Nov 3, 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பும்! முஸ்லிம் சமுதாயமும்!

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பும்!முஸ்லிம் சமுதாயமும்!

இந்திய தேசத்தின் தீர்ப்பா?
இல்லை!
இந்துத்துவத்தின் மீதான ஈர்ப்பு!

புராணங்களும் புரட்டுக்களும் ஆதாரமாம்!
அந்தோ!!
வரலாற்றுக்கு நேர்ந்தது அவமானம்!

சரிசம பங்கீடாம்!
இது கரிசனமா?
இல்லை களவாணித்தனமா?

அரசியல் சாசனத்தின் கல்லறை மீது
அரியாசனம் போட்டு அமர்ந்துள்ளது
ஹிந்துத்துவா பாசிசம்!

கட்டப்பஞ்சாயத்து தீர்ப்புக்கு
கட்டுப்படவேண்டும் என
கட்டளையிடுகிறது
கபோதிகள் கூட்டம்!

சமரசம் என்ற போர்வையில்
சங்க்பரிவாருக்கு
சாமரம் வீசத்துணிந்துள்ளனர்
சமுதாயத்துரோகிகள் சிலர்!

சலசலப்புக்கு அஞ்சுவதும்
சண்டாளர்களுக்கு சல்யூட் அடிப்பதும்
சரித்திர நாயகர்களின் பண்பல்ல!

கதிகலங்கவில்லை கர்ம வீரர்கள்!
அவர்கள்
காத்திருப்பது களமிறங்கத்தான்!

எங்களின் மயான அமைதிக்கு
கோழைத்தனம் என்பது பொருளல்ல!
குமுறும் எரிமலை நாங்கள்!

அக்னி பிழம்பாய்!
சுழன்று வீசும் சூறாவளியாய்!
கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளமாய்!
சுட்டெரிக்கும் சூரியனாய்!
கிளர்ந்தெழுவோம் ஒருநாள்!

எங்களின்
உணர்ச்சிகள் என்றென்றும்
உருக்குலையாது!


-ஆயிஷா மைந்தன்

No comments: