Jun 13, 2010

பெரியார் திராவிடர் கழக மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசுவின் வீடு தாக்கப்பட்டது: ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளா? போலீஸ் தீவிரவிசாரணை.

சென்னை: பல்வேறு தடைகளை மீறி தந்தை பெரியார் குறித்த நூல் தொகுப்பை உருவாக்கி சமீபத்தில் வெளியிட்ட பெரியார் திராவிடர் கழக மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசுவின் வீடு தாக்கப்பட்டது. பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டு தாக்குதல் நடத்தியுள்ளது ஒரு கும்பல்.சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தங்கராசுவின் வீடு உள்ளது. இவரது மகன் புகழேந்தி. இவர் செய்தி- மக்கள் தொடர்புத் துறையின் துணை இயக்குநர் ஆவார். வீட்டிற்கு வந்த அவர் காரை நிறுத்தி விட்டு உள்ளே போனதும் ஒருகும்பல் பாறாங்கல்லைப் போட்டுத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை நடத்த்தியது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். இது கூறித்து தீவிரவிசாரணை நடத்தப்படுவாதாக கூறினார்.

No comments: