Jan 4, 2011

நித்யானந்தா சாமியும், நடிகை ரஞ்சிதாவும்!! வீடியோ உண்மையானது.

நித்யானந்தா சாமியும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ படம் கடந்த வருடம் டி.வி. சேனல்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. நித்யானந்தாவை போலீசார் கைது செய்தனர். ரஞ்சிதா தலைமறைவானார். வெளிநாட்டுக்கு தப்பி சென்றதாக கூறப்பட்டது. தற்போது பலமாத இடைவெளிக்கு பின் திடீரென்று ராம்நகர் கோர்ட்டில் ஆஜராகி ஆபாச வீடியோவை வெளியிட்டு தன்னை இழிவு படுத்தியதாக ரஞ்சிதா வழக்கு தொடர்ந்துள்ளார்.

வீடியோவில் இருப்பது நான் அல்ல என்றும் மறுத்துள்ளார். அது வேறு பெண் என்று கூறி உள்ளார். நித்யானந்தாவும் ஆபாச வீடியோ படம் உண்மையானது அல்ல என்று கூறியுள்ளார். மார்பிங் முறையில் தனது உருவத்தை பொருத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இதனால் இவ்வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது. ஆபாச வீடியோ வழக்கை விசாரித்து வந்த கர்நாடக சி.ஐ.டி. போலீசாரும் ரஞ்சிதாவின் திடீர் பேட்டியால் குழம்பியுள்ளனர். அவர்கள் முன்னிலையில் ஆஜராகியும் ஆபாச சி.டி. போலி என்று வாக்குமூலம் அளித்துள்ளார். நித்யானந்தா கேட்டுக்கொண்டதால் இதுவரை சி.டி. பற்றி கருத்து சொல்லாமல் இருந்தேன் என்றும் கூறி உள்ளார். இந்த நிலையில் நித்யானந்தா- ரஞ்சிதா ஆபாச வீடியோ படம் உண்மையானது என்று தடய அறிவியல் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த துறையின் அதிகாரிகள் கூறியதாவது:- ரஞ்சிதா- நித்யானந்தா ஆபாச வீடியோ பட சி.டி. ஐதராபாத்தில் உள்ள தடய அறிவியல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பப்பட்டது. இதுபோல் சண்டிகாரில் உள்ள தடய அறிவியல் விஞ்ஞான கூடத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் சி.டி. உண்மையானது என தெரிய வந்தது. வீடியோவில் உள்ள போட்டோவும் சோதனை கூடத்தில் பரிசோதிக்கப்பட்டது. அதில் இருப்பது ரஞ்சிதா, நித்யானந்தாதான் என உறுதிப்படுத்தப்பட்டது. அவை போலி என்று ரஞ்சிதா திடீரென பேட்டி அளித்து இருப்பது பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

No comments: