Jan 11, 2011

பணிப் பெண்ணை தாக்கிய எஜமானிக்கு 3 வருடம் சிறைத்தண்டனை.


தனது வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய இந்தோனேசிய பெண்ணொருவரை மோசமாக தாக்கி, சூடுவைத்த சவூதி நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு மெதீனா நகர நீதிமன்றம் 3 வருட காலம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான 23 வயது பெண் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இந்தோனேசிய ஜனாதிபதி சுசீலோ மாம்பாங் தனது நாட்டு பிரஜைக்கு உடனடியாக நீதி வேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில் கடந்தவாரம் இப்பெண்ணின் எஜமானிக்கு 3 வருட சிறைத்தண்டனை வழங்கி மெதீனா நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இவ்விடயம் தொடர்பில் சவூதி அரசாங்கம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தது. ஒ இவர்கள் பரவாயில்லையே நம்ம நாட்டில் பெரும் கலவரங்களை நடத்தி ஆயிர கணக்கில் மக்களை கொன்று குவித்த சங்கபரிவாரும் அதன் தலைவர்களும் சுதந்திரமாக நடமாட முடிக்றதே? நம் நீதிமான்கள் படம் படிப்பார்களா?.

No comments: