Jan 8, 2010

புகை பிடித்தால் ரூ. 1 கோடி அபராதம்: டுபாய்


புகை பிடிப்பது மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஐக்கிய அரசு எமிரேட் அரசு, இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் அதிபர் ஷேக் கலிபா பின் சயீது, புகை பிடிப்பது மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும், புதிய சட்ட விதிமுறைகளில் கையெ ழுத்திட்டுள்ளார்.இதன்படி, பொது இடங்களில் புகை பிடிப்போர் மற்றும் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு புகையிலைப் பொருட்களை விற்போருக்கு 1.2 கோடி ரூபாய் வரை அபராதமும், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

மேலும், புகையிலைப் பொருட்களை விற்பதற்கு வழங்கப்பட்ட உரிமமும் ரத்து செய்யப் படும்.கபே போன்ற இடங்களில் புகையிலைப் பொருட்களை விற்பதற்கு உரிமம் அளிக்கப்படாது. 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இருக் கும் காருக்குள், மற்றவர்கள் புகைபிடிப்பதும் குற்றமாக கருதப்படும். அதேபோல், புகையிலைப் பொருட்கள் தொடர் பான விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்படும்.இவ்வாறு அரசு அறிவித்துள்ளது.

No comments: