Apr 22, 2013

பிளஸ் டூ மாணவர்களுக்கு சில டிப்ஸ்!

ஏப்ரல் 23/2013: பிளஸ் டூ முடித்தவுடன் அடுத்து என்ன படிப்பது? பொதுவே எந்த துறையில் படிப்பது என்கிற சந்தேகம் மாணவர்களுக்கு ஏற்ப்படும்.

எந்த துறையில் படித்தால் வேலை வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என்கிற எண்ணமும், படித்த படிப்பினை கொண்டு நல்ல வேலையில் சேர முடியுமா? என்கிற பயமும் இயல்பாக ஏற்ப்படும்.

முன்பு எல்லோரும் சொப்ட்வெர் இஞ்சினியர் படிப்பில் அதிக வேலை  வாய்ப்புகள் உண்டு என்று எல்லோரும் அதே துறையை படித்து அந்த துறையில் மிகுந்த போட்டியும், மந்தநிலையம்  நிலவுகிறது.

இப்பொழுது அதிக வேலை வாய்ப்புகளை அள்ளி தரக்கூடிய துறையாக  பெட்ரோலியம் இன்ஜினியரிங், ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங், மரைன் இன்ஜினியரிங், நேனோ இன்ஜினியரிங் போன்ற துறைகள் விளங்குகின்றன.

பெட்ரோலியம் இன்ஜினியரிங்: கச்சா எண்ணெயை பெறுவதற்கான புதிய வழிகள் மற்றும் எரிபொருள் உற்பத்தி தொடர்பான விசயங்கள். எண்ணெய் வளத்தை கண்டுபிடிப்பது, பெட்ரோல் மற்றும் எரிவாயுவை பிரித்தெடுப்பது போன்றவற்றை இத்துறை கற்றுத்தருகிறது

ஏரோ நாட்டிக்கல் இஞ்சினியரிங்: விமானம் வடிவைப்பு மற்றும் தொழில் நுட்பம் தான் ஏரோ நாட்டிகல் படிப்பாகும். ஏரோ நாட்டிக்கல்  இறுதியாண்டு படிக்கும் போதே வேலை உறுதி செய்யப்பட்டு விடும் அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படிப்பாக இது திகழ்கிறது. பல நாடுகளில் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியர்கள் தேவையாக உள்ளனர். 

மரைன் இஞ்சினியரிங்: இந்திய வர்த்தகத்தில் பெரும் பகுதி கடல் சார்ந்தே நடக்கிறது. மெரைன் இஞ்சினியரிங் என்பது கப்பல் இயங்கும் முறையை, மற்றும் தொழில் நுட்பங்களை கற்று தருவதாகும்.   இத்துறை பயின்றவர்களுக்கு இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அதிக அளவிலான வேலை வாய்ப்புக்கள் உண்டு.

நேனோ இஞ்சினியரிங்:  நேனோ என்பது நீளத்தை அளக்கும் ஒரு அளவு கோல், ஒரு மைக்ரோ மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கை நேனோ மீட்டர் என்று சொல்லலாம். நேனோ மீட்டர் அளவில் இருக்கும் பொருள்களை வைத்து செய்யும் தொழில் நுட்பத்தை சுருக்கமாக நேனோ டெக்னாலஜி என்று சொல்கிறார்கள். உதாரணமாக பெரிய அளவிலான பொருட்களை சுருக்கி மிக சிறியவடிவில் செய்வதை கூட நேனோ டெக்னாலஜி என்று சொல்லலாம். இந்த படிப்பும் அதிக வேலை வாய்ப்புகளை பெற்று தர கூடியது.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நான்கு துறைகளும் நல்ல துறைகளே... நன்றி...

பகிர்கிறேன்... g+