Sep 28/2013: நரேந்திரமோடிக்கு மக்கள் நலனைவிட நாற்காலி மீதான ஆசை அதிகமாகி உள்ளது. இவர் குஜராத் மாநில முதல் மந்திரியாக பதவியில் நீடிக்கிறாரா? என தெரியவில்லை.
குஜராத்தில் கடுமையான வெள்ள சேதம் ஏற்பட்டு மக்கள் தத்தளிக்கின்றனர். குஜராத் மாநில மக்களை காப்பாற்ற வேண்டிய பணிகளை செய்யவில்லை. மக்கள் பற்றி அக்கறையில்லாமல் திருச்சியில் பேசுகிறார். அவருக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. அதைவிட நாற்காலி மீதான ஆசை அதிகமாகி உள்ளது.
வெள்ளத்தால் அவர் முதல் அமைச்சராக இருக்கும் மாநில மக்கள் தவிக்கும் போது இவர் அதைப்பற்றி கவலைப்படாமல் பதவி கனவில் ஊர் ஊராக சுற்றுப்பயணம் செல்கிறார். மதவாத அரசியலை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் முலம் பா.ஜனதாவுக்கு பின்னடைவு தான். இது பாரதீய ஜனதாவில் பலருக்கு பிடிக்கவில்லை. சிலர் வெளிப்படையாக தெரிவிக்கின்றனர். வேறு சிலர் மனதளவில் தவிக்கின்றனர்.
2 comments:
unmaithaan....
பி.ஜே.பி. என்றால் மதவாத அரசியல், முஸ்லிம் லீக், பாபுலர் ப்ரோன்ட் ,காங்கிரஸ் திராவிட கட்சிகள் என்றால் மத சார்பற்ற அரசியல்.என்னதான் கரடியாக கதறி, எழுதினாலும் உங்கள் "மதசார்பற்ற " குந்தாணியை தமிழக மக்கள் இனிமேல் நம்பமாட்டார்கள். அவர்கள் விழித்துக்கொண்டு வெகுநாளாயிற்று.
Post a Comment