
சிந்திக்கவும்: அமெரிக்காவிடம் இருந்து பாடம் கற்க்குமா இந்தியா? போலி மதசார்பின்மை பேசித்திரியும் இந்தியா அந்த நாட்டில் முஸ்லிம்களின் 500 வருடகால புராண மசூதியை சங்கபரிவார் ஹிந்து தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் உடைத்து நொறுக்கியது, கல்வி, வேலைவாய்ப்பு , எல்லா துறைகளிலும் ஒரு ஒடுக்கபட்ட சமூகமாக முஸ்லிம்கள் இருந்து வருவதை பார்க்க முடிகிறது. என்று இந்தியாவில் எல்லா குடிமக்களும் சமமாக நடத்த படுகிறார்களோ அப்போதுதான் இந்தியா ஒரே தேசமாக இருக்க முடியும். இல்லையேல் மீண்டும் ஒரு பிரிவினைவாதம் இந்தியாவில் தலைதூக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை .
இந்த நிலையில் இரட்டைக் கோபுர தாக்குதல் சம்பவ நினைவு தினத்தையொட்டி அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஒபாமா கூறியதாவது.நியூயார்க் மசூதி விவகாரம் குறித்து நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அவரது மதத்தை சுதந்திரமாக பின்பற்ற அனைத்து உரிமைகளும் உள்ளது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது அமெரிக்கா .
இந்த பூமியில் உருவாக்கப்பட்ட அனைத்து ஆண்களும், பெண்களும் சமமானவர்களே. அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளன. அனைவரும் அவரவர் மதத்தை சுதந்திரமாக கடைப்பிடிக்கலாம். ஒரு இடத்தில் உங்களால் சர்ச் கட்ட முடியும்போது, ஒரு யூத ஆலயம் கட்ட முடிகிறபோது, ஒரு இந்துக் கோவிலை கட்ட முடியும் என்கிறபோது, ஏன் ஒரு மசூதியையும் கட்ட முடியாது.
செப்டம்பர் 11 சம்பவத்தில் பலியான அனைவருக்காகவும் நான் அனுதாபப்டுகிறேன். அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களை நான் முன்பு சந்தித்துள்ளேன். அவர்களது இழப்பும், துயரமும் நீண்டது, அவ்வளவு சீக்கிரம் அடங்க முடியாதது என்பதை நான் உணர்கிறேன், அவர்களது சோகத்தில் நானும் பங்கேற்கிறேன். அனைத்து அமெரிக்கர்களும் இந்தசோகத்தில் பங்கேற்கின்றனர் என்றார் ஒபாமா.
No comments:
Post a Comment