Oct 25, 2013

கட்ச்ச தீவை மோடி மீட்ப்பார் தமிழக மீனவர்களை காப்பார்!

அக் 26/2013: இனப் படுகொலை நாடான இலங்கையில் பொதுநல நாடுகள் மன்ற மாநாட்டை நடத்தாதே என்று வலியுறுத்தி இன்று (25.10.2013) காலை 10.00 மணியளவில் சாசுத்திரி பவன் மற்றும் இங்கிலந்து துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டத்தை  மே பதினேழு இயக்கம் ஒருகிணைப்பாளர் திருமுருகன் தலைமை யேற்றார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்  பெ.மணியரசன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்  மல்லை சத்தியா, விடுதலை சிறுத்தைகள்தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொழிலாளர்கள் அணி பொதுச் செயலாளர் சைதை சிவா, மனிதநேய மக்கள் கட்சி மாணவரணி மாநிலச் செயலாலர் தோழர் அனிஸ், சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) துணைப் பொதுச் செயலாளர் அம்சா, தமிழக மக்கள் சனநாயக கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் ஆதிதிராவிடன், திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிகுமரன், தோழர் சிவகாளிதாசன், மக்கள் விடுதலை இயக்கத் தலைவர் இரவி, உயிரிதுளிகள் இயக்கம் முகிலன், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் சிபி உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் திரளானோர் பங்கேற்று கைதாகி கிரீம்சு சாலை அருகில் மண்டபத்தில் வைக்கப் பட்டுள்ளனர்.

சிந்திக்கவும்: ஈழத்தமிழ்  மக்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை புத்தர் நூற்றாண்டு விழாவிற்கு பாரதிய ஜனதாவின் சுஸ்மா சுவராஜ் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் இந்தியாவிற்கு வந்த ராஜபக்சேவுக்கு கோவில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்ப்பாடு செய்தது கொடுத்தது ஹிந்துத்துவா கூட்டம். இப்பொழுது மோடி கட்ச்ச தீவை  மீட்ப்பார் தமிழக மீனவர்களை காப்பார் என்று கதை விடுகிறார்கள்.

No comments: