Nov 28, 2012

ஏன் இந்த வேண்டாத வேலை!


Nov 29: சர்ச்சைக்குரிய காட்சிகளை ‘துப்பாக்கி’ படத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவை, ஜமாதுல் உலமா சபையின் தலைவர் மெளலவி அப்துற்றஹ்மான் தலைமையில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
 
இதுத் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மதச்சார்பற்ற கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், சிறுபான்மையினரின் நலன் காத்திடும் வகையிலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. துப்பாக்கி’ திரைப்படத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், இக்காட்சிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் இஸ்லாமிய அமைப்புகள் கோரின.
 
இதனை அறிந்த முதலமைச்சர், தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு அளித்த உத்திரவினையடுத்து, அரசு உள்துறை செயலாளர், திரைப்படத்தின் நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் தாணு, விஜய்யின் தந்தை சந்திரசேகரன் ஆகியோரை 15.11.2012 அன்று அழைத்து, திரைப்படத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களின் மனம் புண்படும்படி உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை தவிர்க்கும்படியும், இது சம்பந்தமாக இஸ்லாமிய சமூக அமைப்புகளை சார்ந்தவர்களுடன் பேசும்படியும் அறிவுறுத்தினார்.
 
முதலமைச்சரின் உடனடி நடவடிக்கையினால் துப்பாக்கி படக்குழுவினர், இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் விவாதித்து, திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கினார்கள். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவை, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் இன்று (28.11.2012) தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, முதலமைச்சர் எடுத்த விரைவு நடவடிக்கையினால், இஸ்லாமிய சமுதாயத்தை பற்றிய சர்ச்சைக்குரிய காட்சிகள் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு, தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.
 
சிந்திக்கவும்: முஸ்லிம்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. பாபர் மசூதி இடிப்பிற்கு தமிழகத்தில் இருந்து ஆள் அனுப்பியவர்தான் நமது ஜெயா அம்மையார். அதுமட்டுமா குஜராத் இனப்படுகொலை பயங்கரவாதி மோடிக்கு விருந்து அளித்து உபசரித்தவர். துப்பாக்கி படத்தில் இருந்து காட்சிகளை நீக்குவதால் அவருக்கு ஒன்றும் குறைவு ஏற்படாது. இதே கோரிக்கைகளை வேறு விடயங்களுக்கு வைத்து பாருங்கள் அப்பொழுது தெரியும் உண்மை முகம். அரசியலில் இதுவெல்லாம் சகஜம் ஐயா! அம்மாவின் இந்த நடவடிக்கையை கண்டு ரொம்பவும் மெய் சிலிர்த்துடாதீன்கள். இப்படித்தான் கருணாநிதியை தலையில் வைத்து கொண்டாடினீர்கள் இப்பொழுது ஜெயாவா?
*மலர் விழி*

3 comments:

Anonymous said...

அரசியல்வாதிகளின் காமடியை புரிந்து கொண்டால் சரி.

Easy (EZ) Editorial Calendar said...

நம் மக்களுக்கு சிந்திக்கும் திறன் கொஞ்சம் இருந்தால் கூட நம் நாடு எப்போவோ பசுமையான, அழகான நாடாக மாறியிருக்கும்.......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Anonymous said...

சரியாக சொன்னீர்கள் .... சில சம்யங்களில் எல்லாம் சரி என்ற தொன்றுகிறது...ஆனால் .அதை பற்றி பல கருத்துகளையும் படிக்கும் பொழ்துதான் புறிகிறது..