டவிழ்த்து விடுவதாக நர்மதா பச்சாவோ அந்தோலான் தலைவர் மேதாபட்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிறுபான்மை சமூகத்தை கூட்டுப் படுகொலைச் செய்த ஹிந்துத்துவா மோடி அரசு, ஸர்தார் ஸரோவர் திட்டத்தில் நிலங்களை இழந்த பழங்குடியினருக்கு தற்போது துரோகமிழைப்பதாக மேதா பட்கர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

“சில பழங்குடியின பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகினர். ஆனால், அவர்களுக்கு புகார் அளிப்பதற்கு குஜராத்தில் இடமில்லை.

பலம் பிரயோகித்து நிலங்களை கைப்பற்றிய அரசு அவற்றை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவோ, வேறு வசிப்பிடங்களை அளிக்கவோ செய்யவில்லை.

மக்கள் நலத்திட்டங்களில் நாட்டமில்லாத மோடி அரசு கார்ப்பரேட் மாதிரி வளர்ச்சியைத்தான் பின்தொடர்கிறது” என மேதா கூறுகிறார்.

சட்டீஷ்கரில் பழங்குடியின மக்களின் நிலங்கள் ஏகபோக முதலாளிகளுக்காக ஆக்கிரமிக்கப்படுகிறது என மேதா குற்றஞ்சாட்டினார்.

No comments: