Sep 13, 2014

YAHOO மற்றும் GOOGLE வந்த சோதனை!

Sep 14/14: அமெரிக்க உளவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காவிட்டால், இணையதள நிறுவனமான, 'யாகூ'வுக்கு, நாள் ஒன்றுக்கு, 1.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ராணுவம் மற்றும் வெளியுறவுத் துறை ரகசியங்களை இணையதளம் மூலம் அம்பலப்படுத்தினார், எட்வர்ட் ஸ்னோடென் என்ற அமெரிக்க உளவுத்துறை அதிகாரி. அதையடுத்து, உலகம் முழுவதும் உள்ள இணையதளங்களை உளவு பார்க்கத் துவங்கிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு துறை, அது குறித்த தகவல்களை, அவ்வப்போது, யாகூ மற்றும் கூகுள் இணையதளங்களிடம் கேட்டு பெறுகிறது.

இவ்வாறு கொடுப்பது தன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது போன்றதாகும் என தெரிவித்து, அந்தத் தகவல்களை வழங்க, யாகூ மறுத்தது. இதனால் கோபமடைந்த அமெரிக்க உளவுப்பிரிவு கண்காணிப்பு கோர்ட், 'எத்தனை நாட்களுக்கு ஒத்துழைக்கவில்லையோ, அத்தனை நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு, ஒன்றரை கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்படும்' என, யாகூவை மிரட்டியது.இதையடுத்து, வேறு வழியில்லாமல், யாகூ இணையதளம், அந்த தகவல்களை வழங்கியதாக, அதன் வழக்கறிஞர், ரோன் பெல், தன் இணையதள பக்கத்தில் எழுதியுள்ளார்.

No comments: