
ஆனால் தற்போது இந்த வைரஸைத்தான் நன்மை புரியும் மருந்தாக மாற்றும் முனைப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த வைரஸை புற்றுநோய்க்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் மேயோ கிளினிக் ஆய்வாளர்கள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். மீசல்ஸ் வைரஸ்கள் தாங்கள் தாக்கும் செல்லுக்குள் எப்படி நுழைகின்றன, வெளியேறுகின்றன என்பது தான் தங்கள் ஆய்வுக்கு அடிப்படை என்கின்றனர். அந்த ஆய்வு முடியும்போது புற்றுநோய்க்கு எதிரான போரில் ஒரு முக்கியமான ஆயுதம் பிறந்திருக்கும் என்று உறுதி தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment