Jan 8, 2010

உலக அழிவு நாளின் அறிகுறிகள்


போர்த்துகீஸிய நாடாளுமன்றம், அந்நாட்டில் வாழும் ஆண் மற்றும் பெண் ஒருபால் உறவுக்காரர்களுக்கு இடையிலான திருமணத்தை அனுமதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதன் மூலம் தீவிர ரோமன் கத்தோலிக்க நாடான போர்த்துகல், ஒருபால் உறவுக்காரகளின் திருமண பந்தத்தை அங்கீகரிக்கும் ஐரோப்பிய நாடுகளின் பட்டியலில் ஆறாவது நாடாக இணைந்திருக்கிறது.

இந்த சட்டமானது, தேவையற்ற வேதனையை அளித்துவந்த ஒரு அநீதியை சரிப்படுத்தும் ஒன்றாக இருக்கும் என்று போர்த்துகீஸியப் பிரதமர் ஹோஸே சாக்ரடீஸ் அவர்கள் கூறியுள்ளார்.

அதேசமயம் இந்த சட்டமானது, ஆண் மற்றும் பெண் ஒருபாலுறவுக்கார தம்பதிகள் மற்ற குழந்தைகளை தத்தெடுக்க அனுமதிக்கவில்லை. இதுபோன்ற தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு மற்ற சில நாடுகள் அனுமதிக்கின்றன.

இந்த சட்டத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி அனுமதி அளிக்கும் பட்சத்தில், ஒருபால் உறவுக்காரர்களின் திருமண பந்தத்தை எதிர்க்கும் பாப்பரசர் பெனடிக்ட் அவர்களின் போர்த்துகல் வருகைக்கு முன்பே இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்.

No comments: