Oct 21, 2013

அரசு பயங்கரவாத நடவடிக்கைகளின் சூத்திரதாரி வாக்குமூலம்!

OCT 22/2013: நான்கு போலி மோதல் கொலை வழக்குகளில் கைது செயப்பட்டு, பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் குஜராத் அரசின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜி. வன்சாரா, சபர்மதி சிறையிலிருந்து குஜராத் அரசிற்கு அனுப்பியிருக்கும் பதவி விலகல் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். 

சுயநலமும் அதிகாரவெறியும் கொண்ட கீழ்த்தரமான கிரிமினல் பேர்வழிதான் மோடி” என்பதை எடுத்துக்காட்டுவதாக அந்த கடிதம் அமைந்துள்ளது.  நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற பின், குஜராத் போலீஸில்  தனிக்காட்டு ராஜாவாக திகழ்ந்தவர் தான் இவர்.

மோடியின்  தொண்டனாக இருந்து சேவை செய்த இவர் குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனபடுகொலை மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு போலி என்கவுண்டர்கள் ஆகியவற்றை திட்டமிட்டு நடத்தியவர். தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில் முஸ்லீம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசு பயங்கரவாத நடவடிக்கைகளின் சூத்திரதாரியாக செயல்பட்டவர். இப்படிப்பட்ட இவர் தனது பதவி விலகல் கடிதத்தை சுய வாக்குமூலம் போல அளித்துள்ளார்.

‘‘குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு தொடங்கி 2006-ஆம் ஆண்டு வரையிலும் நடந்துள்ள ‘மோதல்’படுகொலைகள் அனைத்தும் மோடி அரசிற்குத் தெரிந்துதான் நடந்தன; மோடி அரசின் ஊக்குவிப்பு மற்றும் வழிகாட்டுதல்கள் அடிப்படையில்தான் இவைகள் நடத்தப்பட்டன என்று வன்சாரா தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இவரை போன்றே மோடியின் கொலைபாதக செயல்களுக்கு உறுதுணையாக இருந்த குஜராத் அரசின் முன்னாள் துணை உள்துறை அமைச்சர் அமித் ஷா, மோடியின் தயவால் மூன்றே மாதத்தில் பிணையில் வந்து விட்டார். ஆனால் தான் மட்டும் ஏழு வருடங்களாகக் கம்பி எண்ணிக் கொண்டிருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் காலதாமதமாக இப்பொழுது உண்மைகளை உரைத்திருக்கிறார்.
*மலர் விழி*

No comments: