
விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் இன்னும் பல முக்கிய இடங்களில் உள்ள பெயர் பலகையில் அஹமதாபாத் என்பதை அழித்து அமதாவாத் என்று ஒரே இரவில் மாற்றப்பட்டுள்ளது. தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் உறுப்பினரான இந்த நகரத்தின் மேயர் அசிட் வோரா இதற்கான எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. வேண்டு மென்றே முஸ்லிம்களின் பாரம்பரியத்தை அழிக்க வேண்டும் என்றும், முஸ்லிம்களை இந்நகரத்தை விட்டு ஒதுக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் 600 ஆண்டுகாலம் பழமைவாய்ந்த நகரத்தின் பெயரை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது பா.ஜ.க அரசு. 20 சதவிகிதம் முஸ்லிம் மக்கள் தொகையை கொண்ட அஹமதாபாத் நகரம் ஜவுளி பாரம்பரியத்தில் தலைசிறந்து விளங்க கூடிய ஒரு நகரமாக திகழ்கிறது.
1987 ஆம் ஆண்டு அஹமதாபாத் நகரத்தை கைப்பற்றிய ஹிந்துத்துவ தீவிரவாதிகள் அன்றிலிருந்து இதன் பெயரை மாற்ற வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர். அவர்களோடு தொடர்புடைய தீவிரவாத அமைப்புகளான பா.ஜ.க, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ஏனைய அமைப்புகள் ஒன்று சேர்ந்து நகரத்தின் பெயரை கர்னாவதி என்று மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். மஹாபாரதத்தின் கதாபாத்திரமான கர்ணன் தான் இந்நகரத்தை தோற்றுவித்தார் என்று நம்புவதாக கூறுகிறார்கள்.
ஆனால் மாநிலத்தை ஆளும் பா.ஜ.க அரசுக்கு அதிக ஆதரவு இருப்பதாலும், வலுவான சக்திமிக்க சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் இல்லாததால் இதனை எதிர்க்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. 2002 குஜராத் இனப்படுகொலையின் மூலம் முஸ்லிம்களை கருவருத்த ஹிந்துத்துவா தீவிரவாதி நரேந்திர மோடி தற்போது முஸ்லிம்களின் பாரம்பரியத்தை அழிக்கவும் அவர்களை நகரத்தை விட்டு வெளியேற்றவும் தந்திரமாக செயல்பட்டு வருகிறார் என்பது பட்டவர்த்தனமாக விளங்குகிறது. இதனை விமர்சித்த மக்களின் குடியியல் விடுதலை சங்கத்தின் (PUCL) தலைவர் ஜே.எஸ்.பந்துக்வாலா கூறுகையில், இத்தகைய செயல் பா.ஜ.க மற்று ஆர்.எஸ். எஸ்ஸின் முஸ்லிம் விரோத போக்கை தெளிவுபடுத்துகிறது என்றார். முஸ்லிம் பெயரையோ அல்லது முஸ்லிம் பெயர்களில் இருக்கும் பாரம்பரியத்தையோ ஒருபோதும் இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
ஆனால் முஸ்லிம்கள் இந்தியாவில் வாழக்கூடிய இரண்டாவது மிகப்பெரிய சமூகம் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள். இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். இந்தியாவில் இருந்து ஒரு போதும் வெளியேறமாட்டோம்! நாம் இங்கே வசிப்பதற்க்காகத்தான் இருக்கின்றோம். முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்வதற்கு காவிகளிடமிருந்து நன்மதிப்பு தேவை என்ற எந்த அவசியமும் இல்லை என்று மேலும் அவர் கூறினார்.
ஜாபிர் மன்சூரி என்ற சமூக ஆர்வலர் கூறும் போது, இத்தகைய வகுப்புவாத செயல்கள் நாட்டின் முன்னேற்றத்திற்க்கு பெறும் ஆபத்தை விளைவிக்கும் என்றார். முஸ்லிம் பெயர்களை மாற்றுவதினால், முஸ்லிம்களை நகரத்திலிருந்து வெளியேற்றி விடலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார்கள். இத்தகைய செயல்களினால் முஸ்லிம்கள் வெளியேறப் போவது மில்லை, அவர்களுக்கும் இந்நகரத்திற்கும் உள்ள தொடர்பு முறிந்துவிடப் போவதுமில்லை என்று கூறினார். ஆயிரக்கணக்கான அடையாள சின்னங்கள், மஸ்ஜிதுகள் மற்றும் இந்நகரத்தை தோற்றுவித்த அகமது ஷா அவர்களால் கட்டப்பட்ட கோட்டைகள் உள்ளது. இத்தகைய வரலாற்று சின்னங்களை இவர்களால் ஒருபோதும் அழித்துவிட முடியாது என்று கூறினார். சமீபகாலமாக பல நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகிறது. பாம்பே, மெட்ராஸ், திருவனந்தபுரம், கல்கத்தா, பெங்களூர், காலிகட் போன்ற நகரங்களின் பெயர்கள் அரசியல்வாதிகளால் ஹிந்துத்துவவாதிகளின் கோரிக்கைக்கு ஏற்ப மாற்றப்பட்டு வருகிறது. குஜராத்தில் உள்ள பரோடா என்ற நகரம் வதோதரா என்ற மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி: TWO CIRCLES
தமிழில்: முத்து
No comments:
Post a Comment